search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public impact"

    தஞ்சை அருகே குரங்குகளின் அட்ட காசத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே கீழவஸ்தாசாவடி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கு வசித்து வந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து அட்டகாசம் செய்துவருகின்றன.

    அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்றுவிடுகின்றன. மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளிவிடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை  பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்வயர்கள், வெயிலில் காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டுவரும் உணவுகளை பாய்ந்து பிடுங்கிசெல்கின்றன.இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை என்ன செய்வது என புரியாமல் புலம்பி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகாரை பெற்று கொண்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர்.

    இந்நிலையில் பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் குரங்களை பிடித்து வனத்துறை பகுதியில் விடவில்லை என்றால் அடுத்த கட்டமாக அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியில் மழை நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியின் மையப்பகுதியில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை பெய்யும் போது 20 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி விடுகிறது. இந்த மழை நீர் வடிய குறைந்த பட்சம் 3 அல்லது 4 நாட்கள் ஆகிறது. 

    சாதாரணமாக குறைந்த அளவு மழை பெய்தாலும் சாலையின் நடுவே தண்ணீர் தேங்கி விடுகிறது. ஒரு பகுதி பள்ளமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. சாலையில் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதால் வாகனங்கள் செல்லும் போதும், சாலையோரத்தில் நடந்து செல்லும்போதும், சகதியுடன் சேர்ந்த தண்ணீர் படுவதால் சாலையில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. 

    இதனால் கடை வியாபாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே கொள்ளிடத்தின் மையப்பகுதியில் பள்ளமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை சரிபடுத்தவும் தண்ணீரை உடனடியாக வடியவைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர் குன்னூர் நகர பகுதிகளில் தினம் தோறும் காலை வேலைகளில் திடீரென்று சீதோஷ்ண நிலை மாறி கடுமையான மேகமூட்டம் ஏற்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்த பகுதியாக திகழ்கிறது. இதனால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவில் உள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல கூடிய நிலை உள்ளது. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவில் மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் எதிர் வரும் வாகனத்தின் மீது மோதாமல் இருக்கவும் வளைவுகளில் உள்ள பள்ளங்களை பார்க்க முடியாமலும் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்கின்றனர்.

    மலை ரெயிலும் இந்த கடுமையான மேகமூட்டத்தில் இருந்து தப்பவில்லை. மலை ரெயில் வருவது கூட பார்க்க முடியாத அளவில் கடுமையான மேக மூட்டம் உள்ளது. இந்த மேக மூட்டத்தில் பனி துணிகள் சாரலாக பெய்து வருகிறது.

    இதனால் பொதுமக்களின் உடல் நிலை கடுமையாக பாதித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அதிக அளவில் மருத்துவ மனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே தினம் தோறும் குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் நேற்று பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் சிலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர்.
    பெரம்பலூர், 

    ‘கஜா‘ புயல் கரையை கடந்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூரில் நேற்று அதிகாலை திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை வரை விட்டு, விட்டு பெய்தது. பலத்த மழையாக பெய்யாமல் அவ்வப்போது சடசடவென மழையுடன் ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை தூறிக்கொண்டும் இருந்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் மிகுந்த சிரமத்துடன் குடை பிடித்தபடி அவசர அவசரமாக நடந்து சென்றதை காணமுடிந்தது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழை கோர்ட் அணிந்தபடியும், குடை பிடித்தவாறும் சென்றனர்.

    பகல் நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழந்து பகல் பொழுது இரவு போலவே இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். நேற்று பெய்த மழையால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்புகள் உள்ளதால், அதில் தேங்கியிருந்த கழிவுநீர் மழை பெய்யும் போது மழைநீருடன் சாலைகளில் ஓடியது. இதனால் தூர்நாற்றம் வீசியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின. மாலை நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவ- மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். இதேபோல் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் சிலர் வெளியே செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர்.

    இதேபோல் அரியலூரில் நேற்று அதிகாலை 4 மணி முதல் மாலை வரை விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. வி.கைகாட்டி, தாமரைக்குளம், திருமானூர், தா.பழூர், மின்சுருட்டி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளைம், செந்துறை, விக்கிரமங்கலம், கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது.
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை தென்மேற்கு பருவமழை எதிர் பார்த்த அளவிற்கு பெய்தது.

    ஆனால் வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கவில்லை, மாறாக தற்போது மழை இன்றி வெயில் கடுமையாக அடிக்கிறது. கோத்தகிரியில் வழக்கத்திற்கு மாறாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

    இதற்கு நேர் மாறாக இரவு நேரங்களில் உறைப்பனி கொட்டுகிறது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் இரவில் உறைப்பனி கொட்டுவதால் பச்சை தேயிலை மற்றும் மலைக் காய்கறி பயிர்கள் கருக ஆரம்பிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    கஜா புயல் தாக்கம் கோத்தகிரியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாக்கம் இல்லாமல் சாரல் மழை மட்டும் தான் பெய்தது. இதனால் உறைப்பனி அதிகமாகி உள்ளது. தொடர்ந்து மழையின்றி இதே நிலை நீடித்தால் கோடைக்கு முன்னரே தேயிலை செடிகள் முற்றிலும் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    சின்னதாராபுரம் அருகே 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    க.பரமத்தி: 

    சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளி குறிச்சி கிராமத்தில் தேவேந்திரன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தேவேந்திரன் நகரில் உள்ள 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதில் ஒரு மின்கம்பம் அருகில் உள்ள வீட்டின் கூரை மீது விழுந்தது. அப்போது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் தேவேந்திரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் மிகவும் அவதி அடைந்தனர். மின் கம்பங்கள் உடைந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் அனைத்தையும் உடனடியாக மின்சார வாரியத்துறையினர் அகற்றி புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவொற்றியூரில் குப்பைகளை எரித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது. #garbageburning
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே பல ஏக்கர் ரயில்வே நிலம் உள்ளது. இங்கு காலியாக உள்ள இடத்தில் மாநகராட்சியும் , தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், தொடர்ந்து குப்பை கொட்ட கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர். #garbageburning

    தருமபுரியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி நகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பி.ஆர். சுந்தரம் தெரு, முஹம்மது அலி கிளப் ரோடு, ஆறுமுகம் ஆசாரி தெரு, பென்னாகரம் மெயின் ரோடு,  நகர் மற்றும் புறநகர் பஸ் நிலையங்களில் சுற்றிதிரிகின்றன. காலை, இரவு நேரங்களில் தனியாக நடந்து வருபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களை இந்த நாய்கள் துரத்தி செல்கின்றன. சில சமயங்களில் சில நாய்கள் கடித்து கொதறுகின்றது. 

    இந்த நாய்கள் நகராட்சி குப்பை வண்டிகளை கண்டால் வண்டியில் பின்னால் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. குப்பை வண்டியில் வரக் கூடிய கழிவுகள் மற்றும் இறைச்சிகளை நாய்கள் உண்கின்றன. 

    இத்தகைய நாய்கள் பொதுமக்களை கடித்தாள் தொற்று நோய் பரவி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆத்தூர் பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட ஆத்தூர், சித்தையங்கோட்டை, செம்பட்டி, போடிக்காமன் வாடி, சீவல்சரகு, ஆதிலட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி, சித்தரேவு, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, சேடப்பட்டி, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்வெட்டு உள்ளது.

    இதன்காரணமாக பொதுமக்களும், வியாபாரிகள் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனை, சித்தையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர் ஆகியோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், செம்பட்டியில் தான் துணை மின்நிலையம் உள்ளது. இப்படி மின்சாரம் தடைபடுகிறது என்று பகலில் போன் செய்தாலும் அங்கு பணியில் இருப்பவர்கள் போனை எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும் வரும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.

    கடந்த வாரம் எல்லாம் பள்ளி மாணவ, மாணவிகள் பரீட்சைக்கு படிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பச்சிளங்குழந்தைகளை வைத்திருப்போர் அவதிப்படுகின்றனர்.

    எனவே மாவட்ட மின்சார வாரியம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரக்கோணம் அடுத்த அரிகலபாடி ஊராட்சியில் குரங்குகளின் தொல்லை தாங்காமல் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அரிகலபாடி ஊராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு முன் குரங்குகள் அதிக அளவில் இருந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சிலர் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட முடிவு செய்து குரங்கு ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து கூண்டுகள் வைத்து பிடித்து வாகனங்கள் மூலம் தொலை தூரத்தில் உள்ள காட்டு பகுதிகளில் விட்டுவிட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் ஏதோ ஒரு ஊரிலிருந்து இரவு நேரத்தில் வாகனங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளை இந்த பகுதியில் விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் குரங்குகள் நடமாட்டம் மீண்டும் இப்பகுதியில் அதிகரித்துள்ளது. மீண்டும் மக்கள் துயரமான நிலையில் உள்ளனர். பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளில் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றுவிடுகிறது. இதற்கு தீர்வு தெரியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. 3 முதல் 6 மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் திடீரென தடைபட்டு மீண்டும் சில மணிநேரம் கழித்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபடும் வேளையில் படிக்க முடியாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது மின்வெட்டுக்கான காரணத்தை தெளிவாக கூறாமல் பராமரிப்பு பணி என மலுப்பி விடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் மின்வெட்டு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பின்றி மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானலில் 10 மணி நேர மின் வெட்டால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலா தலமாகும். எனவேதான் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து செல்கிறார்கள்.

    இதன் காரணமாக சுற்றுலா இடங்களில் அதிக அளவில் எப்போதும் கூட்டம் காணப்படும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் நகரில் ஏராளமான ஓட்டல்கள், லாட்ஜ், தங்கும் விடுதிகள் உள்ளது.

    விடுமுறை காலங்களில் நகர் பகுதியில் கூட்டம் அலை மோதும். கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் அதிகம் உலா வரும் இடமாக பென்ஹில் ரோடு, சிவனடி சாலை பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது.

    நேற்று இரவு 8.20 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று காலை 6.20 மணிக்குதான் மின் இணைப்பு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடிய விடிய தூக்கத்தை தொலைத்தனர்.

    இந்த பகுதியில் காட்டு மாடுகளும் அதிக நடமாட்டம் இருந்தது. இரவு நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் வெளியே வராமல் காட்டு மாடுகளுக்கு பயந்து அறைகளில் முடங்கி கிடந்தனர்.

    சுமார் 10 மணி நேர மின் வெட்டால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பித்து போனது. இதேபோல சுழற்சி முறையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடிக்கிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த போது சுற்றுலா நகரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவு காற்றோடு போய் விட்டது. மின் ஊழியர்கள் இதனை கண்டுகொள்வதே கிடையாது. கிராம பகுதியில் மின் கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் காணப்படுகிறது. இதனை மின் வாரியத்துறையினர் சீரமைக்காமல் அலட்சியத்தில் உள்ளனர். மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அந்த சமயத்திலாவது இது போன்ற வேலைகளை செய்யலாம்.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த வி‌ஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி வேலை செய்யாமல் சண்டித்தனம் செய்யும் மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானல் நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×