search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweet"

    • மாலை 6 மணியை கடந்தும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் இருந்தது.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

    ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது.

    தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கல் பரவியது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரி விடுத்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாதானம் அரசு ஆதிதிராவிடர்

    நலத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட இரண்டு பேரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    • பள்ளியில் தலைமை ஆசிரியை தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    சீர்காழி:

    74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிலையில் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகளை வழங்கினார்.

    அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

    ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவு வரை தேசியக்கொடி பறந்தவாறு இருந்தது.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இடையே தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது குறித்து மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

    இரவு வரை தேசியக்கொடி இறக்கப்படாமல் பறந்த வாறு இருப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆருத்ரா தரிசனம் அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தியமாக படைக்கப்படும்.
    • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 200 கிராம்

    துருவிய தேங்காய் - கால் கப்

    முந்திரி - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    நெய் - ¼ கப்

    ஏலக்காய் பொடி - கால் மேசைக்கரண்டி

    செய்முறை

    அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.

    * கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

    * தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

    மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஏலப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

    * மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

    * இப்போது சுவையான திருவாதிரை களி ரெடியானது.

    திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.

    • கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
    • மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலோடு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடுகின்ற வகையில் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன அறிவுறுத்தலின்படி,நாகை நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான.

    இரா.மாரிமுத்து தலைமையில் நாகை பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாகை *நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், தோழர்கள் மூத்தமுன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • இந்த ஸ்வீட் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானது.
    • இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3,

    பால் - 1 கப் ,

    சர்க்கரை - 5 ஸ்பூன் ,

    ஏலக்காய்பொடி - சிறிதளவு,

    பாதாம், பிஸ்தா - 10 கிராம்

    செய்முறை

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.

    முட்டையை நன்கு கலங்கி கொள்ளவும்.

    ஆறவைத்த பாலை முட்டையில் ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும்.

    அதன்பின் அதில் பொடி செய்ய சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

    அடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து அதனை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும்.

    அதனை மூடி 15 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

    அடுத்து சூடு ஆறியதும் இறக்கி அதில் பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.

    இப்போது சூப்பரான மில்க் புட்டிங் ரெடி.

    குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.
    • எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா?

    இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று.

    அது என்றோ ஒரு நாள் கிடைத்தால் தான் அதற்கு மரியாதை.

    அதற்கு மேல் இனிப்பு சுவை அனுதினமும் கேட்பது மூளையில் ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கி விட்டதன் அர்த்தம்.

    மூளையில் பரிசில் தரும் மையம் உள்ளது.

    அதை Reward centre என்று கூறுவோம் .

    மதிமயக்கும் விசயம் ஒன்றை நாம் செய்தால் அது பரிசில் தரும் இடத்தைத் தூண்டும்.

    பிறகு மீண்டும் மீண்டும் அதையே செய்யச்சொல்லி மூளை நம்மை கட்டாயப்படுத்தும் .

    மூளைக்கு அது நமது உடலுக்கு நன்மையான காரியமா? தீமை தரும் காரியமா? என்றெல்லாம் தெரியாது.

    தனக்கு விருப்பமான தன்னை குதூகலத்தில் ஆற்றும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யச்சொல்லி நம்மை உந்தும் இந்த கூறுகெட்ட மூளை.

    போதைப்பொருட்களான மது, கொகெய்ன் போன்றவை போலவே இந்த இனிப்பு சுவையும் அதிகமான அளவு மூளையின் பரிசில் தரும் மையத்தை தூண்டுகிறது .

    இன்னும் சொல்லப்போனால் கொகெய்ன் போதைப்பொருளை விட சில மடங்கு அதிகமாக நாம் அனுதினம் உண்ணும் சீனி/சர்க்கரை போன்ற இனிப்பு சுவை தரும் உணவுகள் தூண்டுகின்றன என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

    இந்த இனிப்பு சுவை இவ்வாறு மூளைக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துகின்றது.

    இதில் இருந்து எப்படி வெளியே வருவது?

    என்னதான் மூளை அடம்பிடித்தாலும் இனிப்பு உண்பதை ஒரு மாதம் நிறுத்தி விட்டால் தானாக மூளை வழிக்கு வந்துவிடும்.

    இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.

    எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா?

    நீரிழிவு நோயர்களே.. தயவு செய்து இனிப்பு சுவை தரும் அத்தனை உணவுகளையும் இன்றிலிருந்து ஒரு மாதம் நிறுத்துங்கள்.

    அதற்குப்பின்பு இனிப்பு கலக்காத பாலில் உள்ள தித்திப்பைக்கூட உங்கள் நாவின் சுவை அரும்புகள் உங்களுக்கு காட்டும்.

    இனிப்பு சுவை என்பது மனிதனின் உடலுக்கு தீது உண்டாக்கவல்லது .

    அதை மருந்தைப்போல எப்போதாவது பண்டிகைகளின் போது எடுக்கலாம்.

    தேன் கூட மருந்து தான். அதை தினமும் எடுப்பது தவறு.

    நம் முன்னோர்கள் எந்த காலத்திலும் நம்மைப்போல தினமும் சீனி/சர்க்கரை கலந்த இனிப்புகளை கண்டதுமில்லை... உண்டதுமில்லை...

    இட்லி தோசை கூட ஆடம்பரமாக பண்டிகைகளுக்கு மட்டுமே வீட்டில் செய்யப்பட்ட காலங்கள் உண்டு. இன்று தினமும் இட்லி, தோசை உண்ணாத வீடுகள் இல்லை .

    பப்ஸ், சமோசா டொரினோ கலர் போன்றவை எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் வீட்டுக்குள் வரும்.

