search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadan"

    • கீழக்கரையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர தலைவர் முபினா தலைமையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் கலந்து கொண்டனர். வுமன் இந்தியா மூவ்மெண்ட் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் மாவட்ட செயலாளர் சித்தி நிஷா ஆகியோர் பேசினர். ஜகாங்கீர் அரூஷியின் பிரார்த்தனையோடு இப்தார் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி கூறினார்.

    • ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களின் புனித இரவு சிறப்பு தொழுகை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக விளங்குவது ரம்ஜான். இறைதூதர் முகமது நபிக்கு திருக்குரான் அருளப்பட்டதை நினைவு கூர்ந்து ரம்ஜான் நோன்பின்போது முஸ்லிம்கள் திருக்குரானை தினந்தோறும் ஓதி வருகிறார்கள். அதன்படி 27 நாட்கள் திருக்குரான் ஓதி முடிக்கும் நாளாக வருகிற சனிக்கிழமை (நாளை) உள்ளது. இந்த நாள் முஸ்லிம்களின் புனித இரவாக இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறியதாவது:-

    இறை தூதர் முகமது நபிக்கு ரம்ஜான் மாதத்தில் திருக்குரான் இறக்கப்பட்டது. எனவே ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது திருக்குரானை தினமும் படித்து வசனங்களை புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

    திருக்குரானின் மொத்த வசனங்கள் 6 ஆயிரத்து 666 ஆகும். இதனை 27 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை பள்ளி வாசல்களில் ஓதி, அதற்கு விளக்கங்கள் கூறப்படும். 27-வது நாள் முழுமையாக திருக்குரான் ஓதி முடியும்நாள். இந்த நாள்தான் ‘லைலத்துல் கதர்’ எனப்படும் புனித நாளாகும். இந்த நாளில் சூரியன் மறையும் நேரத்தில் இருந்து அடுத்த நாள் சூரியன் உதிப்பதுவரை ஒரு முழு இரவும் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதப்படும். வசனங்களுக்கு பள்ளிவாசல் தலைவர்கள் விளக்கங்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். இந்த புனித இரவையொட்டி அனைத்து பள்ளி வாசல்களும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    இவ்வாறு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறினார்.

    புனித இரவு தொழுகை நாளை (சனிக்கிழமை) இரவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறும். மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா தலைமையில் ஈரோடு டவுன் பெரிய பள்ளிவாசலில் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடக்கிறது.
    கடந்த முப்பது நாட்களை நம்பிக்கையாளர்கள் நோன்பிருந்து, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்தனர். இதன் நிறைவாக கொண்டாடப்படுவதே ஈகைத் திருநாள்.
    கடந்த முப்பது  நாட்களை நம்பிக்கையாளர்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்தனர். இதன் நிறைவாக கொண்டாடப்படுவதே ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள் (அரபியில் ஈதுல் பித்ர்).

    ஈகைத் திருநாள் ஒரு வெற்றித் திருநாள். பசி, தாகம், இச்சை போன்ற தேவைகளை விலக்கியும் தீமைகளைச் செய்யா வண்ணம் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தியும் தன்னைத்தானே வெற்றி கொண்ட நாள். எதிரியை வெற்றிகொள்வதைவிட தன்னைத் தானே வெற்றிகொள்வதே மிகப் பெரும் வெற்றியாகும்.

    இந்நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். இறைவனை வணங்கியும் இறைவனுடைய படைப்புகளுக்கு வழங்கியும் நன்றி தெரிவிக்கும் நாள்.

    இந்நாள் இறைவனை நினைவுகூரும் நாள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்களிலே இறைவனை மனிதன் மறந்துவிடுவான். இந்த நாளில் இறைவனை நமக்கு புரிந்த அருட்கொடைகளை  நினைத்து தொழுகை, தியானம், நலிவுற்றவர்களுக்கும் துயருற்றவர்களுக்கும் உதவி செய்து இறைவனை நினைவுகூர வேண்டும்.

    இது ஒரு அறுவடை நாள். நாம் செய்த வழிபாடுகளுக்காகவும், அறக்கொடைகளுக்காகவும் இறைவன் தனது கருணையை, மன்னிப்பை, அருளை வாரி வழங்கும் நாள். நாமும் அதே கருணையை சக மனிதர்களுக்கும் அன்பு, பொருள் உதவி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் வழங்க வேண்டும்.

