search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Success"

    • விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர்பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    தலைமை யாசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கி பேசுகையில், சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர் பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்" என்றார்.

    இதில் சீர்காழி நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரமன்ற துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி நகரமன்ற உறுப்பினர்கள் நித்யாதேவிபாலமுருகன், ரமாமணி, வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், தி.மு.க நிர்வாகி செந்தில், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் உதவித்தமையாசிரியரும் உடற்கல்வி இயக்குநருமான முரளிதரன் நன்றி கூறினார்.

    • எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள்.
    • செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும்.

    வெற்றியை விரும்பாத மனிதரில்லை. எந்த ஒரு மனிதனாலும் தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பான். ஆனால் பலரும் அதற்கான வழிகளை தேடுவதில்லை. குறிக்கோள் பற்றி சொல்லும் போது குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்பாதை எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    எந்தவொரு மனிதனாக இருந்தாலும் முதலில் எதை பற்றியாவது சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் போது தான் நாம் எதையாவது அடைய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்படும். படிப்பில் மந்தமாக இருந்து பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தனியாக இருந்த நேரத்தில் பலமணி நேரம் கற்பனையில் சூழ்ந்து இருந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

    வாழ்க்கைக்கு ஓர் இலக்கு வேண்டும் என்பதை தீர்மானித்து வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. இவர் கருப்பின மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற ஒரே இலக்கோடு பேராடி வெற்றி கண்டார். நாமும் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் வாழ்க்கையில் ஓர் லட்சியத்தோடு பயணித்தால் எந்த தடைகளையும் தாண்டி வெற்றியை தட்டி செல்ல முடியும். லட்சியம் இல்லா வாழ்வு-துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

    வாழ்வின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி எத்தனை இடர்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை. பணமோ, வயதோ, படிப்போ,ஊனமோ எதுவும் வெற்றிக்கு தடையில்லை என நம்ப வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தை கைவிட வேண்டும்.

    நல்ல மதிப்பீடுகளை வளர்த்து கொள்வதும் ஒருவகையில் நம் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைவதுண்டு. நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளியில் தெரியும் வகையில் நாம் நல்ல மதிப்பீடுகளை கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கற்றுத்தருவதைவிட தம் ஆன்மாவை தீமைகள் எதுவும் அணுகாமல் தூய்மையாக வைத்திருப்பதும் ஒரு வகையில் வெற்றியின் ரகசியம்தான்.

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நாம் எடுத்த காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நினைக்கும் செயலில் வெற்றி காணும் வரை விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். சிலந்தி வரை பின்னுவது போல் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் கூட தங்களுடைய விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் சாதனை படைத்து கொண்டிருப்பதை நாம் தினந்தோறும் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்.

    உழைப்புக்கும் உயர்வுக்கும் இலக்கணம் என்றால் அது தாமஸ் ஆல்வா எடிசன் தான். உழைப்பில் தன்னை கரைத்து சமூகத்திற்கு பலவற்றை கண்டுபிடித்து கொடுத்தவர். முப்பத்தி எழு வயதில் தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராகவும், 1929-ல் அமெரிக்காவின் உயர்ந்த பத்து மனிதர்களின் முதல் மனிதராகவும் திகழ்ந்தார். இத்தகைய உழைப்பு நம்மிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    கற்களில் உள்ளிருக்கும் தீப்பொறி பாறையை வேகத்தோடு தரையில் தேய்ப்பதால் உண்டாகிறது. அதுபோல் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் மனிதனுக்குள்ளே இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி அவனை அழகுப்படுத்துகிறது. ஆர்வத்தோடு செய்யும் செயலே நம் வாழ்க்கையை மிகுந்த தைரியத்துடனும் மனவலிமையுடனும் நாம் எதிர்கொள்ள உதவும். எந்த செயலை தொடங்கும் போதும் மிகுந்த ஆர்வத்தோடு தொடங்குங்கள்.

    செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும். கற்றுக்கொள்வதை சுலபமாக்கும். போட்டியில் கலந்து கொள்வது என்பது பாதி வெற்றிக்கு சமம். எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள். தோல்வி போன்ற வார்த்தைகளே நினைத்து கூடப்பார்க்காதீர்கள்.

    இந்த உலகமே இந்தியர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நாம் தாம் நம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கொடுமை. எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள், நம்பிக்கையுமன் முடியுங்கள், நம்பிக்கை குணமாக்கும், நம்பிக்கை நம்மை செம்மைப்படுத்தும், நம்பிக்கை இப்பொழுதே வெற்றி தரும்.

