search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T Rajendar"

    • நடிகர் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர்.
    • டி.ராஜேந்தர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் டி. ராஜேந்தர். இவர் நடிகர் சிலம்பரசனின் தந்தை ஆவார். டி. ராஜேந்தருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

    சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் வெளிநாட்டிலே ஒரு மாத காலம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன் தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். 

    நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனின் திருமணத்திற்கு ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். #Kuralarasan #Rajinikanth
    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். மேலும் இவருடன் குறளரசனும் சென்றிந்தார்.

    சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய குரளரசன், இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். 



    நேற்று தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தை சந்தித்து அழைப்பிதழை டி.ராஜேந்தர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajini #Kuralarasan #TRajendar
    நடிகர் சிம்பு நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவரது தம்பி குறளரசன், சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். #STR #Kuralarasan
    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 26-ந் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

    குரளரசன் இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவர் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இதுகுறித்து குறளரசனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,



    ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, புன்முறுவலுடன் பதிலளித்த குறளரசன், எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது. என்றார்.

    குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Kuralarasan #TRajendar

    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இன்று பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu
    இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இளைய மகள் குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


    அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.



    குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu

    மன்மதன், வல்லவன் படத்தின் ரீமேக் உரிமை விவகாரம் குறித்து டி.ராஜேந்தர் நேற்று புகார் அளித்த நிலையில், சிம்பு ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தயாரிப்பாளர் தேனப்பன் புகார் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan
    நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘என் மகன் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய 2 படங்களின் டப்பிங், ரீமேக் உரிமையும் என்னிடம் உள்ளது.

    ஆனால் அதை விற்க தயாரிப்பாளர் பிஎல். தேனப்பன் முட்டுக்கட்டை போடுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்து தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்தின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை என் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.

    அந்த உரிமையை எஸ்.என் மீடியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டேன். இன்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த உரிமைகள் தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த உரிமையை வாங்கியவர்கள், விற்றவர்கள் மீது பழி சுமத்தும் விதமாக பேசியுள்ளார்.



    நான் வல்லவன் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவரது ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றும் மீள முடியாமல் தவித்து வருகிறேன். என்னை போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிப்பது திரையுகத்துக்கே தெரியும்.

    இந்நிலையில் என்னையும் எனது 35 ஆண்டுகால திரையுல அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan

    விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களை காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது என்று டி.ராஜேந்தர் கூறினார். #TRajendar #Vijayakanth
    நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசும்போது,

    சிம்பு வளர்ந்துவிட்டார், அவர் பாதை வேறு, என் பாதை வேறு. சிம்புவின் பலமே அவரது தன்னம்பிக்கை தான். போராட்ட குணம், எதையும் தாங்கக்கூடியவர், கடவுள் நம்பிக்கை கொண்டவர். சிவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார். வலியை மீறி தான் வாழ்க்கையில் வழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தேன். அதை பிடித்துக் கொண்டார். அன்பு செலுத்துவது தான் சிம்புவின் பலவீனம். சிம்பு பற்றி நிறைய சர்சைகள் வரலாம். சர்ச் இல்லாமல் கிறிஸ்டியானிட்டி வளராது, சர்ச்சை இல்லாமல் யாரும் வளர முடியாது.



    ஒரு நாயகனாக நாயகியை தொட்டதில்லை, இது என்னுடைய பாலிசி. அதைப்போலவே நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. யார் முதலமைச்சராக இருந்தாலும் முதுகெலும்புடன் எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான், இதுவரை எதிர்த்து வருகிறேன்.

    என் பையனுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்றால், இறைவனை தான் வேண்ட வேண்டும். என் பையன் பெண் பார்க்க சொல்கிறார். நான் எங்கே போய் பெண் பார்க்க முடியும். பார்க்கிறேன், ஆனால் இறைவனாக பார்த்து ஒரு பெண்ணை கொடுக்க வேண்டும். கடவுளை நம்புகிறேன்.

    விஜய், ரஜினிகாந்த்தை சில பத்திரிகைகளில் எவ்வளவு கேவலமாக விமர்சித்திருக்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு நடிகரும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார்கள். அதனால் விமர்சனத்தை தாங்க வேண்டும். என்னையே கரடி என்று கிண்டல் செய்தார்கள். இனி என்னை காயப்படுத்த என்ன இருக்கிறது.



    விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களை காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது. அவர் சொன்னாரா என்று தெரியவில்லை, அவர் கூறியதாக என் மனசை புண்படுத்திய கருத்து ஒன்றால், அவரை எதிர்த்து நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் நல்ல நண்பர்கள், அப்படி ஒரு நட்பை பார்க்க முடியாது. ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். #TRajendar #Vijayakanth

    டி.ராஜேந்தர் பேசிய வீடியோவை பார்க்க:

    அரசியலில் தனது வனவாச காலம் முடிந்துவிட்டதாக லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் கூறினார். #TRajendar
    சேலம்:

    சேலத்தில் லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தற்போது ரொம்ப தெளிவாக இருக்கிறேன். அமைதியாக, அறிவுப்பூர்வமாக, ஆழமாக, ஆன்மிக ரீதியாக சிந்தித்து பதில் பேச முடிவு செய்து உள்ளேன்.

