search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேர்கிளம்பியில் குமரி மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்
    X

    வேர்கிளம்பியில் குமரி மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார்

    திருவட்டார்,

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பியில் கன்னியா குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லிஜீஸ்ஜீவன் ஜெயச்சந்திரபூபதி, ஷிஜூ , ஆல்வின்வினோ, ஜெபர்சன், பைஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினி வாயிலாக நூலக செயல்பாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலாஆல்பன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், குழித்துறை நகராட்சி தலைவர் பொன், ஆசைதம்பி, திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோன்மணி, நல்லூர் பேரூராட்சி தலைவர் வளர்மதி கிறிஸ்டோபர், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார். தொண்டர்கள் ஏராள மானோர் அவருக்கு புத்த கங்களை வழங்கினார்கள்.அப்போது தொண்டர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×