search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rb udayakumar"

    • 50 ஜோடி ஏழை-எளிய மணமக்களுடன் தனது மகள் திருமணத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்துகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை நடத்தி வைக்கிறார்

    மதுரை

    50 ஏழை எளிய திருமண ஜோடியுடன் தனது மகள் திருமணத்தையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நாளை நடத்துகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    தமிழக அமைச்சரவையில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றியவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இவர், அ.தி.மு.க.வின் மாணவர் அணி, எம் .ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர்-இளம்பெண் பாசறை, அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளின் தலைமை பொறுப்பை வகித்து ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்.

    தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், திரு மங்கலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கட்சி பொறுப்பில் அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்து வருகிறார்.

    அமைச்சராக இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் கடந்த 2016-ம் ஆண்டு 80 ஜோடிகளுக்கும், 2018-ம் ஆண்டு 120 ஜோடிகளுக்கும் ஏராளமான சீர்வரிசைகளுடன் ஜெயலலிதா தலைமையில் திருமணத்தை நடத்தி காட்டியவர் உதயகுமார் எம்.எல்.ஏ.

    தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு பொன்விழா கொண்டா ட்டத்தையொட்டி 51 ஜோடி களுக்கு எளிமையான முறையில் திருமணங்களை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் நாளை(23ந்தேதி) காலை நடைபெறு கிறது. இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி- முரளி ஆகியோரின் திருமணமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 50 ஏழை எளிய ஜோடிகளுடன் தனது இல்ல திருமணத்தையும் ஆர்.பி. உதயகுமார் நடத்துகிறார்.இதற்காக திருமண புடவைகள், வேட்டிகள், தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைகளும் தயாராக உள்ளன.

    இந்த திருமணங்களை நடத்தி வைக்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகிறார். காலை 10 மணி அளவில் திருமணம் நடைபெறும் ஜெயலலிதா கோயில் திடலுக்கு வரும் அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அவரை வரவேற்க திருமங்கலம் முதல் டி.குன்னத்தூர் வரை அ.தி.மு.க.வினர் சாலையின் இரு புறங்களிலும் கொடி, தோரணங்களை கட்டி வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவியிலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்நின்று கவனித்து வருகிறார்.

    முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு பிரியதர்ஷினி- முரளி ஆகியோரது திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை காலை நடைபெறும் திருமண விழாவிலும் தங்கள் வீட்டு திருமண நிகழ்வாக கருதி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை நாகரீகமற்ற முறையில் பேசுவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 51 ஜோடிகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா ரூ.100 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.அதனை தொடர்ந்து பொங்கலுக்கு கரும்பை அம்மா வழங்கினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.

    2021-ம் ஆண்டில் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, கிஸ்மிஸ், முந்திரி ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்கினார். அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கினார்.

    பொங்கல் பரிசு என்பது மக்களுக்கு வாழ்வாதார திட்டமாகும். ஒரு கோடியே 86 லட்சம் பேருக்கு வேட்டிகளும், ஒரு கோடியே 86 லட்சம் பெண்களுக்கு சேலைகளும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    பொங்கல் தொகுப்பின் மூலம் நெசவாளர்களும் பயன் பெறுவார்கள், மக்களும் பயன்பெறுவார்கள். அதே போல் கரும்பு வழங்கும்போது விவசாயிகளும் பயன்பெறுவார்கள், மக்களும் பயன் பெறுவார்கள்.

    இந்த பொங்கல் தொகுப்பில் வேட்டி-சேலை திட்டத்தையும், கரும்பையும் இதில் அறிவிக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வெளி மார்க்கெட்டில் போதுமான விலை அவர்களுக்கு கிடைக்காது.