    நான் அரசியலில் இத்தனை காலம் போராடிவிட்டேன். 14 ஆண்டுகள் லட்சிய தி.மு.க.வை நடத்தினேன். இப்போது 15-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முடிந்து விட்ட காரணத்தால், என்னுடைய வனவாச காலம் முடிந்து விட்டது. எனவே எனக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    அரசியலிலும், சினிமாவிலும் எம்.ஜி.ஆர். பெரிய ஜாம்பவான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் நான் அரசியலில் போராடிவிட்டேன். ஜாம்பவான்கள் காலத்திலேயே போராடிய பிறகு இப்போது உள்ள அரசியல் காலத்தில் போராட முடியாதா? நான் கடலிலேயே மீன் பிடித்து பார்த்து விட்டேன். குளத்தில் மீன் பிடிக்க முடியாதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    அரசியல் ரொம்ப கடினமானது. எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன், இது தலைக்கனம் இல்லை.

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்றது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கருணாநிதி இருந்த காலத்தில் செயல் தலைவர் என்ற பெயரோடு இருந்தார். தற்போது செயலை எடுத்து தலைவராக இருக்கிறார். அவ்வளவுதான். அவருடைய செயல்பாடு இனிமேல் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    சிம்பு அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிம்புவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனவே தந்தை என்ற முறையில் வழக்கை சந்திப்பேன்.

    காவி மயம் குறித்து காலம் வரும் போது பதில் சொல்வேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுப்போம். இனி வரும் காலங்களில் படத்தை குறைத்து விட்டு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TRajendar
    சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். #TRajendar #Simbu
    சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில், ‘அரசன்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்து, நடிக்காமல் இருக்கிறார் என்று பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.



    இதுகுறித்து சிம்புவின் அப்பாவும், நடிகரும் லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ‘சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் அப்பீல் செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
    மது கலாச்சாரத்திற்கு எதிராக உருவாக இருக்கும் கபிலன் வைரமுத்து வரிகளுக்கு டி.ராஜேந்தர் குரல் கொடுக்க இருக்கிறார். #TRajendar
    தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது. 

    இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள்.

    சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார். கடந்த ஆண்டு கபிலன் வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார். 



    மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிட இருக்கிறார்கள். பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார். #TRajendar #SriReddy
    நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது.

    தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் சிலர் மீதும் புகார் கூறி உள்ளார். தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும்  ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.



    இது குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் கூறும்போது, ‘தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. என் மீது இதுவரை ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, குறிப்பிட்டவர்கள் உரிய விளக்கம் அளித்தால் பிரச்சினைகள் தீரும்’ என்றார்.
    இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், அடுத்ததாக அரசியல் படம் எடுக்க இருந்த நிலையில், மகன் சிம்புவுக்காக அதை கைவிட்டிருக்கிறார். #STR #Simbu
    இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் தான் அடுத்து இயக்கும் ’இன்றையக் காதல்டா’ படத்தின் விபரத்தை நேற்று அறிவித்தார்.

    அரசியல் காமெடி படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் முழு நீள காதல் படத்தை இயக்குவது ஏன்? என்று கேட்டோம். ‘முதலில் முழுநீள அரசியல் காமெடி படம்தான் எடுக்க திட்டமிட்டேன். இந்த தகவல் அறிந்த என் மகன் சிம்பு என்னிடம் உங்களது பலமே காதல் கதை தான்.

    காதல் படங்கள் தான் உங்கள் முத்திரை. நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே தான் நான் அரசியலை விட்டு காதலை படமாக்குகிறேன். வீராசாமி படத்தை கிண்டலடித்தார்கள். எனவே இதில் சென்டிமென்ட் அதிகம் இருக்காது’ என்றார். 



    இன்றையக் காதல்டா படத்தில் டி.ராஜேந்தருக்கு வில்லியாக டான் வேடத்தில் நமீதா நடிக்கிறார். அவருக்கு கணவராக நடிக்க ஒரு கதாநாயகனிடம் பேசி வருகிறார்கள்.
    வாக்குறுதிகளை மீறி செயல்பட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். #Vishal #ProducerCouncil
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

    54 நாட்கள் சினிமா ஸ்டிரைக் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைக்கிறது. மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.

    எனவே விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது நாங்கள் விரட்டுவோம். புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தயாரிப்பாளர் சங்கத்தை மாற்ற முன்வர வேண்டும். தமிழர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். விஷால், தனது படத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல், மற்ற படங்களை பற்றியும் கவலைப்பட வேண்டும் என்று அனைவரும் பேசினார்கள்.
    ×