என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sapling"
- போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
- பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சாம ந்தான் பேட்டை தனியார் பள்ளியில் வன மகோத்சவ விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக வனச்சரகர் க. ஆதிலிங்கம், கலந்து கொண்டு வனங்க ளின் அவசியம் குறித்து பேசினார்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நெகிழிப்பைகள் பயன்பா ட்டை குறைப்பது எப்படி என்று மாணவர்க ளுக்கு எடுத்துரை த்தார்.
ரமேஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முடிவில் பள்ளி வளாகத்தில் வன வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
- தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில், கோடங்கி பாளையம் ஊராட்சி மன்றம், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மகிழ்வனம் என்ற பூங்காவை அமைத்து சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சோமு என்கிற பாலசுப்ரமணியம், முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பூபதி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு இன்ஸ்பெரா நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ், தாய்மண் அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் மகிழ்வன பூங்கா உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ராமகோவி ந்தன்காட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான வேதரத்தினம், நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலா ளர் அணி கோவிந்தசாமி அனைவ ரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, தி.மு.க. கிளை செயலாளர் ராஜதுரை தி.மு.க. கொடியேற்றினார். இதில் அவை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், மாவட்ட செயலாளர் கவுதமன் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், புடவை, வேஷ்டிகள் வழங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாணையின் படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேணுகோபால், ரமேஷ், ரவி மற்றும் பிரச் சாரக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை வளத்தை போற்றி பாது காக்கும் இந்த நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
- சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.
திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மரக்கன்று நடும் விழா நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி ஊராட்சி சின்ன ராமேஸ்வரம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 2500 மரக் கன்றுகள் நடப்பட்டது. அலங்காநல்லூர் பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, அத்தி உள்ளிட்ட 20 வகையான மர கன்றுகள் நட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, பேரூராட்சி தலை வர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, சாலை ஆய்வாளர்கள் பாஸ்கர், பாண்டி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கீரனூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
- மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீரனூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம், ஆசிரியர்கள் ரமேஷ், பாலகுமார், கபிரியேல், சோலைமுத்து மற்றும் மரமடக்கி பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும்் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர்.
- பெரம்பலூர் கலெக்டர் மனு கொடுக்க வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கினார்
- தன்னார்வ அமைப்பின் உதவியுடன் வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு 130 ஹெக்டர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் மட்டுமே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுமக்களும் தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கற்பகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக புதிய பயணம் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கும், பயனாளிகளுக்கும் கொய்யா மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் துணி பைகளும் வழங்கப்பட்டது.
- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
- ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இந்திய எல்லையை காத்த மாவீரன் ஹவில்தார் பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் விழா கழுகூரணி கிராமத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, அவரது குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், மரம் நடுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வள்ளுவன் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் அவரின் வீரத்தினையும், தேச பற்றினையும் நினைவு கூறும் வகையில் நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்தூபியினை இந்த மூன்றாவது ஆண்டிலாவது தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதுக்ேகாட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- விழாவில் அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை - திருமயம் சாலையில், வெள்ளாற்றின் அருகில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட 15,000 மரக்க ன்றுகள் நெடுஞ்சாலைத்து றையின் மூலம் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருச்சி - ராமநாதபுரம் சாலையில், புதுக்கோட்டையிலிருந்து திருமயம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் அருகில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படவுள்ள சுமார் 75 மரக்கன்றுகளுக்கு இணையாக 750 மரக்கன்றுகள் நடும்விதமாக, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவார் பொன். ராமலிங்கம், உதவி கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரபூபதி, உதவிப் பொறியாளர்கள் கார்த்திகேயன், செந்தில்குமரன், ரவீந்திரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
- அறந்தாங்கியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அறந்தாங்கி,
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக விக்னேஷ்வரபுரம், ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து, வட்டார தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் அசாருதீன், கிருபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் மோகன், சுந்தரராஜ், உதவிப் பொறியாளர்கள் சுபாஷினி, அருண்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்:
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூர் பகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் உத்தண்டி, ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், உதவி கோட்ட பொறியாளர் பி.கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், கண்காணிப்பாளர் செந்தில், சாலை ஆய்வாளர்கள் கவிதா, சுமத்ரா, சுஜாதா, மரியசூசை,ஒன்றிய அவைத்தலைவர் குணசேகரன், கிளைக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்