search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggregation"

    • விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தபோவதாக ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
    • 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5-ம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் வகையில், வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    ரூல் கர்வ் முறைப்படி நீரை திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் 3 மதகுகள் மூலம் திறந்துள்ளனர். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை தி.மு.க. அரசு நிகழ்த்தியுள்ளது.

    இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்த்த பின்பு 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும், 3 முறை முல்லை பெரியாறு அணைநீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தற்பொழுது முதலமைச்சராக இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது தி.மு.க. அரசு கேரளா அழுத்தத்தை தூக்கி எறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    கேரளா அழுத்தத்திற்கு தமிழக அரசு அடிபணிய கூடாது என்று விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோத போக்கை தி.மு.க. அரசு தொடரருமேயானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×