search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakshi Agarwal"

    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்‌ஷி அகர்வால்.
    • சாக்‌ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    சாக்‌ஷி அகர்வால்

    சாக்‌ஷி அகர்வால்

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


    • ஆறாவது வனம் படத்தை இயக்கிய இயக்குனர் ரங்கா புவனேஷ்வர் இயக்கி உள்ள படம் ‘கெஸ்ட் : சாப்டர்-2’.
    • இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "ஆறாவது வனம்" என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகவுள்ள படம் 'கெஸ்ட் : சாப்டர்-2'. சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள  இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சியான் கவனிக்கிறார். இந்த படத்தை குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் டி.கோகுலகிருஷ்ணன் தயாரிக்கவுள்ளார்.

    சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    சாக்‌ஷி அகர்வால்

     இந்த படம் குறித்து இயக்குனர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, "இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது.

    இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎஃப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. மேலும் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.

    சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சாக்ஷி அகர்வால்

    சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக ‘தி நைட்’ என்னும் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

    சாக்ஷி அகர்வால்

    தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டப்பிங் பணிக்காக அடாத மழையில் தண்ணீர் நடந்து சென்று தனது வேலையை முடித்து இருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டுள்ளார்.
    உலக பசி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டார். 

    அதன்பின் பேசிய சாக்‌ஷி அகர்வால், ‘உலகில் நிறைய பேர் பசியால் இறந்து போகிறார்கள். உலக பசி தினத்தை உலகம் முழுவதும் யாரும் கொண்டாட கூடாத நிலையை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினால் பசி என்ற வார்த்தையை இல்லாமல் ஆக்கலாம்’ என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, ஊட்டி விட்டு அவர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார். 
    காலா, விஸ்வாசம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
    ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் இருந்து,

    "ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும்.



    அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த காமெடி படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறேன்.

    தற்போது திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்" என்றார்.

    வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்ற நாடகம் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படமாகிறது. 

    இப்படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு திரை வடிவம் கொடுத்து  இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் இயக்குநர் அனீஸ். இவர் ஏற்கெனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை இயக்கியவர்.



    ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு 96 புகழ் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கதாநாயகர்களாக சதீஸ் நீநாசம், சரண் சஞ்சய்யும் நடிக்கிறார்கள். தற்போது கதாநாயகியாக சாக்‌ஷி அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
    மாடல் அழகியும், நடிகையுமான சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். #SakshiAgarwal
    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்தார். மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்த இவர் அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருந்தார்.

    இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதிலில் ஈடுபட்டிருந்தார். இதில் ரசிகர்கள் பலரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு வாழ்த்துகளையும், காதலையும் வெளிபடுத்தி இருந்தார்கள்.



    இதில் ஒருவர் யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்க, அதற்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். 
    அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகையாக உணர்ந்த தருணம் என்று கூறியிருக்கிறார். #SakshiAgarwal #Ajith
    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகையான இவர், தற்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.



    அதில், ‘அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என்று அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் பதிவு செய்திருக்கிறார்.
    சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு நடிகை ஒருவரும் இணைந்திருக்கிறார். #Viswasam #AjithKumar
    ராஜா ராணியில் ஒரு சின்ன வேடம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாக்‌ஷி அகர்வால். தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்தவர் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருக்கிறார். 

    ரஜினியுடன் நடிப்பதை தொடர்ந்து, அடுத்ததாக அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் இணைந்திருக்கிறாராம். சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதுவரை அஜித்தின் வயதான கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு நடந்தது. 

    அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பையில் விரைவில் துவங்க இருக்கிறது. அதில் அஜித் இளமையான தோற்றத்துக்கு மாற இருக்கிறார். அதில் சாக்‌ஷி அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளமையான அஜித்துக்கு ஜோடியாக சாக்‌ஷி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 



    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். #Viswasam #AjithKumar #Nayanthara #SakshiAgarwal

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்‌ஷி அகர்வால், நான் அஜித்தின் தீவிர ரசிகை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ajith #SakshiAgarwal
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

    இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.



    சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நான் அஜித்தின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை’ என்றார். 
    இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது கடவுள் கொடுத்த பரிசு என்று நடிகை சாக்‌ஷி அகர்வால் கூறியிருக்கிறார். #Kaala #SakshiAgarwal
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார்.

    இப்படம் குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும்போது, ‘ரஜினி சார் படத்தில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் வெளிநாடுக்கு சென்ற போது அங்கு இருப்பவர்கள் ரஜினியை பார்த்திருக்கீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது நான் பார்த்ததில்லை என்று கூறினேன். ஆனால், இப்போது அவருடன் படத்திலேயே நடித்திருக்கிறேன் என்பது கடவுள் கொடுத்த பரிசாக கருதுகிறேன். ரஜினியின் நடிப்பை கண்டு பிரமித்தேன். முதலில் அவருடன் நடிக்க பயந்தேன். பின்னர், அவருடன் பழகிய பிறகு அந்த பயம் போய் விட்டது.



    இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானா பட்டேகர் மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் என்னுடன் பேசிக்கொண்டே, ஒரு படம் வரைந்தார். அது அந்த படப்பிடிப்பு தளத்தின் செட்டை அப்படியே பத்து நிமிடத்தில் வரைந்தார். நான் பேசுவதை கவனித்துக் கொண்டே படத்தையும் திறமையாக வரைந்தார். இவருடைய நடிப்பு வேற லவலில் இருந்தது.

    இயக்குனர் பா.இரஞ்சித் தான் இப்படத்தின் தலைவன். இவர் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருப்பார். அதுபோல், இந்த படத்திலும் அனைவருக்குமே சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எனக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது நீங்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். நான் யாருக்கு ஜோடி என்பதையும் தற்போது சொல்ல முடியாது.



    படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் தனுஷை படப்பிடிப்பின் போது நான் பார்க்கவே இல்லை. ஆனால், இசை வெளியீட்டு விழாவில் தான் பார்த்து பேசினேன். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். இவரது நடிப்பு ஹாலிவுட் வரை சென்றிருப்பது பெருமை.

    காலா திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. ஜூன் 7ம் தேதி ரசிகர்களை போல் நானும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்றார்.
    ×