search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snacks"

    • குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய செலவோ குறைவு. சுவையோ அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

    சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1½ கப்

    வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

    துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.

    பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

    கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

    பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் சூப்பரான சுவையான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    சீஸ் துருவல் - 1 கப்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

    ஓரிகானோ - அரை டீஸ்பூன்

    சோள மாவு - 3 டீஸ்பூன்

    பிரெட் தூள் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    மிக்சியில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தனி மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பிரெட் தூள் 2 டீஸ்பூன், வெண்ணெய், சோயா சாஸ் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

    சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி மெல்லிய பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவில் அதில் உருண்டையை வைத்து மெலிதாக பூரி போல் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து நன்றாக மூடி சதுரமான வடிவில் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த பைட்ஸை சோள மாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் சீஸ் பைட்ஸ் ரெடி.

    • இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.
    • இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு ஆரோக்கியமான உணவு.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்

    தண்ணீர் - 1/2 லிட்டர் + 3 கப்

    பச்சை மிளகாய் - 15 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)

    இஞ்சி - விரல் அளவு 1 துண்டு

    தேங்காய் துருவல் - 1 கப்

    தேங்காய் துண்டுகள்(பொடியாக நறுக்கியது) - 1/2 கப்

    வெந்தயம் இலைகள் - 2 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * வெந்தயம் இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * துவரம் பருப்பை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்

    * மிக்சிஜாரில் ப.மிளகாய், இஞ்சி, ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

    * பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை போட்டு கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த முறையில் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவில் தேங்காய் துருவல், நறுக்கிய தேங்காய் துண்டுகள், வெந்தயம் இலைகள், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    * ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் வைக்க வேண்டும்.

    * இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு மாவை அனைத்தையும் செய்ய வேண்டும்.

    * இட்லி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.

    * இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.

    * வெந்தயம் இலைகளுக்கு பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம்.

    • ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    கிரீன் ஆப்பிள் - 2

    சர்க்கரை - 1 கப்

    தண்ணீர் - அரை கப்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    சிவப்பு கலர் பவுடர் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    ஆப்பிளை விதை நீக்கி விட்டு நீளமான வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய ஆப்பிளை ஈரம் இல்லாமல் நன்றாக துணியால் துடைத்து கொள்ளவும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்து பாகு பதம் வரும் போது சிறிது பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றினால் பாகு கரையால் கையால் உருட்டும் பதத்திற்கு வரும். அந்த சமயத்தில் சிவப்பு கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    அடுத்து ஒவ்வொரு ஆப்பிள் வில்லைகளாக சர்க்கரை பாகில் முக்கி எடுத்து பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இதை 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

    இப்போது சூப்பரான ஆப்பிள் மிட்டாய் ரெடி.

    இதே போல் உங்களுக்கு விருப்பமான பழங்களில் செய்யலாம்.

    • இந்த ஸ்நாக்ஸ் செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    உப்பு - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்

    சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா -தலா அரை டீஸ்பூன்

    முட்டை - 1 (பாதி)

    பிரெட் - 2 ஸ்லைஸ்

    சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 3 பெரியது

    சோளா மாவு - சிறிதளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் சிக்கனை போட்டு அதனுடன், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு, தனி மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா, கொரகொரப்பாக பொடித்த தனியா, பாதி முட்டை, பிரெட் துண்டுகள், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த மசாலா திக்கான பதத்தில் இருக்கும். கட்டியாக இருக்க வேண்டும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு 1 1/2 இஞ்ச் அளவில் தடிமனாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்(படத்தில் உள்ளபடி). வெட்டிய உருளைக்கிழங்கின் நடுவில் பாதி அளவு வெட்டவும். இரண்டாக வெட்டி விடக்கூடாது. பாதிஅளவு மட்டுமே வெட்ட வேண்டும்.

    உருளைக்கிழங்கின் மேல் சோளா மாவை போட்டு நன்றாக பிரட்டி விடவும்.

    இப்போது அரைத்த மசாலவை சிறிது எடுத்து உருளைக்கிழங்கில் நடுவில் வைக்கவும். ஒரங்களில் வெளியில் வரக்கூடாது. இவ்வாறு அனைத்து உருளைக்கிழங்கிலும் வைக்கவும்.

    அடுத்து கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு ரெடி.

    • இதை டிபனாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    • சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்,

    உளுந்து - அரை கப்,

    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - ஒன்று,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 3 மணிநேரம் ஊறவிடவும்.

