search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sales"

    • வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.இன்று காலை கடலூரை சுற்றியுள்ள விவசாயிகள், காய்கறிகள் மற்றும் வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    கடலூர் காரைக்காட்டை சேர்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள், பாலூர் பகுதியில் இருந்து வாழை இலைகளை அறுத்து அதனை கட்டுகளாக கட்டி விற்பனைக்காக உழவர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார். அப்போது வாழை இலை கட்டுகளில் இருந்து பாம்பு வெளிவந்து, மீண்டும் உள்ளே சென்று விட்டது. இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார். வாழை இலை கட்டுகளை பிரித்துப் பார்த்து, அதற்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ21.52 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது
    • 12 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் 42.91 1/2 குவிண்டால் எடை கொண்ட 12 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.24.69-க்கும், சராசரி விலையாக ரூ.27.89-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.

    அதேபோல் 241.86 குவிண்டால் எடை கொண்ட516-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.85.89-க்கும், சராசரி விலையாக ரூ.90.59-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.99-க்கும், சராசரி விலையாக ரூ.87.89-க்கும் என மொத்தம் ரூ.20லட்சத்து35ஆயிரத்து037 -க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 21 லட்சத்து52 ஆயிரத்து 862-க்கு விற்பனையானது.

    • காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முத்தூர்:

    காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

    நேற்று கூடிய வார சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், தக்காளி கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றமாக உள்ளது. மேலும் வரும் வாரங்களில் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
    • அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
    • அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    முத்தூர்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 35 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும்.
    • உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    அடுத்த மாதம் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. தரமான பொருள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட த்தில், உணவு பாதுகாப்பு த்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்

    புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மற்றும் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், தயாரிக்கப்பட்ட இனிப்பு கள், காரம், எண்ணெய், நெய், பாசிப்பரு ப்பு, கடலைப்பருப்பு, கடலை மாவு, போன்ற பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொ ருட்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உணவு விற்பனை நிலையங்களில் உணவு மாதிரிகளாக எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.

    ஒரு உணவு விற்பனை நிலையத்தை நியமன அலுவலர் புஷ்பராஜ், உணவு பாதுகா ப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, தயாரிப்பு விபரம் முறையாக இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்ப ட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கைப்ப ற்றப்பட்டு, முழுமையான விபரத்துடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் மீண்டும் நிறுவன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து நியமன அலுவலர் புஷ்பராஜ் அளித்த பேட்டியில்,

    இனிப்பு , கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும். உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படு த்தக்கூடாது. உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை மேற்கொள்ளும் பகுதி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

    அனைத்து உணவு விற்பனையாளர்களும் உரிமம் , பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ஐ மீறுபவர்கள்மீது கடுமையா ன நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது புட்சேப்டி ஆப் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்தாரர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    • சங்கராபுரம் அருகே சாராயம், மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் தலைமையில் போலீசார் மோட்டாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் விஜயகாந்த் (வயது 32) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று சங்கரா புரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீ சார் பூட்டை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த சிவா (33) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.
    • மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம்.
    • பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர்.

    கடலூர்:

    நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டில் பொறி, அவல் கடலை, பழ வகைகள் போன்றவற்றை வைத்து படைத்தும், வாகனங்களில் வாழை மரங்கள் கட்டி கோவிலுக்கு சென்று வாக னங்களை படைத்தும், வீட்டில் படைத்தும் மற்றும் வணிக நிறுவனங்கள் கடை களில் வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம். இந்த நிலையில் கடலூர் பகுதிகளில் நாளை ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதச மியை முன்னிட்டு டன் கணக்கில் ஆயிரக்கணக் கான வாழைத்தார்கள் குவிந்து உள்ளது.

    இதன் காரணமாக இன்று காலை முதல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர். இதில் 150 முதல் 300 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடலூருக்கு வழக்கமாக 2 டன் வாழைத் தார்கள் வந்த நிலையில் விழாக்காலம் என்பதால் 4 டன் வரை தற்போது வாைழத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் நாளை ஆயுத பூஜை என்பதால் வாழ்த்தார்கள் அதிகளவில் வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார். 

    • நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • காய்கனி விற்பனை வண்டி ரூ.15000 மானியத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி, பழக்கன்றுகள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.

    தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கனி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ரூ.15000 மானியத்தில் இலவசமாக 11 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வட்டாரத்தில் 12 கிராமங்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அவற்றில் ஒரு கிராமத்திற்கு தலா 300 வீதம், ஒரு தொகுப்பிற்கு ரூ. 150 மதிப்பில் 75 சதவீத மானியமாக பழக்கன்று தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி பரப்பினை அதிகரிக்க 75 சதவீதம் மானியத்தில் ரூ.10000 மதிப்பில் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    மேலும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு ரூ .900 மதிப்புள்ள 6 செடி வளர்க்கும் பைகள், 12 கிலோ தேங்காய் நார்கள், 6 காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவை 50 சதவீதம் ரூ. 450 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று தோட்டக்கலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்கு நர்கள் முத்தமிழ்ச்செல்வி, கனிமொழி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வெங்கடாசலபதி, தர்மதுரை, ராஜ்குமார், கரிகாலன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காங்கயம் காவல் துறையினா் அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் விற்பனை செய்ததாக 10 கடைகளுக்கு 'சீல் வைத்ததுடன், ரூ.43 ஆயிரம் அபராதமும் விதித்தனா். மேலும், இதே போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

    • 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
    • விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    திருப்பூர்: 

    ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியாா் நெல் விதை உற்பத்தி, விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு, பவானி, கோபி, தாராபுரம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

    இதில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு விலை, உண்மை நிலை விதைகளுக்கான ஆவணங்கள், முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை உள்ளிட்டவற்றை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதை இருப்புக்கும், புத்தக இருப்புக்கும் உள்ள வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா்-முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனை தொடா்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் மற்றும் விதைக் கட்டுப்பாடு ஆணையத்தின்படி விதிமீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். 

    ×