search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rasam"

    • குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கை பூ நல்ல பலனளிக்கும்.
    • ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு

    தக்காளி - 1

    நெல்லி அளவு - புளி

    பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    பூண்டு - 5 பல்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் வற்றல் - 2

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

    உப்பு , எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். (ரசத்தை கொதிக்க விடக்கூடாது).

    இப்போது சத்தான முருங்கை பூ ரசம் ரெடி.

    • கருவாட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கருவாட்டில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    கருவாடு - 5 துண்டுகள்

    தக்காளி - 2 பெரியது

    வெங்காயம் - 1 பெரியது

    புளி - எலுமிச்சை அளவு

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10 பல்

    உப்பு - தேவையான அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கீற்று

    பச்சை மிளகாய் - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    இஞ்சி - சிறு துண்டு

    செய்முறை:

    கருவாட்டை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வறுத்து வைக்கவும். வறுத்த கருவாட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயம், 1 தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.

    புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

    பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.

    மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்க வேண்டும்.

    பிறகு வறுத்த கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கருவாட்டு ரசம் தயார்.

    இதற்கு நெத்திலி கருவாட்டையும் பயன்படுத்தலாம். சூப்பராக இருக்கும்.

    • ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று பருப்பு உருண்டை சேர்த்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பருப்பு உருண்டை செய்ய

    ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்

    காய்ந்த மிளகாய் - 5

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    ரசம் வைக்க :

    நெய் - 3 டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

    புளி தண்ணீர் - 1 கப்

    தக்காளி - 1

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    சீரகப் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும். அதோடு மஞ்சள், தனியா, சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

    ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.

    சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.

    • முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தக்காளி - ஒன்று,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தனியா - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).

    இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.

    அஜீரண கோளாறு, வயிறு உபாதைகள் உள்ளவர்கள் புதினா - இஞ்சி ரசம் செய்து சாப்பிடலாம். இந்த ரசத்தை சூப் போன்று அருந்தலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா - கால் கப்,
    இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு,
    மோர் - 3 கப்,
    கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான புதினா - இஞ்சி ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது. இன்று நெல்லிக்காயில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 5,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்

    பொடி செய்ய:

    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    நெய் - சிறிதளவு.

    தாளிக்க:

    எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை:

    பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

    நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவிக்கொள்ளவும்.

    துருவிய நெல்லிக்காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி - இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)

    சத்தான நெல்லிக்காய் பருப்பு ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். இன்று நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நண்டு - 250 கிராம்.
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க…

    சாம்பார் வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    பச்சைமிளகாய் - 3,
    பூண்டு - 4 பல்,
    இஞ்சி - சிறிது,
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிது.



    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.

    மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.

    கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

    சூப்பரான நண்டு ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
    தக்காளி - ஒன்று
    புளி - நெல்லிக்காய் அளவு
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    காய்ந்த மிளகாய் - 3
    மஞ்சள்தூள், பெருங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

    பூண்டை நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.

    வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

    ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும். ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெந்தயக்கீரை ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 50 கிராம்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    புளி - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம் - தலா 2
    ஏலக்காய் - 2
    உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :


    வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.

    சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.

    ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

    சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

    பின் அதை வடிகட்டி விடவும்.

    பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.

    இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.

    இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனில் ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 250 கிராம்,
    தக்காளி - 2,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியாதூள் - அரை டீஸ்பூன்,
    புளி - சிறிதளவு,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    உப்பு - தேவையான அளவு.  

    தாளிக்க...

    மிளகு - அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டனை குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி நன்றாக நசுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி, ப.மிளகாய், தனியா, சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

    கடைசியாக கரைத்த புளி கரைசல், கொத்தமல்லி தூவி கொதி வரும் போது இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. இன்று கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை சூப்பாகவும் அருந்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - கால் கப்,
    புளி - நெல்லியளவு,
    தக்காளி - 2,
    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பூண்டு - 6,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள், கடுகு - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

    மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    இதை சூப்பாகவும் குடிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புளி - ஒரு எலுமிச்சை அளவு
    தக்காளி - ஒன்று

    அரைக்க

    இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    முழு தனியா - ஒரு மேசை கரண்டி
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    கொத்துமல்லி தழை - கால் கைபிடி அளவு
    கறிவேப்பிலை - கால் கைபிடி அளவு

    தாளிக்க

    நெய் - ஒரு தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
    பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு



    செய்முறை

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.

    தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

    சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி!
     
    குறிப்பு

    1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

    2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.

    3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×