search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது இடங்களில் புகை பிடிபிடிப்பது அதிகரிப்பு
    X

    புகை பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு.

    பொது இடங்களில் புகை பிடிபிடிப்பது அதிகரிப்பு

    • பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
    • முதன்முறையாக ரூ.100 மீண்டும், அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொது இடங்களில் புகைப்பி டித்தலோ, புகை யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டாலோ உடனடி அபராதமாக முதன்முறையாக ரூ.100. மீண்டும், அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்படுத்துவதில்லை. சில இடங்களில் போலீ சாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது.

    இவ்விஷயத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லாததால் டீக்கடை, பொது இடங்களில் பலரும் புகைக்கின்றனர். புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரி விக்கின்றன.நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், டி.பி., மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர்.

    பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரை யரங்குகள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது. பொது இடங்களில் புகைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், தற்போது தியேட்டர், பஸ்க ளில் புகைப்பதை காண்பது அரிதான காட்சியாக மாறியது.

    பொது இடங்களில் புகைப்போர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பொது இடங்களில் புகைக்கும் பழக்கம் குறைந்திருந்தது. சில ஆண்டுகளாக அறவே நடவடிக்கை இல்லாததால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் பொது இடங்களில் புகைப்போர் அதிகரித்துள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுத்து புகை பிடிப்போருக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×