search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smoking"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
    • சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ராமநாதபுரம்

    பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தாலோ தண்டனைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது இதை கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக முதன்முறையாக ரூ.100, மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும். மேலும் தொடர்ந்தால் 3 மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

    இப்படி ஒரு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதில்லை. சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கையை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டீக்கடை, பொது இடங்களில் பலரும் புகைக்கின்றனர்.

    புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், டி.பி., மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர். பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் காலப்போக்கில் பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தியேட்டர்கள், பஸ்களில் புகைபிடிப்பது சாதாரணமாக இருந்தது. பொது இடங்களில் புகைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், தற்போது தியேட்டர், பஸ்களில் புகைப்பது அரிதாக மாறியது.

    பொது இடங்களில் புகைப்போர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பொது இடங்களில் புகைக்கும் பழக்கம் குறைந்திருந்தது. சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அறவே இல்லாததால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது.

    இந்த பழக்கத்தை அருகில் இருந்தவர்கள் திருத்த முயற்சித்தாலும் அது தகராறாக மாறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பி டிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
    • முதன்முறையாக ரூ.100 மீண்டும், அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொது இடங்களில் புகைப்பி டித்தலோ, புகை யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டாலோ உடனடி அபராதமாக முதன்முறையாக ரூ.100. மீண்டும், அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்படுத்துவதில்லை. சில இடங்களில் போலீ சாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது.

    இவ்விஷயத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லாததால் டீக்கடை, பொது இடங்களில் பலரும் புகைக்கின்றனர். புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரி விக்கின்றன.நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், டி.பி., மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர்.

    பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரை யரங்குகள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது. பொது இடங்களில் புகைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், தற்போது தியேட்டர், பஸ்க ளில் புகைப்பதை காண்பது அரிதான காட்சியாக மாறியது.

    பொது இடங்களில் புகைப்போர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பொது இடங்களில் புகைக்கும் பழக்கம் குறைந்திருந்தது. சில ஆண்டுகளாக அறவே நடவடிக்கை இல்லாததால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் பொது இடங்களில் புகைப்போர் அதிகரித்துள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுத்து புகை பிடிப்போருக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பீடி, சிகரெட், பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களால் புற்றுநோய்க்கு உள்ளாகி உலகம் முழுவதும்  கோடிக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றன. இதுதவிர புற்றுநோய்சார்ந்த இறப்புகளில் 40 சதவீதம் புகையிலை பழக்கத்தால் உண்டாவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

    இப்படி அடுத்தவர்கள் வெளியிடும் பீடி, சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, நுரையீரல் அழற்ச்சி நோய் போன்றவை படிப்படியாக ஏற்பட்டு இறுதியில் அது நுரையீரல் புற்றுநோயாக மாறி மரணத்தில் முடிவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகர் நரேஷ் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
    புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.
    புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.

    * புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.

    * புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.

    * 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.

    * மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.

    * ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
    புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. புகைப்பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்...
    எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால் புகைப்பதை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விட்டுவிட முடியும்.

    அத்துடன் இது கண்டிப்பாக கைவிட வேண்டிய ஒரு தீய பழக்கம். புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. உலக அளவில் அதிக மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான். புகைப்பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்...

    1. புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    2. வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

    3. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.

    4. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

    6. ‘இரண்டாவது உயிர்க்கொல்லி’ எனப் பெயர் பெற்றுள்ள புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானவர்கள் புகையிலைப் பொருட்களால் உயிரிழந்துள்ளனர்.

    7. புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகின்றனர். 
    கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை உடனடியாக அமலுக்கு வந்தது என்று அந்த மாநில மந்திரி யு.டி.காதர் அறிவித்தார். #Karnataka #SmokingBan
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது. புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, மாநில அரசு கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 30-க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும் மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் அங்கு 18 வயது நிரம்பாதவர்கள், புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் மதுபானம், அனைத்து வகையான தின்பண்டங்களை விற்கக்கூடாது. தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதை மீறினால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
    திருவொற்றியூரில் குப்பைகளை எரித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது. #garbageburning
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே பல ஏக்கர் ரயில்வே நிலம் உள்ளது. இங்கு காலியாக உள்ள இடத்தில் மாநகராட்சியும் , தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், தொடர்ந்து குப்பை கொட்ட கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர். #garbageburning

    உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் மரடோனா புகை பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார். #Maradona #Argentina
    கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா புகழின் உச்சத்தில் இருந்த அவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டவர். ஊக்க மருந்து உள்பட பல விவகாரங்களில் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனாலும் அவரை கால்பந்து ரசிகர்கள் வெகுவாக நேசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மரடோனா புதிய சர்ச்சையில் சிக்கினார். அர்ஜென்டினா- ஐஸ்லாந்து மோதிய ஆட்டத்தை அவர் நேரில் ரசித்தார். பார்வையாளர் மாடத்தில் இருந்த மரடோனா புகையை பிடித்தவாறு போட்டியை ரசித்தார். உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் 12 மைதானங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மரடோனா அதையும் மீறி புகை பிடித்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து மரடோனா தனது முகநூல் பக்கத்தில் புகை பிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்.   #Maradona #Argentina
    ×