search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் நூலகம்"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார்

    திருவட்டார், 

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பியில் கன்னியா குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லிஜீஸ்ஜீவன் ஜெயச்சந்திரபூபதி, ஷிஜூ , ஆல்வின்வினோ, ஜெபர்சன், பைஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினி வாயிலாக நூலக செயல்பாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலாஆல்பன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், குழித்துறை நகராட்சி தலைவர் பொன், ஆசைதம்பி, திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோன்மணி, நல்லூர் பேரூராட்சி தலைவர் வளர்மதி கிறிஸ்டோபர், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார். தொண்டர்கள் ஏராள மானோர் அவருக்கு புத்த கங்களை வழங்கினார்கள்.அப்போது தொண்டர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

    • கலைஞர் நூலகத்திற்கு தனி இணையதளம் உருவாக்கப்படும்.
    • தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையி டுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழ்நாடு பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து www.kalaignarcentenarylibrary.org என்ற பெயரில் புதிய இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த இணையதள பக்கம் வாயிலாக நூலகம் பற்றிய தகவல்கள், உறுப்பினர் சேர்க்கை, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் இந்த இணையதள மூலம் புத்தகங்கள், எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கையை விரைவில் ஆன்லைன் முறையில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் கலைஞர் நூலகத்திற்கென உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள், கலைஞர் நூலகத்திற்கு சுற்றுலா தலம் செல்வது போல் இரவிலும் படையெடுத்தனர்.
    • குழந்தைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டில், 8 தளங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கலை–ஞர் நூற்றாண்டு நூலகம் உலகம் தரம் வாய்ந்த அள–வில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெறு–கிறது.

    இந்நிலையில் பிரமாண்ட–மாக கட்டப்பட்டுள்ள கலை–ஞர் நூலக திறப்பு விழாவை முன்னிட்டு நூலகத்தை சுற் றிலும் லேசர் ஒளிரும் விளக்குகளாலும், நூலகத் தில் சுற்றுச்சுவர் தொடங்கி நூலகத்தில் சுற்று வட்டார பகுதி முழுவதும் வண்ண, வண்ண அலங்கார விளக்கு–களால் அலங்கரிக்கப்பட்டுள் ளது.

    இதனால் இரவில் மின் னொளியில் ஜொலித்த தென்னகத்தின் புத்தக களஞ்சியமாக மாறியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தின் வெளிப்புறத்தை கண்டு ரசிக்க ஏராளமான பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் இரவிலும் சுற்றுலா தலங்களுக்க செல் வதுபோல் படையெடுத்து வந்தனர். ஒவ்வொருவரும் மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூலகத்தின் முன் பாக குழந்தைகள், குடும்பத் தினருடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    இன்று மாலை திறக்கப்ப–டவுள்ள நிலையில் குழந்தை–களுக்கான பிரத்யேக நூலக பிரிவு உள்ளே வாகனங்க–ளுடன், விமானத்தில் அமர்ந்து படிப்பது போன் றும், இயற்கை சூழலி்ல் படிப்பது போன்ற அமைப்பு–களும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் உரை–யாற்றுவது போன்ற தொழில் நுட்பத்தில் உரு–வாக்கப்பட்ட மெய்நிகர் அறையும் உள்ளது.

    அதனை காண்பதற்காக–வும், கலைஞர் நூலகத்தில் உள்ள லட்சக்கணக்கான நூல்களை பார்க்கவும், படிக்கவும் ஆர்வத்தோடு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்தி–ருக்கி–றார்கள்.

    • நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • 1,500 போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், மது–ரையில் கலைஞர் நினை–வைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிர–மாண்ட நூலகம் அமைக்கப் படும் என்று அறி–வித்தார்.

    நூலகம் அமைப்பதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2.13 லட்சம் சதுர அடி பரப்ப–ளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வந்தன.

    முன்னதாக 2022 ஜனவரி 11-ந்தேதி நூலகம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் சென்னை–யில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில் அனைத்தும் டிஜிட்டல் மயத்துடன் கூடிய பணிக–ளும் முடி–வுற்று கலை–ஞர் நூலகம் புதுப்பொ–லிவு–டன் அழகுற காட்சி அளிக்கிறது.

    நூலக கட்டி–டத்தின் முற் பகுதியில் அலங்கார விளக் குகள், பூஞ்செடி–கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயி–லில் கலைஞ–ரின் பொன் மொ–ழியான புத்தகத்தில் உலகை படிப்போம், உல–கத்தை புத்தக–மாய் படிப் போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள் ளது.

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்பெ–றும் வகையில் சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட் டுள்ள கலைஞர் நூலகம் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரூ.206 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட் டுள்ள இந்த நூலகத்தில் அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்த–கங்கள் உள்ளன.

    குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட் டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண் கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெற–லாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப் பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட் டப்பட்டுள்ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுது–போக்கு அம்சங்க–ளும் இந்த நூலகத்தில் உள்ளன.

    மொத்தமுள்ள 8 தளங்க–ளில் முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன் னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது.

    இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டு–ரைகளும் நான்காம் தளத் தில் 1,990 சதுர அடி பரப் பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரி–வும், போட்டித் தேர்வுக–ளுக்கு தேவையான புத்த–கங்களும் வைக்கப்பட் டுள்ளன.

    ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரி–வும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உரு–வாக்கப்பிரிவு, நுண்ப–டச் சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று (சனிக்கி–ழமை) மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.

    விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா–மொழி வரவேற்று பேசுகி–றார். அமைச்சர்கள்

    எ.வ.–வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், குழும தலைவர் ரோஷினி நாடார், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலகங்கள் இயக்குநர் இளம்பகவத், கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நன்றி கூறுகிறார். விழாவில் மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்லாயிரக்க ணக்கா–னோர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழா நிகழ்ச் சிக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழா ேமடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். விழா–வில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின், நாளை பகல் 11.30 மணிக்கு சென் னை–யில் இருந்து மது–ரைக்கு விமானத்தில் வந்தார்.

    விமான நிலை–யத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிேவல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய–கருப்பன், ராஜகண்ணப்பன், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அங்கிருந்து அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளி–கைக்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலி–னுக்கு தி.மு.க.–வினர் வழிநெ–டுக உற்சாக வர–வேற்பு அளித்த–னர்.

    முன்னதாக அரசு சுற்றுலா மாளிகை–யில் மதிய உணவு சாப்பிடும் மு.க.ஸ்டா–லின், மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பங்கேற் கிறார். நிகழ்ச்சிகளை முடித் துக்கொண்டு இரவு விமா னத்தில் சென்னை திரும்பு கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் வருகையை–யொட்டி மதுரை விழாக்கோ–லம் பூண்டுள்ளது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.

    • மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    மதுரை:

    மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி (அதாவது இ்ன்று) திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷிணி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் நன்றி கூறுகிறார். விழாவில் 3 ஆயிரத்து 500 கல்லூரி மாணவர்களும், 6 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மதுரையின் புதிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திகழ்கிறது.
    • ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    மதுரை

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணா–நிதி நினைவாக மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மு.க.ஸ்டா–லின் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந்தேதி மதுரை நத்தம் சாலையில் ரூ.120.75 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற் போது ரூ.134 கோடியில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    கலைஞர் நூலகம் கீழ் தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டி–டமாக 2 லட்சத்து 13 ஆயி–ரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. நூலகத் தின் கீழ்தளத்தில் வாகனங் கள் நிறுத்துமிடம், நாளிதழ் கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவும், தரைத்த–ளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் கலைஞ–ரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதை–கள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்த–கங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறு–கிறது.அத்துடன் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் கள் பிரிவு உள்ளது.

    இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், 3-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளது. 4-வது தளத்தில் போட்டித் தேர்வுகள் தொடர்பான நூல்கள் இடம் பெறுகின்றன. 5-ம் தளத்தில் அரிய நூல்கள், மின் நூல–கம், ஒளி, ஒலி தொகுப்பு–கள் காட்சியகப்பிரிவு, பார்வை–யற்றோருக்கான மின் நூல் ஒலி நூல் ஸ்டுடியோ உள் ளது.

    6-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட் டுள்ளது. தற்போது அனைத்து தளங்களிலும் பணிகள் நிறைவடைந்து நூலகத்துறையிடம் ஒப்ப–டைக்கப்பட்டு உள்ளது.

    மின் விளக்குகள், குளி–ரூட்டப்பட்ட அறைகள், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள் ளன. கட்டிடத்தின் நடுப்பகு–தியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடி பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள் ளது. அலங்கார வடிவமைப் புடன், இண்டீரியர் டெகரே–ஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது.

    வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் கலை–ஞரின் உருவச்சிலை அமைக் கும் பணி, மாடித் தோட்டத் துடன் நூல்களை படிப்பதற் கான வசதியும், கலைக்கூ–டமும் அமைக்கப்பட்டுள் ளது. நூலகத்தில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. தற்போது 3.50 லட்சம் புத்தகங்கள் அடுக்கும் பணிகளும்ந நிறைவடைந்துள்ளது. சுமார் 17 மாதங்களாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்து விட் டது.

    இந்த கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிய–ளவில் பிரமாண்டாக நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைக்கிறார்.

    மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருப்ப–ரங் குன்றம், பழமுதிர்ச் சோலை முருகன் கோவில் கள், காந்தி மியூசியம், தெப் பக்குளம், திருமலை நாயக் கர் மகால் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அம்சங்கள் மதுரைக்கு பெருமைமிக்க அடையாளங்களாக விளங் குகிறது.

    இதற்கெல்லாம் முத் தாய்ப்பாக தமிழகத்தில் சென்னை அண்ணா நூல–கத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய நூலகமாக மது–ரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் அடையாளங்க–ளில் ஒன்றாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல–கம் அமையும் என்பதில் ஐயமில்லை.

    • டிஜிட்டல் யுகத்தில் கலைஞர் நூலகம் அமைப்பது பயனற்ற செயல் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார்.

    மதுரை

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மூன்றுமாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாக உள்ளது. அவர் சொன்னதை யாரும் நம்ப மாட்டார்கள்.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார். தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கி கொடுத்தார். இதற்காக 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அங்கு ரூ. 21 கோடி செலவில் சாலை மற்றும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ரூ.1296 கோடி மதிப்பில் முல்லை பெரியார் லோயர் கேம் வழியாக கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ. 30 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தை உருவாக்கி கொடுத்தார்.

    மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக்கூடாது என்பதை நிதி அமைச்சர் நன்கு அறிவார். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும். தற்போதுதான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் என்று கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த 18 மாதங்களாக தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டது என்று பட்டியலிட்டு கூற முடியுமா?

    மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்தான் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் நூலகத்தை தங்கள் இல்லம் தேடி வரவழைக்கும் வேளையில் மக்கள் நூலகங்களை நாடுவார்கள் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    வாய் சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள், மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 18 மாதங்களில் என்னென்ன சிறப்பு நிதியை கொண்டு வந்தீர்கள்? என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×