search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பழக்கம்"

    • ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். 
    • நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன்.

    பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது.


    ஒருமுறை மகளுக்கு தெரியாமல் புகைபிடிக்கும் போது எவ்வளவுநாள் இப்படியே இருப்போம். இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவு செய்தேன். இனி மகளிடம் இருந்து மறைக்க விரும்பாததால் அந்த புகைப்பழக்கத்தை கைவிட்டு விட்டேன் என்று ஷாஹித் கபூர் கூறினார்.


    ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். இவர்களுக்கு மிஷா (வயது7), ஜைன்(வயது4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
    • சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    பொது இடங்களில் புகைப்பிடித்தலோ, புகை–யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட–னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப் பட்டாலோ, உறுதி செய்யப் பட்டலோ உடனடி அபரா–தமாக முதன்முறையாக ரூ.100, மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக் கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்ப–டுத்துவதில்லை.

    புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளா–வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், காச–நோய், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட் டினால் உயிரிழக்கின்றனர்.

    பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப் பான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்க–ளிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரையரங்கு–கள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியு–டன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப் பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக புகையிலையை ஒழிக்கும் விதமாக இன்று புகையிலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. #NoTobacco #WorldNoTobaccoDay
    புதுடெல்லி:

    உலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படுவது புகையிலை. இதனால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

    உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


    ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.


    புகையிலை பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் ஆர்.என். ஷரன், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வரும் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு என கூறினார்.

    இதற்கிடையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். #NoTobacco #WorldNoTobaccoDay
    ×