search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Side Dish"

    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
    • கொள்ளு அதிக சூடு நிறைந்தது. தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 1 கப்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,

    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,

    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,

    கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - 1 தேக்கரண்டி,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    செய்முறை

    * கொள்ளுவை மலர வேகவிடவும்.

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்புப்போடவும்.

    * வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும்.

    * மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறலாம்.

    * இப்போது சூப்பரான கொள்ளு மசாலா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • இந்த தொக்கு 2 நாட்கள் வரை கெட்டு போகாது.

    தேவையான பொருட்கள் :

    நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

    உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள்,

    இளம் இஞ்சி - 25 கிராம்,

    மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 100 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு சற்று வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடி பிடித்து விடும்.

    தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,

    சர்க்கரை - 1 கப்,

    மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,

    இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

    எலுமிச்சை பழம் - 1.

    செய்முறை:

    மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).

    நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இது பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரா இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நீண்ட கிளி மூக்கு மாங்காய் - 3,

    சர்க்கரை - 100 கிராம்,

    தோல் நீக்கி, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - கால் டீஸ்பூன்,

    தேன் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும்.

    மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.

    இப்போது சூப்பரான மாங்காய் முரப்பா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,

    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,

    பச்சை மிளகாய் - 2,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • தோசை, சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வேகவைத்த முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து தக்காளி சேர்த்து, பாதி வதங்கியதும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கரம் மசாலா தூள் போட்டு கிளறவும்.

    * அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில், 10 நிமிடம் கொதிக்கவிடவும்/

    * 10 நிமிடம் கழித்து, இதில் வேகவைத்த முட்டையை துருவி சேர்க்கவும்.

    * நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சுவையான முட்டை கீமா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 4

    வெங்காயம் - 1 பெரியது

    தக்காளி - 2 சிறியது

    இஞ்சி பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும்.

    அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரம் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கோவக்காய் - 1 கப்

    தக்காளி - 3

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சீரகம் - சிறிதளவு

    மிளகாய்த்தூள் - சிறிதளவு

    உப்பு - சுவைக்கேற்ப

    கரம் மசாலா தூள் - சிறிதளவு

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)

    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய் - 1 பத்தை

    செய்முறை :

    * கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

    * வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    * தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

    * அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும்.

    * அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    * சூப்பரான கோவக்காய் சப்ஜி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
    • முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    வெங்காயம் - 1

    பூண்டு - 5 பல்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 10

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு

    எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)

    புளி தண்ணீர்- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.

    * பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.

    * அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    * வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.

    * இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.

    * இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் இது.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

    ஓமம் - ½ டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.

    பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும். அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

    முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.

    • ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
    • அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கைப்பிடி

    தேங்காய் - கால் மூடி

    சிவப்பு மிளகாய் - 7

    பூண்டு - 6 பல்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

    கொள்ளு துவையல் தயார்.

    கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ

    எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)

    ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி

    முட்டை - மூன்று

    வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

    பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

    மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

    மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

    ×