search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranil Wickramasinghe"

    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Rajapaksa

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை கடந்த அக்டோபர் 26-ந் தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே ராஜபக்சேவுக்கு போதிய எம்.பி.க்கள் ஆதரவு இல்லாததால் பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் என்றும், புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இது அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே ரணில் விக்ரமசிங் கேவை அவர் மீண்டும் பிரதமராக அறிவித்தார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக்கினார்.

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் போதிய உறுப்பினர் இல்லாத ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி எம்.பி.க்கள் ராஜபக்சேவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியுள்ளனர். தற்போது அதன் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.

    அதன் அடிப்படையில் புதிய மந்திரி சபையில் 3 முக்கிய இலாக்காக்களை தன்வசம் வைத்துள்ளார். தற்போது, ராஜபக்சே கட்சியுடன், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து புதிய கூட்டணி உருவாகி இருப்பதால் அதிக உறுப்பினர்களை கொண்ட எதிர்கட்சி ஆகி விட்டது. எனவே ராஜபக்சேவை எதிர்கட்சி தலைவராக்கி இருப்பதாக சிறிசோன தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. அதில் எதிர்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சேவை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்குவதாக அவர் விளக்கம் அளித்தார். #Rajapaksa

    பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறி உள்ளார். #Sirisena #RanilWickramasinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    எக்காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமிக்க முடியாது என்று ஏற்கெனவே கூறியிருந்த சிறிசேனா அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கட்சித்தலைவர்கள் முன்னிலையில் சிறிசேனா பேசியதாவது:-

    மூத்த வக்கீல்கள் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளை ஆலோசித்த பின்னரே ஒவ்வொரு செயலையும் நான் மேற்கொண்டேன். நல்லெண்ண அடிப்படையில் நான் செயல்பட்டிருக்கிறேன். அதற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவேன்.

    சுமார் 1½ கோடி மக்களின் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் 122 எம்.பி.க்கள் அதை தடுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இலங்கையில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறியதாவது:-

    அண்டைய நாடு மற்றும் உண்மையான நட்புநாடு என்ற வகையில் இலங்கையில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது. அனைத்து அரசியல் சக்திகள் வெளிப்படுத்திய முதிர்ச்சி மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றுக்கான வெற்றிதான் இது.

    இந்தியா-இலங்கை இடையிலான நட்புறவு மேல்நோக்கி பயணிக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து செல்ல இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sirisena #RanilWickramasinghe
     
    இலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #RanilWickremesinghe #PrimeMinister

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாதது என அறிவித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு அளித்தது.

    அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ராஜபக்சே மீது எதிர்க்கட்சிகள் 2 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றனர். இருந்தும் அவரை பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்க வில்லை. இந்த நிலையில் பிரதமர் பதவியில் ராஜபக்சே தொடர்ந்து நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

    இதனால் அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.

    அதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக சிறிசேனா அறிவித்தார்.

    பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி அலுவலகம் வந்தார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோரும் வந்து இருந்தனர். உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே சென்றனர்.

    காலை 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.

    ரணில் விக்ரமசிங்கேவை தொடர்ந்து புதிய மந்திரிகள் நாளை (17-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள். 30 பேர் மந்திரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

    அவர்களில் 6 பேர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி அரசு அமைக்கிறார். #RanilWickremesinghe #PrimeMinister

    இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே இன்று ராஜினாமா செய்ததையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #Rajapaksa #RanilWickramasinghe
    கொழும்பு:

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரிபால் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் தேதியையும் சிறிசேனா அறிவித்தார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிறிசேனா நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.

    இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கட்சியால் 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக 3 முறை நடந்த வாக்கெடுப்பிலும் அவர் தோல்வி அடைந்தார். ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.

    இதற்கிடையே ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ந்தேதி விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை விதித்தது.

    இதை எதிர்த்து ராஜபக்சே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடையை நீக்க முடியாது என்று உத்தரவிட்டது.

    இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

    அதில் குறைந்தபட்சம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க முடியாது என்று தீர்ப்பு கூறியது.

    ராஜபக்சே இலங்கை பிரதமராக செயல்பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதாலும், பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் என்று உத்தரவிட்டதாலும் அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார். இதை அவரது மகன் நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதன்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே இன்று ராஜினாமா செய்தார்.



    இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைக்க உத்தரவிட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காரணமாக அவர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    புதிய பிரதமரை 17-ந்தேதி நியமிக்க போவதாகவும், ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க போவதில்லை என்றும் சிறிசேனா தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

    நாளை காலை 10.30 மணிக்கு ரணில்விக்ரமசிங்கே 5-வது முறையாக இலங்கை பிரதமராக ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்கிறார். இதை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த எம்.பி.யான ரஜிதசேனரத்னே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ரணில் விக்ரமசிங்கே அதிபர் சிறிசேனாவுடன் பதவியேற்பு குறித்து தொலைபேசியில் ஆலோசனை செய்ததாக தெரிவித்தார்.

