search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Trump"

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீதான புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்தின் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், கனடா, மெக்சிகோ மட்டுமல்லாது டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து உள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு பொருட்கள் மற்றும் பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றின் மீது இறக்குமதி வரி விதித்தனர்.

    டிரம்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதித்துள்ள இறக்குமதி வரி, சட்டவிரோதமானது என கூறினார். அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அவர் கூறி உள்ளார்.

    அதே நேரத்தில் தன் வரி விதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இந்தக் கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்தார்.

    இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ், உருக்கின் மீது 25 சதவீத வரி என்பது அபத்தமானது என குறிப்பிட்டார். ஜெர்மனி பொருளாதார மந்திரி பீட்டர் ஆல்ட்மையர், ஐரோப்பிய யூனியன் தரக்கூடிய பதிலடி, டிரம்ப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்று கூறினார்.  #Tamilnews #DonaldTrump
    வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் நேற்று தொலைபேசியில் பேசினர். வட கொரியாவுடனான சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது, வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது. #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். #Trump #Golfclub
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப்
    அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக சுட்டார்.



    இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் மியாமி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி வைத்திருந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த ஆசாமி ஏன் சுட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trump #GolfClub
    சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #MelaniaTrump 
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    பியாங்யாங்:

    பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படவில்லை.



    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    வாஷிங்டன்: 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கிம் ஜாங் அன் கூறினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    ×