    நீங்கள் மிகவும் திருப்தியடைந்த ஒரு நாளை பாருங்கள். நீங்கள் செயல் எதுவும் செய்யாமல் சுற்றி திரிந்த நாளாக அது இருக்காது. மாறாக நீங்கள் பல செயல்கள் செய்ய வேண்டியிருந்து அந்த செயல்கள் அனைத்தையும் திருப்தியுடன் செய்து முடித்திருந்த நாளாகவே அது அமைந்திருக்கும். முன்பு வானமே எல்லை என்று கூறுவார்கள். உண்மையில் வானம்கூட எல்லையில்லை.

    தேடலே வாழ்க்கை அந்த தேடலை மாணவர்களாகிய நாம் தாம் அதை தேடிக் கண்டு கொள்ள வேண்டும். ஆன்மிக வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் உட்கார்ந்து கண்களை மூடி உள்ளே தேட வேண்டும். ஒவ்வொரு செயலின் உள்ளேயும் வெற்றியின் விதை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகுந்த முனைப்புடன் உழைத்தால் இப்போதே வெற்றி சாத்தியமான ஒன்றுதான். விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த மனிதனாக இருந்தாலும் சரி ஆணோ, பெண்ணோ, எந்த வயதிலும் சாதனை புரிந்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

    வெற்றி என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடித்தளமாகும்

    விடா முயற்சியே வெற்றியை தரும்.

    • போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெறும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லீலாதேவி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் சதுரங்க போட்டியினை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் அரிமா சங்க தலைவர் செங்குட்டுவன், முன்னாள் தலைவர் செந்தில் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    • மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நடந்தது.
    • தடகள போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 13- வது தொடக்கநிலை வகுப்பிற்கான விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், தொடக்கநிலை முதல்வர் ஏஞ்சலின் வில்லியம்ஸ், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நால்வண்ண மாணவர்களின் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையினையும் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தடகளப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். டியூலிப் அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் சக்திபாலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

    • பாபநாசம் ஒன்றிய அளவிலான பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் வருகிற 25-ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ. துரை சதுரங்க போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட சதுரங்க விளையாட்டு போட்டி செயலாளர் சிலம்பரசன், துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாவில் பாபநாசம் ஒன்றிய அளவிலான பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் வருகிற 25 -ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • பள்ளியில் பயிலும் 190 மாணவர்கள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்துமேல்நிலை ப்பள்ளியில் சென்னையில் நடைபெற இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் குறித்தவி ழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 190 மாணவ-மாணவிகள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியிலும், 42 மாணவ-மாணவிகள் சதுரங்க விளையாட்டு குறித்த பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை யில் நடந்தது.

    பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பள்ளித்து ணை ஆய்வாளர் செளந்த ரராஜன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன், ஓவிய ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் சீனிவாசன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.

    • பெரியபட்டினத்தில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் நகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற மக்கள் சங்கமம் மாநாடு வருகிற 30 மற்றும் ஜூலை 1-ந் தேதிகளில் பெரியபட்டினம் தர்கா திடலில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    போட்டியை மாநில செயலாளர் முகமது ரசின் தொடங்கி வைத்தார். பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முத்துப்பேட்டை, சேதுநகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டினம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இதில் முதல் இடத்தை ஆசிப், 2-வது இடத்தை யூசுப், 3-வது இடத்தை மைதீன் ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம்.
    • இலக்கை அடைய தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும்.

    வாழ்க்கையில் கடினமாக உழைத்தாலும், பலருக்கு முன்னேற்றம் எட்டாக் கனியாகவே இருக்கும். சரியான இலக்கை நிர்ணயித்து செயல்படாததும் இதற்கு காரணமாகும். நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமானது. இலக்குகள் வரையறுக்கக் கூடியதாக, அளவிடக் கூடியதாக, அடையக் கூடியதாக, கால வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

    அவற்றை மூன்று படிநிலைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். நீண்டகால, குறுகியகால, மத்திய கால இலக்குகள் என்று எல்லாவற்றையும் பிரித்து, அதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே நம்முடைய இலக்கை எளிதாக அடைய முடியும். சாதனையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

    நம் அன்றாட வாழ்க்கையிலும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மாணவர்கள் உயர்கல்வி கற்பது, விளையாட்டு வீரர்கள் முதல் பரிசு பெறுவது, தொழில்முனைவோர் தனது தொழிலில் வெற்றி பெறுவது, பணி புரிபவர்கள் அவர்களது துறையில் முதன்மை பதவிக்கு செல்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்து பயணிக்கலாம்.இதன் மூலம் நேரத்தையும், திறமையையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த முடியும்.

    இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம். நம்முடைய தனிப்பட்ட குறிக்கோளாக, குடும்பம், சமூகம் சார்ந்ததாக இருக்கும்போது அந்த இலக்குகளை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்கினை தீர்மானம் செய்த பிறகு, 'இதை நம்மால் செய்துவிட முடியுமா?' என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிடுதல் கூடாது. அது நம்முடைய ஊக்கத்தைக் குறைக்கும்.

    நம்முடைய பலவீனமே, எல்லாம் நமக்கு உடனடியாக நடைபெற வேண்டும், நினைத்த வண்ணம் நடக்க வேண்டும் என்று நினைப்பது தான். அவற்றை எல்லாம் நீக்கி விட்டு, சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும். நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.

    இலக்குகளை நிர்ணயித்த பின்பு, அதில் உள்ள சிக்கல்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்த தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்த தெளிவான முடிவுகளை ஆராய்ந்து, அவற்றில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான மன உறுதியையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமானது.

    பெண்கள் உடைத்தெறிய வேண்டிய சில பழக்கங்கள், செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த கட்டுரை வாயிலாக அதை தெரிந்து கொள்வோம்.

    1. வலைதள உலாவல்

    நம்மில் பலருக்கும் இன்று விரல் நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால்கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு ‘தேடி ஆராய’ ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும். இதை தவிர்க்க, வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.

    2. ஒரே நேரத்தில் பல வேலைகள்

    இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2 சதவிகித மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.

    3. மெசேஜ், ஈ-மெயில்களை கண்காணிப்பது

    இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    4. காரணம் தேடுதல்

    ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே நமக்கு பெரிய தடையாக அமைந்திருக்கும்.

    5. அநாவசிய சந்திப்புகள்

    ஆன்லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் நவீன டெக்னாலஜி காலத்தில், தேவையில்லாத நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

    6. ஒத்திவைத்தல்

    அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்து விடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கிய பழக்கமாகும்.

    7. உட்கார்ந்திருப்பது

    வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலாற நடப்பது, கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியை தரும்.

    8. முக்கியத்துவம் அளித்தல்

    நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

    9. பொய் தூக்கம்

    படுக்கையில் ‘இன்னும் 5 நிமிஷம்’ என்று எழுந் திருக்க மனமில்லாமல் புரள்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம், கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனையை வழங்கும் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண் விழிப்பும் சிறந்ததொரு நாளை தரும்.

    10. ஓவர் பிளானிங்

    லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாக பிளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கல் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.

    11. திட்டமிடல் இல்லாமை

    எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்று விட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரசியமற்றதாகிவிடும்.

    12. செல்போனை சார்ந்திருத்தல்

    எல்.இ.டி. ஸ்கிரீன்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    13. எல்லாம் பெர்பெக்ட்

    எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதை காட்டிலும் வேலையை தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லோராலும் ‘மிஸ்டர். பெர்பெக்ட்’ ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
    தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.
    தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு, பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.

    பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்ளக்கூட நேரிடலாம்.

    இவற்றை போக்குவதற்கு சில வழிகள்!

    * நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

    * எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

    * உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.

    * என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

    * உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

    * கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

    * அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

    * உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்.
    அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, பலருடைய வாழ்க்கையை காண்பதன் வாயிலாக நாம் பெறுவது தான் அனுபவ அறிவு
    நாம் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என சேர்ந்து போய் விட கூடாது. நம்மால் அவர்களை போல முன்னேற முடியுமா அந்த அளவிற்கு பொருளாதாரம் இல்லை என துவண்டு போய் விட கூடாது. பணம் இல்லை என்பது மட்டும் வாழ்க்கையில் வறுமை இல்லை. திறமைகளே இல்லாமல் வாழ்வதும் வறுமை தான். உலகத்தில் கடினமானது தன்னைத்தான் அறிந்து கொள்வது தான். தன்னிடத்தில் உள்ள திறமைகள் என்ன? மேலும் என்னென்ன திறமைகளை நம்மால் பெற முடியும்? அவற்றை அடைய மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்ன? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருவரிடம் உள்ள திறமையை பணத்தை பயன்படுத்தியோ, அதிகாரத்தை பயன்படுத்தியோ பெற முடியாது. திறமை என்பது வெள்ளம் போன்றது. குறிக்கோள், லட்சியம் என்ற கரை இருக்குமானால் அந்த தண்ணீர் விவசாயத்திற்கு, குடிநீருக்கு என்று பல வகையில் பயன்படும். கரைகள் இல்லை என்றால் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை, உடமைகளை அழித்து விடும். எனவே குறிக்கோள், இலக்கு இல்லாத திறமை செயல்வடிவம் பெறாது.

