search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அவதி
    X

    தஞ்சையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அவதி

    தஞ்சை அருகே குரங்குகளின் அட்ட காசத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே கீழவஸ்தாசாவடி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கு வசித்து வந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து அட்டகாசம் செய்துவருகின்றன.

    அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்றுவிடுகின்றன. மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளிவிடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை  பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்வயர்கள், வெயிலில் காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டுவரும் உணவுகளை பாய்ந்து பிடுங்கிசெல்கின்றன.இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை என்ன செய்வது என புரியாமல் புலம்பி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகாரை பெற்று கொண்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர்.

    இந்நிலையில் பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் குரங்களை பிடித்து வனத்துறை பகுதியில் விடவில்லை என்றால் அடுத்த கட்டமாக அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×