search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search"

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் பகுதியில் இயங்கிவந்த சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் விளைவாக அந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, பீகார் மாநில முதல்மந்திரியின் கோரிக்கைப் படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.



    இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை துவக்கினர். காப்பகத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்த சி.பி.ஐ விசாரணையை பாட்னா உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்தும், தீவைப்பு- கல்வீச்சு வீடியோ காட்சிகளை வைத்தும், போராட்டக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது.

    போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர். பொதுமக்கள் தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். அதில் லேசான காயம்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் 5,000 பேர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள். இதனால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி வெளித்தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடி போராட்டத்தில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்தும், தீவைப்பு- கல்வீச்சு வீடியோ காட்சிகளை வைத்தும், போராட்டக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள். அதை வைத்து வீடு வீடாக போலீசார் சென்று தேடி வருகிறார்கள்.

    இதில் சிக்கியவர்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை வரை 67 பேர் பிடிபட்டனர். அவர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் ஆஸ்பத்திரிகளிலும் போலீசார் சோதனையிட்டு வருகிறார்கள். இதில் கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் பற்றியும் அவர்களின் உறவினர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சிலரை போலீசார் பிடித்து சென்றுள்ளனர். அவர்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலையிலும் சோதனை வேட்டை தொடர்ந்தது. இதுவரை 200 பேர் சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணைக்குப் பின்னர் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும், இப்போதைக்கு 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் கைது வேட்டையில் ஈடுபட்டு வருவதால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். #Thoothukudifiring
    ×