search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rishabh Pant"

    • பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார். பந்த் அணி வீரர்களுடன் மீண்டும் இணைவதையும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தொடர்புகொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
    • ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் வருகிற ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

    இந்நிலையில் தற்போது அவர் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இனி நல்லதே நடக்கும் என தலைப்பிட்டிருந்தார். மிஸ் யூ ரிஷப் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • அழுத்தமான பெரிய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் ஆவர்.
    • இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்படும் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

    டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய கேம் சேஞ்சர்ஸ் பென் ஸ்டோக்ஸ், ஜடாஜா, ரிஷப் பண்ட், ஸ்மித், நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

    மேலும் கூறியதாவது:- அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் ஆகியோர் ஆவர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார்.

    அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9000-க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார்.

    இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.
    • இந்த வீடியோவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தொடருங்கள் ரிஷப் என கமெண்ட் செய்திருந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.


    ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு குணமடைந்து வருவதாக தெரிவித்து வந்தார்.


    இந்நிலையில் அவர் படியில் நடந்து வருவது போல உள்ள வீடியோ பதிவிட்டுள்ளார். சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தொடருங்கள் ரிஷப் என கமெண்ட் செய்திருந்தது.

    • மும்பை அணிக்கு எதிராக சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்தார்.
    • இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலியின் சாதனையை கில் சமன் செய்வார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 2-வது குவாலிபையர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் எடுத்துக் கொடுத்ததன் மூலமாக அந்த அணி 233 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் 129 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் எடுத்த 128 ரன்கள் (நாட் அவுட்) சாதனையை கில் முறியடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிராக சுப்மன் கில் 104 ரன்கள் (நாட் அவுட்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்துள்ளார். இப்படி ஒரே சீசனில் 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நாளை சென்னைக்கு எதிராக நடக்கும் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் ஒரு சீசனில் 4 சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:-

    132* - கேஎல் ராகுல் (பஞ்சாப்) ஆர்சிபிக்கு எதிராக (துபாய்) 2020

    129 - சுப்மன் கில் (குஜராத்) மும்பைக்கு எதிராக (அகமதாபாத்) 2023

    128* - ரிஷப் பண்ட் (டெல்லி) ஐதராபாத்க்கு எதிராக (டெல்லி மைதானம்) 2018

    127 - முரளி விஜய் (சிஎஸ்கே) ராஜஸ்தானுக்கு எதிராக (சென்னை) 2010

    • டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்ததால் அந்த அணிக்கு தனது ஆதரவை பண்ட் தெரிவித்து வருகிறார்.
    • வீரர்களின் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை நான் பார்த்தேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.

    இதனால், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஆனால், அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்ததால் அந்த அணிக்கு தனது ஆதரவை பண்ட் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், ரிஷப் பண்ட் கூறுகையில், "நான் குணமடைந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் குணமடைந்து வருகிறேன். நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்தேன் அங்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் இருந்தனர். ஆகையால் நான் அவர்களை சந்தித்தேன். வீரர்களின் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை நான் பார்த்தேன். நான் அணியினருடன் கலந்துரையாடினேன்" என்றார்.

    • டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • டெல்லி அணியின் வார்னர் 37 ரன்னில் அவுட்டானார்.

    புதுடெல்லி:

    16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லி அணி ஆடிக் கொண்டிருந்த போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் திடீரென மைதானத்துக்கு காரில் வந்தார்.

    அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு களித்தார். ரிஷப் பண்டை பார்த்த ரசிகர்கள் ஆரவார கோஷமிட்டனர். ரசிகர்களைப் பார்த்து ரிஷப் பண்ட் கையசைத்தார்.

    • ரிஷப் பண்ட்க்கு பதிலாக வங்காளத்தை சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசியுள்ளார்.

    கடந்த டிசம்பரில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய டெல்லி அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் ஐபிஎல் 2023 சீசன் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பணிகளை யார் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தற்போது அந்த இடத்தை அபிஷேக் போரல் நிரப்புகிறார். 25 வயதாகும் போரல், முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் காமடைந்திருக்கும் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு பதிலாக வங்காளத்தை சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ள அபிஷேக் போரல், அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

    தற்போது அணியில் இடம்பிடித்திருக்கும் அண்கேப்ட் விக்கெட் கீப்பர்களான ஷெல்டன் ஜாக்சன், லுவ்னித் சிசோடியா, விவேக் சிங் ஆகியோருடன் அபிஷேல் போரலும் இணைந்துள்ளார்.

    இவரது பயிற்சி மற்றும் உடல்தகுதியை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தலைமை இயக்குநர் செளரவ் கங்குலி ஆகியோர் நன்கு கண்காணித்து வருவதாக கூறப்படும் நிலையில், பண்ட்க்கு மாற்று வீரராக களமிறக்க உத்தேசித்துள்ளதாக அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பெங்கால் உள்ளூர் கிரிக்கெட் சிறப்பான கீப்பிங் மற்றும் பேட்டிங் மூலம் நன்கு கவனம் ஈர்த்த போரலை, இந்த சீசன் முழுவதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி அணி தனது முதல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை ஏப்ரல் 1-ம் தேதி எதிர்கொள்கிறது.

    • ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார்.
    • ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டரில், இந்த சாம்பியன் மீண்டும் எழப் போகிறார். இவர் எப்போதும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய பண்ட் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
    • கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் நீச்சல் குளத்தில் நடைபயிற்சி செய்யும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
    • இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.

    நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

    பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.

    நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

    5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,920 ரன்கள் எடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவிக்கும் பண்ட் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 1,920 ரன்கள் எடுத்துள்ளார். 

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த்துள்ளார்.

    இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:

    ரிஷப் பண்ட் 100-க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்றால் சாதனை புத்தகங்களில் அவரது பெயர் பொறிக்கப்படும். 11 வீரர்கள்தான் இந்தியாவில் இதை சாதித்துள்ளனர். அவர்களின் பெயர்களை நாம் நினைவுகூர முடியும்.

    விராட் கோலி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் தெரியுமா? ஏனெனில் 100-150 டெஸ்ட்கள், ஏன் 200 டெஸ்ட்களை ஆடினார் என்றால் சாதனை புத்தகத்தில் இருந்து அவர் பெயரை யாரும் அழிக்க முடியாது என தெரிவித்துள்ளார் .
    ×