search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க வலியுறுத்தி"

    • ஆனைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள சோலார் அடுத்த புறவழி ச்சாலை பகுதியான ஆனை க்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்து கவுண்டன் பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சென்று வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேக த்தடைகளும் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அகற்ற ப்பட்டது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்து வந்தது.

    ஒரு சில விபத்துகளும் இந்த பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இல்லாததால் வேகமாக சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில்  ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சரஸ்வதி எம்.எல்.ஏ., மொட க்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.

    இதில் சரஸ்வதி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேசி முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை யடுத்து அதிகாரிகள் விரை வில் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதனை அடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அங்கு இருந்து கலை ந்து சென்றனர்.

    ×