    ரணில் விக்ரமசிங்கே மந்திரிசபையில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    ரணில் விக்ரமசிங்கே மட்டும் நாளை பதவியேற்பார். மந்திரிகள் 17-ந்தேதி பதவி ஏற்பார்கள். 30 பேர் கொண்ட மந்திரிசபை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டாலும் முக்கிய அமைச்சக பதவிகளை சிறிசேனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  #Rajapaksa #RanilWickramasinghe
    இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்க மாட்டேன் என்று அதிபர் சிறிசேனா கூறினார். #sirisena #RanilWickramasinghe #rajapaksa
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் அதிரடியாக பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கினார். இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் முறையான பிரதமர் என்று கூறிவந்தனர்.

    இந்நிலையில் அதிபர் சிறிசேனா நேற்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் பிரதமராக விக்ரமசிங்கேயை நியமிப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனது முடிவால் அரசியலில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனாலும் இதை நான் தீவிரமான அரசியல் நெருக்கடியாக கருதவில்லை.


    விக்ரமசிங்கே அரசு நிர்வாகத்தில் பல தீவிரமான கொள்கை மாறுபாடுகளை கடைபிடித்தார். அதில் முதன்மையானது உயரதிகாரிகள் நியமனம். அறிவியல் அடிப்படையில் உயரதிகாரிகளை நியமிக்க கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்தேன். ஆனால் விக்ரமசிங்கே அதன் பரிந்துரையை நிராகரித்தார்.

    உயர் கல்வித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் ஒரே அமைச்சகம் கையாளும் என்று விக்ரமசிங்கே அறிவித்தார். மற்றொரு முக்கிய பிரச்சினை, மத்திய வங்கி கவர்னராக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை நியமித்தார். அவர் இலங்கையை சேர்ந்தவர் இல்லை, அவரை அந்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று நான் கூறியும், அதனை நிராகரித்துவிட்டு அவரையே வங்கி கவர்னராக நியமித்தார்.

    மத்திய வங்கி பத்திரங்கள் வெளியிட்டதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மகேந்திரனே பொறுப்பு. விசாரணையில் அவர் குற்றவாளி என்றும் உறுதியானது. ஆனால் அவர் இப்போது தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்பது விக்ரமசிங்கேவுக்கு தெரியும்.

    விக்ரமசிங்கேவின் 3 ஆண்டு பிரதமர் பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளேன்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார்.  #sirisena #RanilWickramasinghe #rajapaksa
    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. #SriLankaParliament #Ranil #UNP
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    சிறிசேனாவின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, தற்போதைய பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கையையும் ஏற்கவில்லை. 

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.

    நீதிமன்றம்  தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வழக்கு தொடரப்படும் என ஐக்கிய தேசிய கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சிறிசேனாவின் கொடுங்கோன்மை இனி நீதிமன்றங்கள், பாராளுமன்றம் மற்றும் தேர்தலில் போராட வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி மங்கள சமரவீரா தெரிவித்தார். #SriLankaParliament #Ranil #UNP
    ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது. #Rajapaksa #ranilwickramasinghe #sirisena

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென அதிபர் சிறிசேனா நீக்கினார். பிறகு தனது சுதந்திரா கட்சியில் தனி அணியாக செயல்பட்டு வந்தவரும், கடந்த 3 வருடங்களாக எதிரியாக இருந்தவருமான ராஜ்பக்சேவை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதன் காரணமாக இலங்கையில் பிரதமர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டுமானால் பாராளுமன்றத்தை கூட்டி இருவரையும் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் எழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் பாராளுமன்றத்தை 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். இதை கண்டித்து ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாராளு மன்றத்தை கூட்ட சிறிசேனா முன் வந்தார். முதலில் 5-ந்தேதி பாராளுமன்ற கூடும் என்று தகவல் வெளியானது. பிறகு 7-ந்தேதி கூடும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்றும் அன்றே பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று சிறிசேனா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.

    இலங்கை பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் தனக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்க ராஜபக்சே போராடிய படி உள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    சிறிசேனா-ராஜபக்சே அணியினருக்கு 96 எம்.பி.க்கள் ஆதரவே உள்ளது. 4 எம்.பி.க்கள் மாற்று கட்சிகளில் இருந்து வந்திருப்பதால் அவர்களது பலம் 100 ஆக உள்ளது. இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவை பெற ராஜபக்சே முயற்சி செய்தார். ஆனால் ஒரு தமிழ் எம்.பி.யை சுமார் ரூ.30 கோடி மற்றும் மந்திரி பதவி கொடுத்து இழுத்து விட்டதால் ராஜபக்சே மீது தமிழ் எம்.பி.க்களின் கோபம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசிய எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். மேலும் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்கப் போவதாக கூறி உள்ளனர்.


    ஏற்கனவே பாராளுமன்றத்தில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு 103 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. தமிழ் தேசிய எம்.பி.க்கள் 15 பேர் ஆதரவு அவருக்கு கிடைத்தால் ரனில் விக்ரம சிங்கேயால் பெரும்பான்மை பலத்தை எளிதாக நிரூபித்து காட்ட முடியும்.