    இந்நாள் மன்னிப்பு அளிக்கும் நாள். நாம் செய்த நற்செயல்களை நமது தவறுகளை இறைவன் மன்னிக்கும் நாள். மனம் திருந்தி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் இறைவன் நமது பாவங் களை மன்னிப்பதாக வாக்களித்துள்ளான். இறைவன் நம்மை மன்னிப்பதைப் போலவே இந்நாளில் நாமும் நமக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிப்போம்.

    “இறைவன் உங்களை மன்னிக்கவிருப்பது போல நீங்களும் மற்றவர்களை மன்னிக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்புகிறது குர்ஆன் (24:22).

    மன்னிப்பதன் மூலம் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து உள்ளம் விடுதலை பெற்று மனம் அமைதி பெறுகிறது. இதனால் சமூகமும் அமைதி பெறுகிறது.

    இது அமைதிக்கான திருநாள். இறைவன் வழங்கிய இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் இறைவனோடு அமைதி பெறுகின்றீர்கள். சமூகத்தோடும் அமைதி பெறுகின்றீர்கள். உங்களோடும் அமைதி பெறுகின்றீர்கள்.

    ஈகைத் திருநாளை சமூகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தொழுகைக்கு செல்லும் முன்னரே ‘சதகத்துல்  பித்ர்’ எனும் தான தர்மத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.



    “பெருநாளன்று குளித்து, இருப்பவற்றில் சிறந்த ஆடையை அணிந்து ‘ஈத்கா’ எனும் திறந்தவெளிக்கு தொழுகைக்குச் செல்ல வேண்டும். (பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தலாம்) அங்கு தொழுகைக்குப் பின் பெருநாள் உரை நிகழ்த்தப்படும். அதிலும் கலந்துகொள்ள வேண்டும்.

    தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரையருவர் ஆரத்தழுவி தமது வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள். பெருநாளின்போது வீண் விரயத்திற்கும் கேளிக்கைகளுக்கும் இடமில்லை.

    அனைவருக்கும் ஈத் முபாரக் - ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.  
    உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம்.
    ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும்.

    ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை  முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.

    மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.

    இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.

    ஸகாத் என்பது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமையான தர்மமாகும். இஸ்லாத்தில் மூன்றாவது தூணாக ஸகாத் கருதப்படுகிறது. ஸகாத் என்றால் தூய்மையடைதல் என்ற பொருளையும் தருகிறது. இது உளத்தூய்மையைக் குறிக்கிறது. பொருளீட்டும் நபருக்கு அந்தப் பொருளின் மீதான காதலை முறியடித்து, தன் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை தானமாகக் கொடுத்து அதில் கிடைக்கும் மனநிறைவை ஏற்படுத்துவதே ஸகாத்தின் நோக்கமாகும்.


    “அல்லாஹ் வட்டியை (அதில் எந்தப் பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; தன் கட்டளையை நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்ற திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 276-வது வசனம் வட்டியால் அழிவும், தர்மத்தால் நன்மையும் ஏற்படும் என்று நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

    ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.

    ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.
    ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் இயக்கத்தின் சார்பில் ஆற்றிய சாதனைகள் எண்ணிலடங்காதவை.

    இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் அனைத்து வகையிலும் மென்மேலும் உயர்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடனும் செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையின மக்களின் சமூக, கல்விபொருளாதார முன்னேற்றத்திற்காக என்றைக்கும் உற்ற துணையாக விளங்கிடும் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    நபிகள் நாயகம் வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ, கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.

    நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தே.மு.திக. தலைவர் விஜயகாந்த்:-

    பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல்நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்புகள். புனித நோன்பினை முடித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன் னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    புரட்சி தலைவி அம்மா இஸ்லாமியர்களின் அரணாகத் திகழ்ந்து. அவர்களின் நன்மைக்காக முன்னெடுத்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் அனைத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தவை. தமிழகத்தில் தழைத்தோங்கிவரும் இந்த சகோதரத்துவம் என்றும் நிலைத்திட செய்யவும், இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாத்திடும் அரணாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் திகழ்ந்திடும்.

