search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia World Cup 2018"

    காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இங்கிலாந்து - கொலம்பியா, சுவீடன் - சுவிட்சர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ், உருகுவே, போட்டியை நடத்தும் ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம் ஆகிய 6 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய அணிகள் நாக்அவுட் சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    காலிறுதியில் நுழையும் எஞ்சிய 2 அணிகள் எவை என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியும். இன்றுடன் 2-வது சுற்று ஆட்டங்கள் முடிகிறது. இரவு 7.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    சுவீடன் அணி ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோ (3-0) அணிகளை வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியிடம் (1-2) தோற்று இருந்தது. சுவிட்சர்லாந்து தோல்வி எதையும் சந்திக்கவில்லை. செர்பியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. பிரேசிலுடன் 1-1 என்ற கணக்கிலும், கோஸ்டா ரிகாவுடன் 2-2 என்ற கணக்கிலும் ‘டிரா’ செய்து இருந்தது.

    இரு அணிகளும் உலகக்கோப்பையில் மோத இருப்பது இது முதல் முறையாகும். கடைசியாக மோதிய 3 ஆட்டத்தில் சுவீடன் 1-ல் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. கால்இறுதியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதுகின்றன. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1), அணிகளை வீழ்த்தி இருந்தது. பெல்ஜியத்திடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அந்த அணியில் கேப்டன் ஹாரி கேன் (5 கோல்), லிங்கார்டு, ஸ்டோன்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.



    கொலம்பியா 3-0 என்ற கணக்கில் போலந்தையும், 1-0 என்ற கணக்கில் செனகலையும் வீழ்த்தி இருந்தது. 1-2 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று இருந்தது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று கால் இறுதியில் நழைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கொலம்பியா சுவிட்சர்லாந்து அணிகளும் கடுமையாக போராடும்.



    நாளையும் (4-ந்தேதி), நாளை மறுநாளும் (5-ந்தேதி) ஓய்வு நாளாகும். 6 மற்றும் 7-ந்தேதிகளில் கால் இறுதி நடக்கிறது. 6-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் உருகுவே-பிரான்ஸ் (இரவு 7.30 மணி) பிரேசில்- பெல்ஜியம் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதியில் ரஷியா- குரோஷியா மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மோதுவது யார் என்பது இன்று தெரியும். இன்றைய ஆட்டங்களில் வெல்லும் அணி கால் இறுதியில் மோதும்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 - 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.

    மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  

    அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    பெல்ஜியம் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    ரஷியாவிடம் தோல்வியடைந்ததால், சர்வதேச போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஓய்வு பெற்றுள்ளார். #WorldCup2018 #Iniesta
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ரஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்திலும், அதன்பின் வழங்கிய 30 நிமிட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷியா 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    அனுபவ வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இருந்தே தடுமாறியது. அந்த அணியின் முன்னணி வீரர்களின் மீது எழுந்த கடும் விமர்சனைத்தை தொடர்ந்து 34 வயதான இனியஸ்டா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



    இவர் ஸ்பெயின் அணிக்காக 131 போட்டிகளில் விளையாடி 13 கோல்கள் அடித்துள்ளார். 2002-ல் இருந்து இந்த சீசன் வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த இனியஸ்டா, 442 போட்டிகளில் 35 கோல்கள் அடித்துள்ளார். இவர் தலைசிறந்த மிட்பீல்டர் ஆவார்.
    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 10 ஓன் கோல் விழுந்துள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக்அவுட் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற ஸ்பெயின் - ரஷியா இடையிலான ஆட்டத்தின்போது பிரான்ஸ்க்கு முதல் கோல் ஓன் கோல் மூலம் கிடைத்ததாகும். இந்த கோல் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ரஷியா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் முறையில் ரஷியா வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பையில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.



    இந்த உலகக்கோப்பையில்தான் அதிக அளவு பெனால்டி கொடுக்கப்பட்டது. அதேபோல் அதிக ஓன் கோல் விழுந்ததும் இந்த உலகக்கோப்பையில்தான். இதுவரை 10 ஓன் கோல் போடப்பட்டுள்ளது. இதற்கு முன் 1998-ல் 6 ஓன் கோலும், 2014-ல் 5 ஓன் கோலும், 2006 உலகக்கோப்பையில் 4 ஓன்கோலும், 1954 உலகக்கோப்பையில் 4 ஓன்கோலும் விழுந்தது. தற்போது அனைத்தையும் மிஞ்சிவிட்டது ரஷியா உலகக்கோப்பை.
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். #WorldCup2018 #SPARUS #SpainvRussia
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
      
    கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இடையே மழை பெய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ரஷியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெயின் - ரஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதிபர் புதின் கண்டுகளித்தார். சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார். #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது. #WorldCup2018 #CRODEN #CroatiavDenmark
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின்  மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இறுதியில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா அணி பயன்படுத்தவில்லை. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் டென்மார்க் அடித்த முதல் வாய்ப்பை கோலை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கோலையும் டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக் மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

    டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.

    டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.  குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.

    டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது. #WorldCup #CRODEN #CroatiavDenmark #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    குரோஷியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 1-1 சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #CRODEN #CroatiavDenmark
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது.

    இதையடுத்து முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #CRODEN #CroatiavDenmark #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் ரஷியா அணி 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #SPARUS #SpainvRussia
    ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதிய்ல் இரு அணிகளும்  1-1 என சமநிலை வகித்தன.
     
    கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்பொழுது மழை பெய்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. முதலில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்தது.

    அதற்கு பதிலடியாக ரஷியாவும் ஒரு கோல் அடித்தது. மறுபடியும் ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 2-1 என ஆனது. ரஷியா மறுபடியும் கோல் அடிக்க 2-2 என சமனானது.

    அடுத்த வாய்ப்பை ஸ்பெயின் அடித்த கோலை கோ கீப்பர் தடுத்தார். ரஷியா தனது அடுத்த வாய்ப்பை கோல் அடித்ததால் 2-3 என்ற கணக்கில் முன்னேறியது. ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 3-3 என சமனானது.

    அடுத்து கோல் போட்டதால்  ரஷியா 3-4 என முன்னேறியது. இறுதியாக ஸ்பெயின் கோல் தடுக்கப்பட்டதால் 4-3 என்ற கணக்கில் ரஷியா வென்றது. #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #ARGFRA #ArgentinavsFrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.



    ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மபாப்பி 64 மற்றும் 68-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

    கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்தார்.
      


    இதையடுத்து, பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. லியோன் மெஸ்சியின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. #ARGFRA #WorldCup #ArgentinavsFrance #LionelMessi #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றின் முதல் பாதியில் அர்ஜெண்டினாவும், பிரான்சும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #ARGFRA #ArgentinavsFrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.



    ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜ்ண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. #ARGFRA #WorldCup #ArgentinavsFrance #LionelMessi #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
    செனகலை விட இரண்டு மஞ்சள் அட்டை குறைவாக பெற்றிருந்ததால் அதிர்ஷ்டத்தால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘எச்’ பிரிவில் எந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1-0 என வெற்றி பெற்றது. அதேவேளையில் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்றது.

    இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா நான்கு புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே நான்கு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது, இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் வாங்கியிருந்தன.



    இதனால் கோல் அடிப்படையிலும் இரு அணிகள் சமநிலை பெற்றிருந்தன. இதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது. இதில் செனகலுக்கு சறுக்கல் ஏற்பட்டது. செனகல் 6 எல்லோ கார்டு பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 எல்லோ கார்டுதான் பெற்றிருந்தது.

    இதனால் அதிர்ஷ்டம் மூலம் ஜப்பான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    ×