என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public impact"
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர் குன்னூர் நகர பகுதிகளில் தினம் தோறும் காலை வேலைகளில் திடீரென்று சீதோஷ்ண நிலை மாறி கடுமையான மேகமூட்டம் ஏற்படுகிறது.
எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்த பகுதியாக திகழ்கிறது. இதனால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவில் உள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல கூடிய நிலை உள்ளது. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவில் மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் எதிர் வரும் வாகனத்தின் மீது மோதாமல் இருக்கவும் வளைவுகளில் உள்ள பள்ளங்களை பார்க்க முடியாமலும் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்கின்றனர்.
மலை ரெயிலும் இந்த கடுமையான மேகமூட்டத்தில் இருந்து தப்பவில்லை. மலை ரெயில் வருவது கூட பார்க்க முடியாத அளவில் கடுமையான மேக மூட்டம் உள்ளது. இந்த மேக மூட்டத்தில் பனி துணிகள் சாரலாக பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் உடல் நிலை கடுமையாக பாதித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அதிக அளவில் மருத்துவ மனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே தினம் தோறும் குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை தென்மேற்கு பருவமழை எதிர் பார்த்த அளவிற்கு பெய்தது.
ஆனால் வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கவில்லை, மாறாக தற்போது மழை இன்றி வெயில் கடுமையாக அடிக்கிறது. கோத்தகிரியில் வழக்கத்திற்கு மாறாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.
இதற்கு நேர் மாறாக இரவு நேரங்களில் உறைப்பனி கொட்டுகிறது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது.
இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் இரவில் உறைப்பனி கொட்டுவதால் பச்சை தேயிலை மற்றும் மலைக் காய்கறி பயிர்கள் கருக ஆரம்பிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கஜா புயல் தாக்கம் கோத்தகிரியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாக்கம் இல்லாமல் சாரல் மழை மட்டும் தான் பெய்தது. இதனால் உறைப்பனி அதிகமாகி உள்ளது. தொடர்ந்து மழையின்றி இதே நிலை நீடித்தால் கோடைக்கு முன்னரே தேயிலை செடிகள் முற்றிலும் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே பல ஏக்கர் ரயில்வே நிலம் உள்ளது. இங்கு காலியாக உள்ள இடத்தில் மாநகராட்சியும் , தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் மலைபோல் குவிந்துள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், தொடர்ந்து குப்பை கொட்ட கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை மலைபோல் குவிந்துள்ள குப்பையில் மர்மநபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு கண் எரிச்சலுடன் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்தனர். #garbageburning
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட ஆத்தூர், சித்தையங்கோட்டை, செம்பட்டி, போடிக்காமன் வாடி, சீவல்சரகு, ஆதிலட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி, சித்தரேவு, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, சேடப்பட்டி, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்வெட்டு உள்ளது.
இதன்காரணமாக பொதுமக்களும், வியாபாரிகள் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனை, சித்தையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர் ஆகியோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், செம்பட்டியில் தான் துணை மின்நிலையம் உள்ளது. இப்படி மின்சாரம் தடைபடுகிறது என்று பகலில் போன் செய்தாலும் அங்கு பணியில் இருப்பவர்கள் போனை எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும் வரும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.
கடந்த வாரம் எல்லாம் பள்ளி மாணவ, மாணவிகள் பரீட்சைக்கு படிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பச்சிளங்குழந்தைகளை வைத்திருப்போர் அவதிப்படுகின்றனர்.
எனவே மாவட்ட மின்சார வாரியம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அரிகலபாடி ஊராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு முன் குரங்குகள் அதிக அளவில் இருந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சிலர் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட முடிவு செய்து குரங்கு ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து கூண்டுகள் வைத்து பிடித்து வாகனங்கள் மூலம் தொலை தூரத்தில் உள்ள காட்டு பகுதிகளில் விட்டுவிட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஏதோ ஒரு ஊரிலிருந்து இரவு நேரத்தில் வாகனங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளை இந்த பகுதியில் விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் குரங்குகள் நடமாட்டம் மீண்டும் இப்பகுதியில் அதிகரித்துள்ளது. மீண்டும் மக்கள் துயரமான நிலையில் உள்ளனர். பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளில் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றுவிடுகிறது. இதற்கு தீர்வு தெரியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. 3 முதல் 6 மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் திடீரென தடைபட்டு மீண்டும் சில மணிநேரம் கழித்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபடும் வேளையில் படிக்க முடியாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது மின்வெட்டுக்கான காரணத்தை தெளிவாக கூறாமல் பராமரிப்பு பணி என மலுப்பி விடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் மின்வெட்டு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பின்றி மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலா தலமாகும். எனவேதான் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து செல்கிறார்கள்.
இதன் காரணமாக சுற்றுலா இடங்களில் அதிக அளவில் எப்போதும் கூட்டம் காணப்படும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் நகரில் ஏராளமான ஓட்டல்கள், லாட்ஜ், தங்கும் விடுதிகள் உள்ளது.
விடுமுறை காலங்களில் நகர் பகுதியில் கூட்டம் அலை மோதும். கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் அதிகம் உலா வரும் இடமாக பென்ஹில் ரோடு, சிவனடி சாலை பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது.
நேற்று இரவு 8.20 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று காலை 6.20 மணிக்குதான் மின் இணைப்பு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடிய விடிய தூக்கத்தை தொலைத்தனர்.
இந்த பகுதியில் காட்டு மாடுகளும் அதிக நடமாட்டம் இருந்தது. இரவு நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் வெளியே வராமல் காட்டு மாடுகளுக்கு பயந்து அறைகளில் முடங்கி கிடந்தனர்.
சுமார் 10 மணி நேர மின் வெட்டால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பித்து போனது. இதேபோல சுழற்சி முறையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடிக்கிறது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த போது சுற்றுலா நகரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவு காற்றோடு போய் விட்டது. மின் ஊழியர்கள் இதனை கண்டுகொள்வதே கிடையாது. கிராம பகுதியில் மின் கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் காணப்படுகிறது. இதனை மின் வாரியத்துறையினர் சீரமைக்காமல் அலட்சியத்தில் உள்ளனர். மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அந்த சமயத்திலாவது இது போன்ற வேலைகளை செய்யலாம்.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி வேலை செய்யாமல் சண்டித்தனம் செய்யும் மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானல் நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்