search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweet"

    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
    உப்பு - 1/4 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 150 கிராம்,
    நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
    வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
    வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
    வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),
    முட்டை: 1 (பெரியது) .



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

    பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.

    பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

    பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

    பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தென் இந்திய பகுதிகளில் கிடைக்கும் மைசூர்பாகு போன்றதுதான். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மிக பிரபலமான இனிப்பான மோகன்தால் செய்வது சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    இதற்கு கடலை மாவு- 2 கப்,
    நெய் - 3 டீஸ்பூன்
    பால் - 3 டீஸ்பூன்,
    நெய் - 1 கப் தனியாக,
    சர்க்கரை - 1 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    ஏலக்காய் தூள், குங்குமப்பூ - கொஞ்சம்



    செய்முறை :

    கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.

    சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.

    பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.

    இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்

    சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ரவை (அ) மைதா மாவு - கால் கிலோ
    சர்க்கரை - அரை கிலோ
    வறுகடலை - கால் கிலோ
    தேங்காய் - 2
    ஏலக்காய் பொடி - சிறிதளவு
    நெய் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.

    தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)

    அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

    சூப்பரான இனிப்பு சோமாஸ் ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த சுவிஸ் ரோலை ஸ்நாகஸாக கொடுத்து அனுப்பலாம். இன்று இந்த சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடித்த மேரி பிஸ்கெட் - 4 கப்,
    சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
    இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
    உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
    பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
    வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
    பால் - 4 டீஸ்பூன்,
    தண்ணீர் - 4 டீஸ்பூன்,
    பட்டர் பேப்பர் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.

    அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.

    சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் கூட ஒன்றாக இருந்து இருக்கும். செய்வது மிக மிக சுலபம்.
    தேவையான பொருள்கள் :

    துருவிய தேங்காய் - 1 கப்
    சர்க்கரை - 1 கப்
    பால் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

    ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.

    தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

    கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.

    நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.

    ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.

    தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.

    குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். #Jayalalithaa #death #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர், செவிலியர் ராஜேசுவரி ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுரி சங்கர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-



    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சர்க்கரை நோய் நிபுணர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் பரிந்துரைத்தேன். ஜெயலலிதாவுக்கு முதல் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டன.

    மருத்துவமனையில் தயாரித்த உணவு தனக்கு பிடிக்கவில்லை என ஜெயலலிதா கூறியதை தொடர்ந்து அவரது சமையல்காரர் மூலம் மருத்துவமனை சமையல் அறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

    எனது பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சில உணவுப்பொருட்களை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா விருப்பத்தின் பேரில் மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி கிச்சடி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு வருவல், பிங்கர் சிப்ஸ், கப் கேக், திராட்சை பழம், மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை, மலை வாழைப்பழம், ஐஸ்கிரீம், இளநீர், லட்டு, ஜாங்கிரி, பாதாம் அல்வா போன்ற உணவுப்பொருட்களை ஜெயலலிதா எடுத்துக்கொள்ள அனுமதித்தேன்.

    இந்த உணவு வகைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கலோரியை கணக்கிட்டும் தான் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    செவிலியர் ராஜேசுவரி அளித்த வாக்குமூலத்தில், ‘பெரும்பாலான நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நான் பணியில் இருந்த போது ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். முதல்முறை வந்த போது ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், ஜெயலலிதா அவரை பார்க்கவில்லை. 2-வது முறை வந்தபோது பிசியோதெரபி சிகிச்சையில் இருந்தார். இதனால், அப்போதும் கவர்னரை ஜெயலலிதா பார்க்கவில்லை. ஜெயலலிதாவை கவர்னர் இருமுறை பார்க்க வந்த விவரத்தை அவரிடம் யாரும் கூறவில்லை’ என்று கூறி உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  #Jayalalithaa #Death #ApolloHospital #tamilnews
    கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் வாழும் நாடோடிகள் மற்றும் பழங்குடியினரின் முக்கிய உணவாகும். இன்று மூங்கில் அரிசிப் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் அரிசி - 100 கிராம்
    வெல்லம் - 100 கிராம்
    தேங்காய்ப்பால் - 1 லிட்டர் (நன்கு முற்றிய தேங்காய்களாக இருக்க வேண்டும்)
    ஏலக்காய் - 2
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு.



    செய்முறை :

    மூங்கில் அரிசியை நன்கு கழுவி, ஊறவைக்க வேண்டும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

    தேங்காயில் 3 முறை பால் எடுத்து கடைசியாக எடுத்த தேங்காய்ப்பாலுடன் அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.

    அரிசி பாதி வெந்ததும் மீதமுள்ள தேங்காய்ப்பாலையும் சேர்த்து, மூங்கில் அரிசி முழுமையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

    இத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து ருசிபார்த்து வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×