    முதல்-அமைச்சர் அறிவிக்காதது கரும்பு விவசாயிகள் மத்தியில் இன்றைக்கு கண்ணீரை வரவழைத்து உள்ளது. அதேபோல் ஆயிரம் ரூபாய் முதல்வர் அறிவித்திருப்பது, யானைபசிக்கு சோ ளப்பொரி போன்றதாகும். அதேபோல் பொங்கல் தொகுப்பில் கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்கள் அனைத்தும் கொடுப்பது மரபு ஆகும் பொங்கல் பொருட்களை குறைத்து விட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இந்த அரசு ஆதரவு அளிக்கவில்லை என்பது போல் உள்ளது.

    இன்றைக்கு அம்மாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

    சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த இயக்கத்தை ஏழை, எளிய மக்களுக்காக புரட்சித்தலைவர் உருவாக்கினார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா நினைத்தார்கள்.

    அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.அதற்காக ஏச்சுகளையும், பேச்சுக்களையும், அவதூறுகளையும் சுமந்து தான் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்.

    இந்த இயக்கத்தில் ஒன்னரை கோடி தொண்டர்களும் அவருக்கு பின்னால் தான் உள்ளார்கள். இதை பொறுக்க முடியாத சில பேர் இயலாமையால், விரக்தியால் வெளியேறி நாகரிமற்ற பேச்சை பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
    • கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தபோவதாக ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
    • 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5-ம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் வகையில், வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    ரூல் கர்வ் முறைப்படி நீரை திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் 3 மதகுகள் மூலம் திறந்துள்ளனர். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை தி.மு.க. அரசு நிகழ்த்தியுள்ளது.

    இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்த்த பின்பு 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும், 3 முறை முல்லை பெரியாறு அணைநீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தற்பொழுது முதலமைச்சராக இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது தி.மு.க. அரசு கேரளா அழுத்தத்தை தூக்கி எறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    கேரளா அழுத்தத்திற்கு தமிழக அரசு அடிபணிய கூடாது என்று விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோத போக்கை தி.மு.க. அரசு தொடரருமேயானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிஜிட்டல் யுகத்தில் கலைஞர் நூலகம் அமைப்பது பயனற்ற செயல் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார்.

    மதுரை

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மூன்றுமாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாக உள்ளது. அவர் சொன்னதை யாரும் நம்ப மாட்டார்கள்.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார். தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கி கொடுத்தார். இதற்காக 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அங்கு ரூ. 21 கோடி செலவில் சாலை மற்றும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ரூ.1296 கோடி மதிப்பில் முல்லை பெரியார் லோயர் கேம் வழியாக கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ. 30 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தை உருவாக்கி கொடுத்தார்.

    மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக்கூடாது என்பதை நிதி அமைச்சர் நன்கு அறிவார். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும். தற்போதுதான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் என்று கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த 18 மாதங்களாக தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டது என்று பட்டியலிட்டு கூற முடியுமா?

    மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்தான் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் நூலகத்தை தங்கள் இல்லம் தேடி வரவழைக்கும் வேளையில் மக்கள் நூலகங்களை நாடுவார்கள் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    வாய் சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள், மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 18 மாதங்களில் என்னென்ன சிறப்பு நிதியை கொண்டு வந்தீர்கள்? என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியை டிடிவி தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, கீழக்குயில்குடி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முனியாண்டிக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தப்பகுதியில் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தபோது இங்கு குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்றும் பேசி உள்ளார்.

    மு.க.ஸ்டாலினும் இது போலத்தான் பேசுகிறார். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ரூ.10.20 கோடி மதிப்பில் விரைவில் குடிநீர் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளை துரோகிகள் என்கிறார் தினகரன்.

    ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சியை தி.மு.க.வுடன் இணைந்து கவிழ்க்க துடிக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் உண்மையான துரோகி என்பதை தொண்டர்கள் தெரிந்து கொண்டனர். எனவே அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. இங்கு வெற்றி பெற்றதும் திருப்பரங்குன்றத்தை முதன்மை தொகுதியாக மாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் பிரசாரத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நிர்வாகிகள் வெற்றிவேல், மாரிச்சாமி, முத்து இருளாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தினகரனின் ரகசிய பேரம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும்.

    ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அ.தி.மு.க.வை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×