search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sabji"

    • முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன.
    • முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

    ஓமம் - ½ டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.

    பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும்.

    அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

    முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரம் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கோவக்காய் - 1 கப்

    தக்காளி - 3

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சீரகம் - சிறிதளவு

    மிளகாய்த்தூள் - சிறிதளவு

    உப்பு - சுவைக்கேற்ப

    கரம் மசாலா தூள் - சிறிதளவு

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)

    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய் - 1 பத்தை

    செய்முறை :

    * கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

    * வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    * தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

    * அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும்.

    * அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    * சூப்பரான கோவக்காய் சப்ஜி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் இது.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

    ஓமம் - ½ டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.

    பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும். அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

    முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.

    • சப்ஜி வட மாநிலங்களின் உணவு வகையாகும்.
    • இன்று வெங்காய சப்ஜி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 5

    சின்ன வெங்காயம் - 10

    பச்சை மிளகாய் - 4

    பூண்டு - 5 பற்கள்

    இஞ்சி - 1/2 துண்டு

    எண்ணெய் - 4 தேக்கரண்டி

    பட்டை - 2 துண்டு

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    சோம்பு - 1/2 தேக்கரண்டி

    கடுகு -1/2 தேக்கரண்டி

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - 1 கொத்து

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தே.அ

    செய்முறை :

    * கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சின்ன வெங்காயம் (தோல் உரித்து), இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    * பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    * நன்கு வதங்கியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பிரட்டி வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே சுருங்க வதங்கி சுண்ட வேண்டும்.

    * 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.

    * நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை இருந்து இறக்கி பரிமாறவும்.

    * அவ்வளவுதான் ஆனியன் சப்ஜி ரெசிபி..!

    • நாண், இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சப்ஜியில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பன்னீர் - 150 கிராம்

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    உருளைக்கிழங்கு - 1

    குடைமிளகாய் - 1/2

    காலிஃபிளவர் நறுக்கியது - அரை கப்

    பட்டாணி - 1/2 கப்

    காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    பிரெஷ் கிரீம் - 1/2 கப்

    கசூரி மெதி, கொத்தமல்லி இலை - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, குடை மிளகாய், காலிஃபிளவர், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    மசாலா நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்

    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு
    வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    பன்னீர் - 100 கிராம்
    வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1
    முழு முந்திரிப்பருப்பு - 6
    கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    சீரகம், எண்ணெய், வெண்ணெய் - தாளிக்க



    செய்முறை :

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை சூடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பன்னீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், வெண்ணெய் போட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடித்த சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த் தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது, பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி விடவும்.

    சூப்பரான பாலக் - பன்னீர் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பட்டை - 2 துண்டு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை தனித்தனியா விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்ட தாளித்த பின்னர் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    மசாலா பொருட்கள் பச்சை வாசனை போனவுடன் ஊறிய ராஜ்மாவை சேர்த்து 7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ராஜ்மா சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×