என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Side Dish"
- சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
- தோசை, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கனவா மீன் - அரை கிலோ
வெங்காயம் - 1 சிறியது
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், சின்ன வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்..
* கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
* பின்பு கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
* அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும்.
* பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
* கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.
* கனவா மீன் மசாலா தயார்!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கடைகளில் வாங்கும் பீனட் பட்டரில் நன்மைகள் குறைவு.
- இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 2 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
* மிக்சியில் 1/2 கப் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
* அதே மிக்சியில் 2 கப் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
* அடுத்து எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* பிறகு அதில் தேன், உப்பு, சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.
* கடைசியாக கொரகொரப்பா பொடித்த வேர்க்கடலையை சேர்த்து ஒரு முறை மிக்சியில் சுற்றி கொள்ளவும்.
* இப்போது சுவையான பீனட் பட்டர் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சாம்பார், தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 250 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* சேனைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவிக்கொள்ளவும்.
* சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து சில நொடிகள் வறுத்து, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
* கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு.
- சூடான சாதத்தில் இந்த கூட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெந்தய கீரை - 2 கப்
பாசி பருப்பு - 5 மேஜைக்கரண்டி
தேங்காய் - கால் கப்
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -7
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசி பருப்பை நன்றாக கழுவி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வெந்த கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்த பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.
இப்போது சூப்பரான வெந்தய கீரை பருப்பு கூட்டு ரெடி.
அறவே கசப்புத்தன்மை தெரியாது. எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நார்த்தங்காயை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
- மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.
தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் - 5,
வெல்லம் - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
* வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.
* எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.
* நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று,
தேங்காய் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.
பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும்.
இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய் - 20,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
பொடி உப்பு - 200 கிராம்.
செய்முறை:
மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காயவிடவும்.
இதை துண்டுகள் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நாள் குலுக்கிக் கொள்ளவும்.
மூன்றாம் நாள் உப்பு நீரை வடித்து, மாங்காயை பெரிய தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.
பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்து காயவிடவும்.
இப்படி ஒரு வாரம் காயவிட்டு தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆனதும், ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது பானையில் போட்டு வைக்கவும்.
இது சீக்கிரம் கெட்டுப்போகாது.
தனியா - 1½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 6
காஷ்மீரி மிளகாய் - 4
செய்முறை:
வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை போட்டு, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வறுவலுக்குத் தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்பு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி அதில் சேர்த்துக் கிளறவும்.
அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.
சிறிது நேரம் கழித்து அந்தக் கலவையில் ஊற வைத்த கோழிக்கறியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கலக்கவும். கலவையில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை,
கோழிக்கறியில் ஏற்கனவே உப்பு போட்டு ஊற வைத்திருப்பதால், சுவைத்துப் பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பக்குவத்தில் சிறிது கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
ருசியான ஆந்திரா சிக்கன் வறுவல் தயார்.
இஞ்சி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.
இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.
தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.
சுவையான இஞ்சி துவையல் ரெடி..!
பழைய சாதம் - 1 கப்
முட்டை - 2
கடலை மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய கேரட் - 1
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
முதலில் பழைய சாதத்துடன், இரண்டு முட்டை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.
பின் இந்த கலவையுடன் கடலை மாவு, வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அவற்றை நன்றாக கலந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்
நன்றாக சிவந்து வந்தபின் பொரித்த பக்கோடாவை எடுத்து பரிமாறினால் சுவையான பக்கோடா தயார் ஆகிவிடும்.
சோயா பீன்ஸ் - அரை கப்
தக்காளி -1
சிறிய வெங்காயம் - 1 கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை, பூண்டு - தேவைக்கேற்ப
செய்முறை :
சோயாபீன்ஸை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சோயா பீன்ஸ், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு உப்பு, பூண்டு, பட்டை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வெந்தபின் அதனை மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் போதுமான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறலாம்.
சப்பாத்தி, தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கூட்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்