என் மலர்
நீங்கள் தேடியது "DCvGT"
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 93 ரன்கள் அடித்தார்.
- 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். .
இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார்.
143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.
- டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 199 ரன்களை குவித்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அபிஷேக் பொரெல் 30 ரன்னும், அக்சர் படேல் 25 ரன்னும், ஸ்டப்ஸ் 21 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.
சாய் சுதர்சன் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணியின் 5வது தோல்வி இதுவாகும்.
- டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- டெல்லி அணியின் வார்னர் 37 ரன்னில் அவுட்டானார்.
புதுடெல்லி:
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி அணி ஆடிக் கொண்டிருந்த போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் திடீரென மைதானத்துக்கு காரில் வந்தார்.
அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு களித்தார். ரிஷப் பண்டை பார்த்த ரசிகர்கள் ஆரவார கோஷமிட்டனர். ரசிகர்களைப் பார்த்து ரிஷப் பண்ட் கையசைத்தார்.
- டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 162 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். சர்ப்ராஸ் கான் 30 ரன்னும், அபிஷேக் பொரெல் 20 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடி 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்குகிறது.
குஜராத் சார்பில் ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது போட்டியாகும்.
- டாஸ் தோற்றது நல்லதுதான் எனத் தெரிவித்துள்ளார் ரிஷப் பண்ட்.
டெல்லியில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டி இதுவாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது ஐபிஎல் போட்டியாகும்.
டாஸ் தோற்றது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் "டாஸ் தோற்றது நல்லதுதான். நாங்கள் முதலில்தான் பேட்டிங் செய்ய விரும்பினோம்" என்றார்.
டாஸ் வென்ற சுப்மன் கில் "இது சிறந்த ஆடுகளம் போன்று தெரிகிறது. நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த வகையில் சேஸிங் செய்தோம்" என தெரிவித்துள்ளார்.






