search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் நூதன போராட்டம்"

    • அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம்,பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் மயானம் பல ஆண்டுகளாக இல்லாததால் இறந்தவர் உடலை ஓடைக்கால்வாயில் அடக்கம் செய்து வருவதில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக தொடர் மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதிலும், இறுதி காரியங்கள் செய்வதிலும் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் கிராம மக்கள் மயானத்திற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மயானத்திற்கு இடம் தரக்கோரி அப்பகுதி மக்கள் கையில் மண்டை ஓட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×