என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prakash raj"
- 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.
- இப்படத்தை தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட் சமீபத்தில் விமர்சித்தார்.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் 53-வது சர்வதேச கோவா திரைப்பட விழாவின் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தி காஷ்மீர் பைல்ஸ்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குனரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, "பதானை தடை செய்ய நினைத்தார்கள் ஆனால் அதன் வசூல் ரூ.700 கோடியை தாண்டியுள்ளது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முட்டாள்தனமான திரைப்படங்களில் ஒன்று. அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்.
படத்தை பார்த்த சர்வதேச ஜூரி இப்படத்தை விமர்சித்தார். இந்த சூழலில் அப்படத்தின் இயக்குனர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை எனக் கேள்வி கேட்கிறார். ஆஸ்கர் இல்லை, ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விவேக் அக்னிஹோத்ரி
இந்நிலையில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பல நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளது. பார்வையாளர்களை குரைக்கும் நாய் என்ற ஒருவர், படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் கஷ்டப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.
A small, people's film #TheKashmirFiles has given sleepless nights to #UrbanNaxals so much that one of their Pidi is troubled even after one year, calling its viewer's barking dogs. And Mr. Andhkaar Raj, how can I get Bhaskar, she/he is all yours. Forever. pic.twitter.com/BbUMadCN8F
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) February 9, 2023
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் அவதார்-2 படத்தை பார்த்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்நிலையில் தனுஷை தொடர்ந்து அவதார் படத்தை தனது மகனுடன் பார்த்து ரசித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
- தற்போது அக்ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார்.
ரிச்சா சதா
இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அக்ஷய் குமார்
இதனிடையே நடிகர் அக்ஷய் குமார், ரிச்சா சதாவின் "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது" என அக்ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Didn't expect this from you @akshaykumar ..having said that @RichaChadha is more relevant to our country than you sir. #justasking https://t.co/jAo5Sg6rQF
— Prakash Raj (@prakashraaj) November 25, 2022
- தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரகாஷ் ராஜ்.
- இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் தீவிர அரசியல் விமர்சனம் செய்வது குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்.
என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது" என்றார்.
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
- இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "ஷாட் ஓகே... அடுத்து" என கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
- இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
- வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வாரிசு
2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
விஜய் - பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாரிசு படத்தில் உங்கள் காதாபாத்திரம் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், "செல்லத்தோட வேலை பார்த்து கிட்டத்தட்ட 15 வருடம் ஆகிவிட்டது. இது ஒரு நல்ல படம். கதையை சொல்லனுமா? வேண்டாமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நானும் செல்லமும் திரும்ப சேர்ந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
- டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
- இவர் சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். அதன்பின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் அனைவரையும் கவர்ந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது அரசியல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும், பா.ஜ.க. அரசு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல விமர்சனங்களை வைத்து வருகிறார்.
பிரகாஷ் ராஜ் பதிவு
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராமர், ஆஞ்சநேயர், அசோக சின்னத்தில் இருக்கும் சிங்கங்களின் முகம் ஆகியவற்றின் முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படக்களை பதிவிட்டு "நாடு எங்கே செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் தேசிய சின்னமான நான்கு சிங்கங்களை கொண்ட முத்திரையின் வெண்கல சிலை பழைய சிங்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது அதனை சுட்டிக்காட்டும் விதமாக கருத்தை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Where are we heading… #justasking pic.twitter.com/WjQI1O18pp
— Prakash Raj (@prakashraaj) July 14, 2022
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ்.
- இவர் நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். அதன்பின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் அனைவரையும் கவர்ந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் திரையுலகில் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் பிரகாஷ் ராஜ் வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23-ந்தேதி ஆகிய 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதலே பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவர் தோல்வி முகத்தில் உள்ளார்.
பாரதிய ஜனதா வேட்பாளர் பி.சி.மோகன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அங்கன்வாடி மையங்கள் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களாக மாற்றப்படும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு பள்ளிகளை மூடுவதை தடுப்போம். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்போம். உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை தீவைத்து எரிக்க தடை விதிக்கப்படும். ஏரிகள் பாதுகாக்கப்படும், ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PrakashRaj
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டு முதல் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார். அதன்படி பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
அவருக்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு தினமும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூர் மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன்.
நான் எம்.பி.யாக தேர்வு ஆகிவிட்டால் ஏதோ ஒரு கட்சியில் போய் சேர்ந்து விடுவேன் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் எந்த ஒரு கட்சியிலும் போய் சேர மாட்டேன். சுயேட்சையாகவே நீடிப்பேன்.
நான் வெற்றி பெற்றால் பெங்களூர் மத்திய பகுதியில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து தருவேன். எனது மக்கள் பணி வெளிப்படையாகவே இருக்கும்.
ஒருவேளை தோல்வி அடைந்தால் மக்கள் பிரதிநிதிக்குரிய பணியை செய்வேன்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்