    இந்நன்னாளில் இறைத் தூதர் நபிகள் நாயகம் போதனைகளை தொடர்ந்து கடைபிடிப்போம். போற்றிடுவோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பண்பாட்டு ரீதியாக இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் ஒற்றுமையாக அணி திரள்வதற்கு ரமலான் நோன்பு ஏதுவாக அமைவதை காணமுடிகிறது. மானுடத்தின் மேன்மையை வலுப்படுத்தும் மனிதநேயம் என்னும் மாண்பினை இது செழுமைப்படுத்துகிறது. சாதி, மத வரம்புகளைத் தாண்டி ஏழை எளியோருக்கு கொடையளிக்கும் கருணையையும் இந்த நோன்பு மேம்படுத்துவதை உணரமுடிகிறது.

    இத்தகைய சிறப்புக்குரிய நோன்பை நிறைவுசெய்யும் திருநாளான ரமலான் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர- சகோதரிகளுக்கும் அனைவருக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்கள் மற்றும் நலங்களும் பெற்று எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும் அன்பான ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- நோன்பு காலத்தில் வறுமையில் உள்ள ஏழை எளியோருக்கு உதவி செய்வதை குர்ஆன் வலியுறுத்துகின்றது. இந்த நோன்பு ஏழை, பணக்காரன் என்கின்ற பேதம் கிடையாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை இந்த புனித மாதம் தெள்ளத்தெளிவாக்குகின்றது. இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் தின வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி:-

    அறுசுவையான உணவுகளை உட்கொண்டு புத்தாடை அணிந்து உறவினர்களுடன் இந்த நன்நாளில் இன்பமுற்று இருப்பது போல வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம், வறியவர்களுக்கு உதவிடுவோம். மத நல்லிணக்கத்தை காத்திடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:-

    ரம்ஜான் பண்டிகையின் மகிழ்ச்சியே இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வதுதான். சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பை பகிர்தல் என ரமலான் பண்டிகை மனித நேயத்தையும் உணர்த்துகிறது. இதுவே அதன் சிறப்பாகும். இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், இந்திய ஹஜ் அஷோசி யே‌ஷன் தலைவர் ஏ.அபுபக் கர் ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Ramadan
    ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை ஆயுள்வரை காப்போம். ரமலானில் கடைப்பிடித்த நல்லறங்களை ஆயுள்வரை நீட்டிப்போம். ரமலானில் கைவிட்ட பாவங்களை ஆயுள்வரை விட்டொழிப்போம்.
    இந்த வருடத்தின் ரமலான் மாதம் அனைத்து விதங்களிலும் சிறப்பாக களைகட்டி இருந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்று, ஐங்காலத் தொழுகைகளை பேணுதலாகத் தொழக்கூடியவர்களின் முகங்களும் களைகட்டியது.

    புனித ரமலானில் முஸ்லிம்களிடம் வெளிப்பட்ட ஈகைத்தன்மையால் ஏழை, எளியோர், வழிப்போக்கர், நலிவுற்றோர், யாசிப்போர் ஆகியோரின் முகங்களிலும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

    உறவினர்களை நலம் விசாரித்ததில் உறவினர்களின் முகங்கள் களைகட்டிக் கொண்டிருக்கிறது. நட்பு வட்டாரத்தை நேரடியாகவோ, அலைபேசியிலோ தொடர்பு கொண்டு நட்பு பாராட்டும்போதும் நண்பர்களின் முகங்களும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

    பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. சிறியவர்களுக்கு இரக்கம் காட்டு வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. பெற்றோருக்கு பணிவிடை செய்வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது.

    சாதி, மத பேதமின்றி சமூக நல்லுறவை புனித ரமலானில் பேணுவதால் நாடே களை கட்டியது. வயிற்றைப் பேணி, கண்களைப் பேணி, காதுகளைப் பேணி, மூக்கைப் பேணி, நாவைப் பேணி, கை, கால்களைப் பேணி, மறைவிடத்தைப் பேணி ஐம்புலன்களை அடக்கி ஆளுவது ரமலானில் நடந்தது.

    மனிதகுலம் வளர, மானுட வசந்தம் தளைக்க, மனித ஒழுக்கம் மேம்பட, நற்குணம் பெற, ஈகை அளித்திட, ஆன்மிகம் உயர, சமநீதி, சமதர்மம், சமஉரிமை, சமூக நல்லிணக்கம், வளமான வாழ்வு, வளமான தேசம், ஆரோக்கியமான சமுதாயம், உலக அமைதி பெற்றிட நோன்பு உறுதுணையாக உடன் இருந்தது.

    அந்த வகையில் முஸ்லிம்களை கவர்ந்திழுத்து, நற்பண்புகளை போதித்து, நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஒரு பாடசாலையாக ரமலான் திகழ்கிறது.



