search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public protest"

    • முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    முக்கூடல்:

    முக்கூடல் பேரூராட்சிக்கு ட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த மின்விளக்கு திறப்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் பதில் இல்லை. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது.

    இந்நிலையில் நேற்று உயர் மின்கோபுரத்திற்கு முன்பாக அரிக்கேன் விளக்கு மற்றும் ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் முக்கூடல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடேபாளையத்தில் பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர்.
    • 2 நாட்களில் இதற்கான உறுதியை ஆவணம் மூலமாக வழங்க வேண்டும் என கூறி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி அடுத்த தொப்ப ம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடே பாளை யத்தில் 12-வது வார்டு பகுதியில் வீடு இல்லாத வர்களுக்கு காலி மனை இடம் கேட்டு பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டாக மனு கொடுத்து வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தலைமையில் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பட்டா கேட்டு பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டனர்.

    மேலும் கோடேபாளையத்தில் பட்ட கேட்டு 100-க்கும் மேற்பட்ட வர்கள் போரா ட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்து க்கு வந்து பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து அதிகாரி கள் மற்றும் போலீசார் கூறும் போது, நீங்கள் கேட்கக் கூடிய இடம் பாது காப்பானது அல்ல. எனவே மாற்று இடம் தருகிறோம் என்று அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் எங்க ளுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாரதி ஜனதா கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் பல இடங்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒதுக்குவதாக உத்திரவாதம் கொடுத்தனர்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு 2 நாட்களில் இதற்கான உறுதியை ஆவணம் மூல மாக வழங்க வேண்டும் என கூறி அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் சண்முகம் மற்றும் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோஷ்டி மோதல் -பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    இலவம்பாடி அரசு பள்ளியில் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லாத தலைமை ஆசிரியர் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 280 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் உள்ளனர்.

    பள்ளி தலைமை ஆசிரியராக பூட்டுத்தாக்கை சேர்ந்த கஜேந்திரன், கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அதே பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா அரசு பள்ளிக்கு பணி மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஆனால் தலைமையாசிரியர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு செல்ல மறுத்து, இலவம்பாடி அரசு பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மேலும் அவர் இலவம்பாடி பள்ளிக்கும் வர மறுத்து, தற்போது மருத்தவ விடுப்பு எடுத்துள்ளார். தற்போது 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தலைமை ஆசிரியர் கஜேந்திரன் பள்ளிக்கு வராததால், மாணவர்கள் ேசர்க்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளியில் குவிந்தனர். பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட கிராமத்திற்கு தலைமை ஆசிரியர் கஜேந்திரன் செல்லவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பள்ளி நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சிலர், போராட்டக்கார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருத்தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் இலவம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜன்பாபு என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் பணியிடை மாறுதலுக்காக ஒரே ஊரை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
    • குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் வழியாக விண்ணமங்கலம் மலைப்பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

    வாகனங்கள் போக்குவரத்து காரணமாக அந்தப் பகுதியில் புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே இந்த கிராமத்தின் வழியாக வாகனங்கள் சென்றுவர அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்தப் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கல்குவாரியில் இருந்து வந்த லாரி மோதியது. இதனால் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால், அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த வழியாக வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம்,பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் மயானம் பல ஆண்டுகளாக இல்லாததால் இறந்தவர் உடலை ஓடைக்கால்வாயில் அடக்கம் செய்து வருவதில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக தொடர் மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதிலும், இறுதி காரியங்கள் செய்வதிலும் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் கிராம மக்கள் மயானத்திற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மயானத்திற்கு இடம் தரக்கோரி அப்பகுதி மக்கள் கையில் மண்டை ஓட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர்.
    • எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை- கன்னியாகுமரிதொழில் தட திட்ட புதியசாலை அமைக்கும்பணி கடந்த 2021 -ம் ஆண்டு தொடங்கிவேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலைபணிக்காக நிலம் கையகப்படுத்தும்பணி மற்றும் இழப்பீடு தொகைவழங்கும்பணிகள் முழுமையாக நடந்துமுடிந்தநிலையில் அண்ணாகிராமம் ஒன்றியம் கனிசபாக்கம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர். புதிய போர் போடும் பணி தாமமமானதால் மேல்நிலை நீர்த்தேக்க.தொட்டியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிதகவல்அ றிந்ததும்அங்கு விரைந்து வந்த அண்ணா கிராமம் தி.மு.க. ஒன்றியசெ யலாளர்வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்திகி ராமபொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,என்ஜி னீயர்கள் சுந்தரி, ஜெயந்தி, ஏழிலரசி, நில எடுப்புதனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, மீரா கோமதி, கணிசபாக்கம்பஞ்சாயத்து தலைவர்திருநாவுக்கரசு ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்துக்குள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றபிறகு புதிய சாலை அமைக்கும் பணிக்கான பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே குப்பைகுழி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஜேசிபி இயந்திரம் முற்றுகையிட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றிய ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் காந்திநகர் பகுதியில் குப்பைகுழி அமைப்பதற்கு ஊராட்சி மன்ற சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் துவங்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் அவ்விடத்தில் திரண்டனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 50 க்கும் மேற்பட்ட வீடுகள் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் குப்பைகுழி அமைத்தால் துர்நாற்றம் வீசும் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை இங்கு கொண்டு மலைப் போல் குவித்து அதனை தீயிட்டு கொளுத்துவார்கள்.

    இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கும் மேலும் துர் நாற்றம் வீசும் என்று கூறி குப்பை குழி அமைப்பதற்கு வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து குப்பை குழி அமைக்கவும் பணி மேற்கொள்ள அப்பகுதியில் இருந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் குப்பை குழி அமைக்கப்படாது என்று கூறியதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 50-வது கோட்டத்துக்கு உட்பட்ட ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய 30 அடி சாலையை ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் சாலை வசதியும் இல்லாமல் இருந்து வருகின்றார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், மண்டலக் அலுவலகத்திலும் ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியு றுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சாக்கடை நீர் வீட்டிற்குள் புகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வேதனை அடைந்த மக்கள், இன்று கொண்டலாம்பட்டி 50-வது வார்டு முருகன் தலைமையில் திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மேயரின் காரின் முன்பு திடீரென அமர்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர், காரை எடுத்தார். இதனை அடுத்து அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மேயர் ராமசந்திரனை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்ததை அடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருகி றோம். கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியே வரு வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

    மேலூர்

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி இடையே அமைந்துள்ளது கருங்காலக்குடி. இங்கு 24 மணிநேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க காலத்தில் இருந்தே, கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. மேலும் கருங்காலக்குடியில் இருந்து அவசர மற்றும் விபத்து காய சிகிச்சைகளுக்கு மதுரைக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு இந்த 108 வாகனம் மிகுந்த உதவியாக விபத்தில் சிக்கிய மக்களின் உயிர் காக்கும் பயனுள்ள வாகனமாக செயல்பட்டு வந்தது.

    மேலும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து காய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டுமென ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரிகளிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளனர். தற்போது இருக்கும் வசதியையும் குறைக்கும் வகையில் இங்கு இயங்கி வந்த 108 அவசர சிகிச்சை வாகனத்தை அவசர கதியில் தும்பைப்பட்டிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்திரவிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு வாகனம் தும்பைப்பட்டிக்கு சென்றுவிட்டது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அதிகாரிகளிடம் இங்கிருந்து மாற்றம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

    • உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைக்க வலியுறுத்தல்
    • நீர் நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த நிலையில் நேற்று கரிக்கலாம்பாடி ஊர் பொதுமக்கள் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, கரிக்கலாம்பாடி ஏரியின் கரையை சிலர் 450 மீட்டர் நீளத்திற்கு வெட்டி மண்ணை திருடிஉள்ளனர். வெட்டிய பகுதியின் மேற்புறம் உள்ள பனை மரங்கள் சாயும் நிலையில் உள்ளன. பலத்த மழை பெய்தால் அந்த மரங்கள் சாய்ந்துவிடும். ஏரி நிரம்பினாலோ, புயல் வெள்ள அபாயம் ஏற்பட்டாலோ ஏரி உடையும் நிலைமை ஏற்படும்.

    நீர் நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கிராம நிர்வாக அலுவலர் மோகனிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு
    • விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கத்தாரி செல்லும் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் வழியாக மல்ல குண்டா, கத்தாரி. பள்ளத்தூர். மணியாகர்வட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் இவ்வழியாகதான் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தரைப்பாலம் சேதம் அடைந்தது.

    எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு ஆபத்தான நிலையில் கடந்த செல்கின்றனர்.

    தரைப்பாலத்தை சீர மைக்க அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உடைந்த தரை பாலத்தின் பள்ளத்தில் இறங்கி நின்று பாலத்தை சீரமைக்கவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆனைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள சோலார் அடுத்த புறவழி ச்சாலை பகுதியான ஆனை க்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்து கவுண்டன் பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சென்று வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேக த்தடைகளும் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அகற்ற ப்பட்டது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்து வந்தது.

    ஒரு சில விபத்துகளும் இந்த பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இல்லாததால் வேகமாக சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில்  ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சரஸ்வதி எம்.எல்.ஏ., மொட க்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.

    இதில் சரஸ்வதி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேசி முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை யடுத்து அதிகாரிகள் விரை வில் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதனை அடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அங்கு இருந்து கலை ந்து சென்றனர்.

    ×