search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூரில் கடும் குளிர் - மேக மூட்டம்: பொதுமக்கள் அவதி
    X

    குன்னூரில் கடும் குளிர் - மேக மூட்டம்: பொதுமக்கள் அவதி

    குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர் குன்னூர் நகர பகுதிகளில் தினம் தோறும் காலை வேலைகளில் திடீரென்று சீதோஷ்ண நிலை மாறி கடுமையான மேகமூட்டம் ஏற்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்த பகுதியாக திகழ்கிறது. இதனால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவில் உள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல கூடிய நிலை உள்ளது. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவில் மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் எதிர் வரும் வாகனத்தின் மீது மோதாமல் இருக்கவும் வளைவுகளில் உள்ள பள்ளங்களை பார்க்க முடியாமலும் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்கின்றனர்.

    மலை ரெயிலும் இந்த கடுமையான மேகமூட்டத்தில் இருந்து தப்பவில்லை. மலை ரெயில் வருவது கூட பார்க்க முடியாத அளவில் கடுமையான மேக மூட்டம் உள்ளது. இந்த மேக மூட்டத்தில் பனி துணிகள் சாரலாக பெய்து வருகிறது.

    இதனால் பொதுமக்களின் உடல் நிலை கடுமையாக பாதித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அதிக அளவில் மருத்துவ மனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே தினம் தோறும் குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×