    மெஜாரிட்டி பலம் இல்லாத காரணத்தால் ராஜபக்சேவும், அவரது ஆதரவாளர்களும் எந்த எல்லைக்கும் செல்ல தீவிரமாக உள்ளனர். தமிழ் தேசிய எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை உள்நாட்டு போரின்போது கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யவும் ராஜபக்சே தயாராகி வருகிறார்.

    இது தவிர பணம் மற்றும் பதவிகளை அள்ளித்தரவும் மாற்றுக்கட்சி எம்.பி.க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருகிறது. தற்போது தங்கள் பக்கம் வரும் எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை கொட்டிக் கொடுக்க ராஜபக்சே பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ராஜபக்சேயின் பணம் இலங்கை எம்.பி.க்களின் கைகளில் வெள்ளமாக போய் சேர தொடங்கி உள்ளது. இதனால் ரணில் ஆதரவாளர்களாக உள்ள 4 எம்.பி.க்கள் ராஜபக்சே பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கையில் உள்ள 2 பெரிய முஸ்லிம் தலைவர்கள் இதுவரை ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இருந்தனர். தற்போது அவர்கள் ராஜபக்சே பக்கம் சாய பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மை பலத்துக்கு தேவையான எம்.பி.க்களை விலைக்கொடுத்து வாங்கி விட வேண்டும் என்பதில் ராஜபக்சேவும், அவரது மகன் நமலும் தீவிரமாக உள்ளனர்.

    இதற்கிடையே ராஜபக்சே தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்ட இலங்கையில் மிகப்பெரிய ஊர்வலத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார். இலங்கை முழுவதிலும் இருந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் இந்த ஊர்வலத்துக்காக கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

    கடந்த மாதம் இறுதியில் கொழும்பில் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது பயங்கர கலவரம் வெடித்தது. பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மீண்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணிக்கு வருவதால் முன்புபோல கலவரம் வெடிக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க் களை விலை கொடுத்து வாங்க முடியாவிட்டால் அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்என்று ராஜபக்சே ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பாராளுமன்றத்தை கலைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிறிசேனா மட்டும் சற்று தயங்கிய நிலையில் இருப்பதால் ராஜபக்சே ஆலோசித்து வருகிறார்.

    என்றாலும் பாராளுமன்றத்தில் தோல்வி ஏற்பட்டால் தேர்தலை சந்திக்க ராஜபக்சே அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை தேர்தல் அதிகாரி அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajapaksa #ranilwickramasinghe #sirisena

    இலங்கையில் நடைபெற்று வரும் குழப்பதிற்கிடையில் பாராளுமன்ற முடக்கம் உத்தரவை தளர்த்தினார் அதிபர் சிறிசேனா. #SriLankanParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமங்சிங்கேவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் இலங்கை அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

    நான்தான் இன்னும் இலங்கையின் பிரதமர் என்று கூறிய ரணில், விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கும்படி உத்தரவிட்டார். இது சபாநாயருக்கு அதிருப்தியை ஏற்பட்டது.

    கோப்புப்படம்

    பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய சபாநாயகர் இதுகுறித்து அதிபர் சிறிசேனாவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டதை இன்று தளர்த்தினார்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது. #SriLankanParliament #Sirisena 
    இலங்கையில் விரைவில் பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுடன் சம்பந்தன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
    கொழும்பு:

    இலங்கையில் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை.

    “அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரனில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.

    பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ரனில் விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

    இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார் என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன. நேற்று வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பின் போதும் பாராளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது. இதனால் இலங்கை பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், ரனில் விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு எம்.பி.க்கும் சுமார் 300 மில்லியன் ரூபாய் முதல் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது தவிர எம்.பி.க்கள் கடத்தி செல்லப்படும் அபாயமும் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரனில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


    ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் சம்பந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சிறிசேனாவை சந்தித்தார். பிறகு ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். இன்று காலை அவர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு ராஜபக்சேவின் வீட்டில் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்களின் ஆதரவை தனக்கு தர வேண்டும் என்று சம்பந்தனிடம் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதில் அளித்த சம்பந்தன், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் உறுதிமொழி தர வேண்டும். அந்த உறுதிமொழி எழுத்து மூலம் இருக்க வேண்டும். அப்படி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு தருவதை பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

    முன்னதாக ரனில் விக்ரமசிங்கேயிடமும் சம்பந்தன் இதுபோன்று 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் கூட்டம் கொழும்பில் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்ய உள்ளது. இந்த முடிவை அறிய இரு தரப்பு தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர்.

    இதற்கிடையே கொழும்பில் இன்று மதியம் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வீடு முன்பும், ராஜபக்சே வீடு முன்பும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு உள்ளனர்.

    இதையடுத்து கொழும்பில் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை அரசுக்கு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பில் உள்ள அமெரிக்க மக்கள் உஷாராக இருக்கும்படி வாஷிங்டனில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். #RanilWickremesinghe #RajnathSingh
    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.



    இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேச உள்ளார்.

    பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக செய்தி வெளியானது. இந்த செய்தியை இலங்கை அதிபரின் ஆலோசகர் உடனடியாக மறுத்தார். எனினும்  இந்த சர்ச்சை இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் இலங்கை பிரதமர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #RanilWickremesinghe #RajnathSingh
    ×