    வாழ்க்கை எண்ணற்ற சவால்கள் நிறைந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும், பின் விளைவுகளையும் எதிர்கொள்ள திறமை நிச்சயம் தேவை. எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மன உறுதியை, நீங்கள் பெற்றுள்ள திறமைகள் தான் அளிக்கும்.

    அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, பலருடைய வாழ்க்கையை காண்பதன் வாயிலாக நாம் பெறுவது தான் அனுபவ அறிவு. நாம் காண்கின்ற, கேட்கின்ற நிகழ்வுகள் செய்திகள் வாயிலாக தான் அறிவை பெறுகிறோம். தன்னம்பிக்கையின் வாயிலாக, கற்பனையின் வாயிலாக, பயிற்சிகளின் வாயிலாக, கல்வி ஞானத்தின் வாயிலாக, கேட்டு உணர்வதன் வாயிலாக எதையும் கற்று கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் வாயிலாக திறமைகளை வளர்த்து கொள்ளலாம்.

    தீப்பொறி போன்ற உங்கள் திறமைகள் தீப்பந்தங்களாக மாறட்டும். செயல்திறன் என்கின்ற தீ வானத்தை எட்டட்டும். தீப்பந்தத்தை கீழ்நோக்கி காண்பித்தாலும் தீ மேல் நோக்கி தான் எரியும். எனவே திறமை என்கின்ற தீப்பந்தத்தை உருவாக்குங்கள். செயல்திறன் என்கின்ற தீ வெற்றியை நோக்கியே எரியும். நாளைய குறிக்கோள் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றால் போல் திட்டமிட்டு வாழ்ந்தால் வெற்றி சொந்தக்காரர்களாக எப்போதும் நாம் இருக்கலாம்.
    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #NoteBan #ArunJaitley #Demonetisation
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்காக, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டது.

    பா.ஜனதா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அதன் பயன்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் கூறியிருந்ததாவது:-



    பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இதனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

    அதிக அளவிலான பணத்தை கைப்பற்றுவது, இந்த நடவடிக்கையின் அங்கம் அல்ல. மாறாக அவற்றை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் சேர்த்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். குறிப்பாக பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் பரிமாற்றமாக மாறுவது முக்கியமாகும்.

    அந்தவகையில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் பணப்பரிமாற்றம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இத்தகைய முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தால் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது.

    அதன்படி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 64 லட்சத்தில் (ஜி.எஸ்.டி.க்கு முன்) இருந்து 1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சரக்கு மற்றும் சேவைகளின் உண்மையான நுகர்வுத்தன்மை அதிகரித்து, வரித்தளம் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மறைமுக வரியும் அதிகரித்து உள்ளது.

    இது மத்திய-மாநில அரசுகளுக்கு மிகுந்த பயனை அளித்து இருக்கிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி.க்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் வரிவிதிப்பில் 14 சதவீதம் நிச்சய வளர்ச்சியை கண்டிருக்கின்றன.

    குறைவான வரி செலுத்துவோருக்கு ரூ.97 ஆயிரம் கோடி மற்றும் ஜி.எஸ்.டி. பங்களிப்போருக்கு ரூ.80 ஆயிரம் கோடி என ஆண்டுதோறும் வரிச்சலுகை வழங்கப்பட்ட பிறகும், வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. இதைப்போல நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. வரித்தளம் விரிவடைந்து உள்ளது.

    இந்த தொகையை உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், பல்வேறு சமூக துறைகளிலுமே மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இப்படி பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டதால் 13 கோடி தொழில் முனைவோர் முத்ரா கடன்களை பெற்று இருக்கின்றனர். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதுடன், ஒரு பதவி-ஒரே ஓய்வூதிய திட்டமும் இறுதியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
    ×