    நன்றாக ஊறியதும் இரண்டையும் அரைத்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, மாவில் சேர்க்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிவப்பு அரிசி காரப் பணியாரம் ரெடி.

    • சிக்கனில் விதவிதமான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2

    எலும்பில்லாத சிக்கன் - 1 கப்

    நெய் - 1 டீஸ்பூன்

    முட்டை - 2

    சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்

    சாட் மசாலா - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    ஆரிகானோ - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கபாப் ஸ்டிக் - 10

    உப்பு - சுவைக்கு

    பிரெட் துள் - தேவைக்கு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    சிக்கனை வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வேக வைத்து உரித்த சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ஆரிகானோ, தனி மிளகாய் தூள், சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், நெய் சேர்த்து நன்றாக பிசைத்த பின்னர் கடைசியாக 2 டீஸ்பூன் பிரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.

    2 கபாப் ஸ்டிக்கை எடுத்து கொண்டு அதில் சிக்கன் மசாலாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கபாப் ஸ்டிக்கில் வைத்து தட்டையாக தட்டவும். இவ்வாறு அனைத்து மசாலாவையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த ஸ்டிக்கை முட்டை கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டிக் ரெடி.

    • ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.
    • இதை ஸ்நாக்ஸ் அல்லது டிபன் போன்று சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    காய்ந்த மிளகாய் - 3

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்னர் இவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    சூடாக இருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கிண்டிக் கொண்டே வர வேண்டும். இதனால் நன்றாக மாவு வெந்து வரும். பின்னர் உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

    இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இட்லி தட்டில் ஒரு காட்டன் துணியை விரித்து அதன் மேல் இந்த உருண்டைகளை வைத்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

    மிருதுவான ஆரோக்கியம் மிகுந்த கார உப்பு உருண்டை தயாராகி இருக்கும்.

    கட்டாயம் மாவில் சுடு தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும். அப்போது தான் மாவு மிருதுவான உருண்டையாக நமக்கு வரும். இல்லையென்றால் மாவு கெட்டியாக கடிப்பதற்கு சிரமப்படும் அளவிற்கு வந்து விடும். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    ப.மிளகாய் - 2

    உப்பு - சுவைக்கு

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    முட்டை - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.

    அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.

    அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.

    • பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    சீரகம் - அரை டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 4

    துருவிய கேரட் - 2 டீஸ்பூன்

    குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.

    தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.

    இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.

    இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.

    • இந்த ரெசிபி இனிப்பு மற்றும் காரசாரமான சுவையில் இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்

    ப.மிளகாய் - 2

    பூண்டு - 5 பல்

    வறுத்த வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    குடைமிளகாய் - 1

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செஸ்வான் சாஸ் - 2 டீஸ்பூன்

    எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    வினிகர் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை 1 டீஸ்பூன்

    உப்பு - 1/2 + 1/2

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் கலக்கவும்.

    பிசைந்த மாவை மெலிதாக விரல் வடிவில் உருளையாக தேய்க்கவும். தேய்த்த மாவை 1 இஞ்ச் அளவில் வெட்டிக்கொள்ளவும். மாவு அனைத்தையும் இவ்வாறு செய்ய வேண்டும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் செய்து வைத்ததை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும், பின்னர் அதனை குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளை போட்டு பொரிந்த பின்னர் பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    பின்னர் அரை கப் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் செஸ்வான் சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் , காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், வினிகர், சர்க்கரை, உப்பு அரை டீஸ்பூன் சேர்த்து கலக்கவும். பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள ஸ்டிக்கை போட்டு 1 நிமிடம் நன்றாக கிளறவும்.

    இப்போது மசாலா நன்றாக சைஸ் ஸ்டிக்கில் சேர்ந்திருக்கும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லி தழை, வறுத்த எள் தூவி பரிமாறவும்.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • குழந்தைகளுக்கு இது சத்தான ரெசிபி.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2

    வெண்ணெய் - 3 டீஸ்பூன்

    நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்

    பிரெட் துண்டுகள் - தேவைக்கேற்ப

    செய்முறை

    வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் வெட்டிவைத்த வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை போட்டு குழைய வதக்கி இறக்கி ஆற விடவும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு சப்பாத்தி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

    தேய்த்த பிரெட் நடுவில் வாழைப்பழ மசியலை வைத்து பிரெட்டை உருட்டி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும். அப்போது தான் வாழைப்பழம் வெளியில் வராது.

    இப்போது மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் செய்து வைத்த பிரெட் உருண்டைகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பழ பிரெட் டோஸ்ட் ரெடி.

    ×