    இந்த ரமலான் கற்றுத்தந்த மற்றொரு பாடம் ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம். இரவு நேரத் தொழுகையிலும், நடுநிசித் தொழுகையிலும் பாவமன்னிப்புக் கோருவதிலும், பிரார்த்தனை புரிவதிலும் இன்முகத்துடன் கலந்து கொண்டோம்.

    ஐங்காலத் தொழுகைகளில் முஸ்லிம்கள் இறையில்லங்களை நோக்கி சாரை சாரையாக, அணி அணியாக ரமலானில் படையெடுத்துவந்த காட்சி ஒரு அபூர்வ காட்சியாகும். இறையில்லங்களை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு பள்ளிவாசல்களில் மக்கள் நெருக்கம் ஏற்பட்டு, நிரம்பி வழிந்தது.

    இவை யாவும் ரமலான் எனும் பள்ளிக்கூடம் கற்றுத்தந்த ஒரு அற்புதமான பாடம். புனித ரமலானின் நோன்பு தந்த இறையச்சத்தின், மனப்பக்குவத்தின் தாக்கம். ரமலான் ஏற்படுத்திய இந்த தாக்கம் பிறை பார்த்தது முதல் பெருநாள் வரை மட்டுமே இருந்து ரமலானுடன் மட்டும் மறைந்து போவது வேதனையிலும் வேதனை.

    ரமலானில் கண்காணித்துக் கொண்டிருந்த அதே இறைவன் ஆயுள்வரைக்கும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். முஸ்லிம்களுக்கு ரமலான் ஏற்படுத்திய தாக்கம் ரமலானுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது.

    ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை ஆயுள்வரை காப்போம். ரமலானில் கடைப்பிடித்த நல்லறங்களை ஆயுள்வரை நீட்டிப்போம். ரமலானில் கைவிட்ட பாவங்களை ஆயுள்வரை விட்டொழிப்போம். குறிப்பாக கடமையான தொழுகை விஷயத்தில் கவனம் செலுத்தி, இடைவிடாது தொழுது வருவோம். இது குறித்து இறைவன் கூறுவதைப்பார்ப்போம்:

    ‘உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.’ (திருக்குர்ஆன் 4:103)

    ‘யார் தொழுகையை மறந்து விடுவாரோ, அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’ (நூல் : முஸ்லிம்)

    ‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்’ (திருக்குர்ஆன் 23:9)

    ‘தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)

    ‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக’ (திருக்குர்ஆன் 11:114)

    எந்த ஒரு வணக்கத்தையும் வாரம் வாரம் இல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை இல்லாமல் நிரந்தரமாகச் செய்வதுதான் இறைவனிடம் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும்.

    ‘உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக’ (திருக்குர்ஆன் 15:99).

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு வேறு எவரிடமும் கேட்க முடியாத இஸ்லாமியக் கடமை ஒன்றை எனக்கு ஏவுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘நான் அல்லாஹ்வை நம்பிவிட்டேன் என்று கூறிய பிறகு அதிலேயே நீர் நிலைத்து நிற்பீராக!’ என இவ்வாறு கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் சுப்யான் ஸகபீ (ரலி), நூல் : அஹ்மது)

    ‘நிலைத்து நிற்பது என்றால், கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவது’ என அலி (ரலி) கூறுகிறார்கள்.

    ‘தொழுகை என்பது முஸ்லிமான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடைந்ததிலிருந்து மரணம் ஏற்படும் வரைக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமை. இது ரமலானில் மட்டும் நிறைவேற்றும் கடமை அல்ல.

    ஒரு செயலுக்கு இறைவனிடம் சிறந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அதை ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் செய்ய வேண்டும்.

    ‘குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் காரியமே இறைவனிடம் பிரியமானதாக உள்ளது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    தொழுகையிலும், ரமலான் கற்றுத்தந்த இதர காரியங்களிலும் நாம் நீடித்து ஆயுள்வரை செய்வோம்! பேணிக் காப்போம்! ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை உயிர் உள்ளவரை தக்க வைப்போம்!!

    -மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalanisamy #Ramadan
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியப் பெருமக்கள் இந்த புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

    புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, 2600 உலமாக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிருவாக மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தியது.

    பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் தொகுப்பு நிதி உருவாக்கியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குவது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க அரசாணை வெளியிட்டது.

    மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு மேன்மையுற சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

    இந்த ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #Ramadan
    தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ள நிலையில், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Ramadan #Eid
    சென்னை:

    தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

    இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் வருகிறது. எனினும், பிறை தெரிவதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
    ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

    அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

    நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இதே போல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.

    உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக் கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ்:-

    ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமலான் மாதத்தில் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப் பாடு, சமூக நலம் பேணு தல் போன்ற நல்ல விளைவு கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திருநாளும் என்ன நோக்கத் திற்காக கொண்டாடப் படுகின்றனவோ, அதை உணர்ந்து அந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan

    மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.
    ரமலான் நம்மைவிட்டு பிரியவிருக்கின்றது. அடுத்த ரமலானுக்காக இன்னும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும். இம்மாதம் முழுவதும் இறைவழிபாட்டிலும், இறை தியானத்திலும், இறைமறையை ஓதுவதிலும், இறையடியார்களுக்கு வழங்குவதிலும் கழிந்தது. பகலில் பசித்திருந்து, இரவில் விழித்திருந்து இறைவனை வணங்கினோம். இத்தனை சிரமப்பட்டு நோற்ற நோன்பு வீணாகிப் போய்விடக் கூடாது அல்லவா?

    நோன்பு என்பது ஒரு ஆன்மிக, ஒழுக்க, மனித நேயத்திற்கான பயிற்சியாகும். இம்மாதத்தில் பெற்ற பயிற்சியை இம்மாதத்தோடு முடித்துவிட்டு பிற மாதங்களில் எப்போதும்போல வாழ்ந்தால் இந்த நோன்பு நம்மிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஆகிவிடும்.

    ஒரு ராணுவ வீரன் படையில் சேருமுன் பயிற்சி பெறுகிறான். பின்னர் படையில் சேர்ந்து, அந்த பயிற்சியை செயல்படுத்துகின்றான். இதுபோலவே ஒவ்வொரு தொழில் செய்வோரும் முதலில் பயிற்சி பெற்று பின்னர் அந்தப் பயிற்சியின் அடிப்படையில் தமது தொழிலை அமைத்துக் கொள்கின்றனர்.

    அதுபோலவே இறைவனும் தனது அடியார்களுக்கு தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளின் மூலம் பயிற்சி அளிக்கின்றான். பின்னர் அந்தப் பயிற்சியில் கற்றதை, பெற்றதை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் பயிற்சிக் காலத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன். பின்னர் எப்படியும் நடந்துகொள்வேன் என்றால் அந்தப் பயிற்சி அவசியமில்லையே. இத்தனை சிரமங்களையும், தியாகங்களையும் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?

    எனவே நோன்பு உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து சுயசோதனை செய்யுங்கள். ஒரு செயல் வெற்றிபெற திட்டமிடுதல், செயல்படுத்துதல், சுயமதிப்பீடு செய்தல் ஆகிய இம்மூன்றும் முக்கியமாகும். எனவே உங்கள் வழிபாடுகளையும் சுயசோதனைக்கு உள்ளாக்குங்கள். வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகள் பற்றியும், வழிபாடுகள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் சுய சோதனை செய்யுங்கள்.

    பயிற்சியின்போது பெற்றதை பழக்கமாக, இயல்பாக மாற்றுங்கள். ரமலானில் தொழுதது போலவே பிற மாதங்களில் தவறாது தொழுது வாருங்கள். ரமலானில் தீமைகளை பார்க்க, கேட்க, செய்ய அஞ்சியது போலவே பிற மாதங்களிலும் தீமைகளை கண்டால் விலகி ஓடுங்கள். ரமலானில் இல்லாதவருக்கு வழங்கியதுபோலவே என்றும் வழங்கி வாருங்கள்.

    ரமலானில் குர்ஆனை ஓதியது போல தொடர்ந்து குர்ஆனை ஓதி வாருங்கள். பள்ளிவாசல்களிலும் திருக்குர்ஆன் விரிவுரை வகுப்புகளை தொடங்க முயற்சி செய்யுங்கள்.

    உங்கள் பள்ளிவாசலில் ஏழைகளுக்கு நிரந்தரமாக எப்போதும் உதவி செய்யும் வகையில் பொதுநிதியை (பைத்துல்மால்) தொடங்குங்கள்.

    ரமலானே! சென்றுவா. எங்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்த ரமலானே சென்றுவா. மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.

    ×