search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால்...
    X

    விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால்...

    • எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள்.
    • செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும்.

    வெற்றியை விரும்பாத மனிதரில்லை. எந்த ஒரு மனிதனாலும் தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பான். ஆனால் பலரும் அதற்கான வழிகளை தேடுவதில்லை. குறிக்கோள் பற்றி சொல்லும் போது குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்பாதை எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    எந்தவொரு மனிதனாக இருந்தாலும் முதலில் எதை பற்றியாவது சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் போது தான் நாம் எதையாவது அடைய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்படும். படிப்பில் மந்தமாக இருந்து பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தனியாக இருந்த நேரத்தில் பலமணி நேரம் கற்பனையில் சூழ்ந்து இருந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

    வாழ்க்கைக்கு ஓர் இலக்கு வேண்டும் என்பதை தீர்மானித்து வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. இவர் கருப்பின மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற ஒரே இலக்கோடு பேராடி வெற்றி கண்டார். நாமும் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் வாழ்க்கையில் ஓர் லட்சியத்தோடு பயணித்தால் எந்த தடைகளையும் தாண்டி வெற்றியை தட்டி செல்ல முடியும். லட்சியம் இல்லா வாழ்வு-துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

    வாழ்வின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி எத்தனை இடர்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை. பணமோ, வயதோ, படிப்போ,ஊனமோ எதுவும் வெற்றிக்கு தடையில்லை என நம்ப வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தை கைவிட வேண்டும்.

    நல்ல மதிப்பீடுகளை வளர்த்து கொள்வதும் ஒருவகையில் நம் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைவதுண்டு. நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளியில் தெரியும் வகையில் நாம் நல்ல மதிப்பீடுகளை கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கற்றுத்தருவதைவிட தம் ஆன்மாவை தீமைகள் எதுவும் அணுகாமல் தூய்மையாக வைத்திருப்பதும் ஒரு வகையில் வெற்றியின் ரகசியம்தான்.

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நாம் எடுத்த காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நினைக்கும் செயலில் வெற்றி காணும் வரை விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். சிலந்தி வரை பின்னுவது போல் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் கூட தங்களுடைய விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் சாதனை படைத்து கொண்டிருப்பதை நாம் தினந்தோறும் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்.

    உழைப்புக்கும் உயர்வுக்கும் இலக்கணம் என்றால் அது தாமஸ் ஆல்வா எடிசன் தான். உழைப்பில் தன்னை கரைத்து சமூகத்திற்கு பலவற்றை கண்டுபிடித்து கொடுத்தவர். முப்பத்தி எழு வயதில் தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராகவும், 1929-ல் அமெரிக்காவின் உயர்ந்த பத்து மனிதர்களின் முதல் மனிதராகவும் திகழ்ந்தார். இத்தகைய உழைப்பு நம்மிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    கற்களில் உள்ளிருக்கும் தீப்பொறி பாறையை வேகத்தோடு தரையில் தேய்ப்பதால் உண்டாகிறது. அதுபோல் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் மனிதனுக்குள்ளே இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி அவனை அழகுப்படுத்துகிறது. ஆர்வத்தோடு செய்யும் செயலே நம் வாழ்க்கையை மிகுந்த தைரியத்துடனும் மனவலிமையுடனும் நாம் எதிர்கொள்ள உதவும். எந்த செயலை தொடங்கும் போதும் மிகுந்த ஆர்வத்தோடு தொடங்குங்கள்.

    செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும். கற்றுக்கொள்வதை சுலபமாக்கும். போட்டியில் கலந்து கொள்வது என்பது பாதி வெற்றிக்கு சமம். எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள். தோல்வி போன்ற வார்த்தைகளே நினைத்து கூடப்பார்க்காதீர்கள்.

    இந்த உலகமே இந்தியர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நாம் தாம் நம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கொடுமை. எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள், நம்பிக்கையுமன் முடியுங்கள், நம்பிக்கை குணமாக்கும், நம்பிக்கை நம்மை செம்மைப்படுத்தும், நம்பிக்கை இப்பொழுதே வெற்றி தரும்.

    நீங்கள் மிகவும் திருப்தியடைந்த ஒரு நாளை பாருங்கள். நீங்கள் செயல் எதுவும் செய்யாமல் சுற்றி திரிந்த நாளாக அது இருக்காது. மாறாக நீங்கள் பல செயல்கள் செய்ய வேண்டியிருந்து அந்த செயல்கள் அனைத்தையும் திருப்தியுடன் செய்து முடித்திருந்த நாளாகவே அது அமைந்திருக்கும். முன்பு வானமே எல்லை என்று கூறுவார்கள். உண்மையில் வானம்கூட எல்லையில்லை.

    தேடலே வாழ்க்கை அந்த தேடலை மாணவர்களாகிய நாம் தாம் அதை தேடிக் கண்டு கொள்ள வேண்டும். ஆன்மிக வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் உட்கார்ந்து கண்களை மூடி உள்ளே தேட வேண்டும். ஒவ்வொரு செயலின் உள்ளேயும் வெற்றியின் விதை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகுந்த முனைப்புடன் உழைத்தால் இப்போதே வெற்றி சாத்தியமான ஒன்றுதான். விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த மனிதனாக இருந்தாலும் சரி ஆணோ, பெண்ணோ, எந்த வயதிலும் சாதனை புரிந்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

    வெற்றி என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடித்தளமாகும்

    விடா முயற்சியே வெற்றியை தரும்.

    Next Story
    ×