    ஆனால் இன்று நமது குளிர்சாதனப்பெட்டிகளில் எங்கும் குளிர்பானங்கள்.

    மாலை நேர ஸ்நேக்ஸாக இத்தனை பண்டங்கள்.

    அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இனிப்பு சுவை.

    நாம் இந்த இனிப்பு சுவைக்கு பிறந்த குழந்தை முதற்கொண்டு அடிமைப்படுத்துகிறோம்.

    ஆறு மாதம் வரை நன்றாக பால் பருகி எடை கூடிய குழந்தை அதற்குப்பிறகு பிஸ்கட்/ இனிப்பு கலந்து பால் / இனிப்பு கலந்த உணவுகள் கொடுக்கப்பட்டு அதற்கு அடிமையாக்கப்படுகின்றன.

    பிறகு இனிப்பு இல்லாத உணவுகளை அவை உட்கொள்ள மறுக்கின்றன.

    இனிப்பு என்பது மருந்து போன்றது.

    இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம்.

    -Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

    • புதிய ரெயிலுக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
    • ரெயிலின் கார்டு சேகருக்கு மாலை, சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    பாபநாசம்:

    கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் தஞ்சை திருச்சி மதுரை வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை அடுத்து தனது முதல் பயணத்தை தொடங்கிய வண்டிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டா டப்பட்டது.

    டெல்டா பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறை கும்பகோ ணம் பாபநாசம் வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

    தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம், தென்காசி சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த பயணிகள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே புதிய ரயில் வண்டி இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதை அடுத்து செங்கோட்டை விரைவு ரயில் முதல் சேவை மயிலாடுதுறையில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக பாபநாசத்திற்கு பகல் 13.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    புதிய ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ராஜராஜன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி குழுத்தின் நெறியாளர் எஸ்.கே.ஸ்ரீதர் ரயில் வண்டியின் ஓட்டுனர்கள் மது, விஸ்வநாதன் மற்றும் ரயில் வண்டியின் கார்டு சேகர் ஆகியோருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன், சங்க தலைவர் சோமநாதராவ், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சாமிநாதன், சங்கர், பாபநாசம் வணிகர் சங்க செயலாளர் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், அசோகன் ஆகியோரும் ஓட்டுனர்களுக்கு சால்வை கள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

    நிகழ்ச்சியில் பாபநாசம் நகர தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பூம்புகார் கைவினை கழகத்தின் முன்னாள் தலைவர் சுவாமிமலை ஸ்ரீகண்டன் ஸ்தபதி, பாபநாசம் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சம்மந்தம், பாபநாசம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செந்தில்நாதன், பிரான்சிஸ்சேவியர், வெங்கடேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பிரகாஷ், முத்துமேரிமைக்கேல்ராஜ், தேன்மொழிஉதயக்குமார், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஓய்வு பெற்ற செய்திதுறை இணை இயக்குனர் கண்ணதாசன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இந்த செங்கோட்டை விரைவு ரயில் வண்டி பாபநாசம் ரயில் நிலைத்திற்கு பகல் 12.20 மணிக்கு வந்து தஞ்சை, திருவெறும்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், தென்காசி வழியாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் செங்கோட்டை வழியாகவும், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் தென்காசி வழியாகவும், வியாபார நிமித்தமாக அடிக்கடி செல்லும் வணிகர்களுக்கு உதவியாக மதுரை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லமுடியும்.

    குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு பயணம் செய்யும் விதத்தில் பயணிகள் அனைவரும் இந்த ரயில் வண்டியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கேரளா மட்டை அரிசி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
    • இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கேரளா மட்டை அரிசி - 1 கப்

    பால் - 4 கப்

    சர்க்கரை - 1 கப்

    முந்திரி, திராட்சை, பாதாம் - விருப்பத்திற்கேற்ப

    நெய் - அரை டீஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    * பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

    * கேரளா மட்டை அரிசியை நன்றாக கழுவி மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    * பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். அல்லது அடிபிடித்து விடும்.

    * அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.

    * அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

    * இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

    * மேலே வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    * இப்போது சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்…

    குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்தும் இதை செய்யலாம்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    • ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புளியங்குடி:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து புளியங்குடியில் ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் புளியங்குடி நகர நிர்வாகிகள் முருகன், துரைப்பாண்டியன், கணபதி, பம்பாய் மாடசாமி, மாரியப்பன், மகளிரணி மாவட்ட செயலாளர் சுவர்ணா, ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • காரைக்கால் மார்க்கத்திலிருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள புதிய வழித்தடத்தில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் இயக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மார்க்கத்தில் இருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.இந்த புதிய வழித்தடத்தை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, இடையாத்தாங்குடி, திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பஸ்சை வரவேற்றனர். இடையாத்தாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவகாமிஅன்பழகன், இடையாத்தங்குடி சுப்பிரமணியன், சேஷமூலை திருநாவுக்கரசு, விழுதியூர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் திமுக செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை வரவேற்றனர்.

    இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் காரைக்கால் கிளை மேலாளர் அருள்ஜோதி, திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இந்திரா அருள்மணி, பெரியமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர்.
    • மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் இயங்கி வரும் குருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி. நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர். தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட தலைவர் ச.பாஸ்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் வி.கே.செல்வம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாவட்ட துணை தலைவர் ஆர்.சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.சி.எஸ்.அறிவுராம், வர்த்தபிரிவு மாநில ெசயலாளர் சிவ.காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.கண்ணன், மாவட்ட துணை தலைவர் எஸ்.பானுமதி, நகர தலைவர் ஆர்.ரகுராமன், நகர பொது செயலாளர்கள் கோகுல், எம்.எஸ்.செயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×