என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pledge"
- ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
புகை பிடிக்காத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையமும் இணைந்து ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், நிலைய துணை மேலாளார் (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசக குழு உறுப்பினர் சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவச் செயலர்கள் சுந்தரம், காமராஜ், பூபாலன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை என் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இதனால் அருகாமையில் இருப்பவர்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வேன் போன்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.
கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.
முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.
- குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
- அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.
பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்து துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், உலக புற்றுநோய் தினம் என்பது புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , அதைத் தடுக்கவும் , கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 4 அன்று குறிக்கப்படும் சர்வதேச நாளாகும் . புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்ட உலக புற்றுநோய் தினத்தில் பல முயற்சிகள் நடத்தப்படுகின்றன என்றார். மேலும் புற்றுநோய் சிகிச்சைக்கு உள்ளான பெண்களுக்கு தானம் செய்வதற்காக தன் தலைமுடியை வெட்டாமல் கடந்த சில மாதங்களாக இருக்கும் அலகு -2 மாணவன் அருள் குமார் மற்றும் ராஜபிரபு ஆகியோரை பாராட்டினார். பிறகு திருப்பூர் ெரயில் நிலைய உதவி மேலாளர் சங்கர் தலைமையில் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிலையத்தில் உள்ள நடைபாதையில் மாணவர்கள் பேரணியாக புற்று நோய் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், புற்று நோய் வராமல் தடுப்போம் போன்ற கோஷங்களை எழுப்பி சென்றனர். பயணிகளுக்கு புற்று நோய் குறியீடு ரிப்பன் அணிவித்தும், புற்று நோயை எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார்கள். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ரெயில் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
- தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.
மதுரை
நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை மற்றும் நா.ம.ச. காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபை ஆகிய சங்கங்களுக்கு செயற்குழு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மதுரை நாகமலை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தது.
இதில் நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு மரங்களில் பல்வேறு வகை இருந்தாலும் அதில் பனைமரம் மட்டுமே மிகப்பெரிய புயல், மழையை யும் தாங்கி உறுதிப்பிடிப்பு டன் நிலைத்து நிற்கும் தன்மை உடையது. அதுபோலவே நாடார் மகாஜன சங்கமானது தனிச்சிறப்புடன், தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய தலைவர்
மற்றும் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேலு, நீதிபதி வணங்காமுடி, சிவகாசி காளீஸ்வரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன், தூத்துக்குடி டைமண்ட் சீ புட்ஸ் நிர் வாக இயக்குநர் பால்பாண்டி, மதுரை
கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனர் தனுஷ்கரன் முன்னிலை வகித்தனர்.
நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தலைவர் வி.எஸ்.பி.குருசாமி, பொரு ளாளர் ஏ.சி.சி.பாண்டியன், செயலாளர்(மேன்சன்கள்) மாரிமுத்து, செயலாளர் (அச்சகம்) கிப்ட்சன், செயலாளர் (பள்ளிகள்)ஐசக் முத்துராஜ், மண்டல செயலாளர்கள் சேகர் பாண்டியன், சுப்பிரம ணியன், கனகரத்தினம், ஈஸ்வரன், பிரபாகரன், முருகேசபாண்டியன் மற்றும் பலர் பேசினர்.
இதில் நாடார் வெள்ளைச்சாமி கல்லூ ரியின் தலைவர் ஏ.எம்.எஸ். ஜி.அசோகன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் பொன்னு சாமி, செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி, இணைசெயலாளர் ஆனந்த குமார், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி பரி பாலன சபையின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் வனராஜன், செயலாளர் சுரேந்திரகுமார், பொருளா ளர் வஞ்சிக்கோ, இணைச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட, மாநக ராட்சி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பாக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது
- தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளிசங்கர் ஆலோசனையின் பேரில் வாசுதேவநல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிவகிரி:
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பாக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளிசங்கர் ஆலோசனையின் பேரில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் அறிவுரை யின்படி, வாசுதேவநல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் ராயகிரி, தென்மலை, தேவிபட்டணம், தலைவன்கோட்டை, வடமலாபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதுபோன்று சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமையில், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் சிவகிரி பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், தேவி செந்தில் சரவணன் வீர தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, வட்டார திட்ட உதவியாளர் சித்ரா, மேற்பார்வையாளர் சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் நேரில் சென்று சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை களையும் விதம், உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும் உள்ளிட்டவைளை குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
- சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- பெரியார் பிறந்த நாள் விழா
அரியலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பெரியார் பிறந்த நாள் விழா நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் போலீசாரால் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டு சுப்பிரமணியன், சமாதான கமிட்டி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட, ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது.
- நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு நடந்தது
- கலெக்டர் தலைமையில் நடந்தது
கரூர்:
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலர் ஜெயக்குமார், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாலையில் நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள் 43 மற்றும் 45 சார்பாக போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் கல்லூரி உள்ளரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் கலந்து கொண்டார். திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் சிறப்புரையாற்றினார். திருச்செந்தூர் துணை தாசில்தார் சங்கநாராயணன் கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அபுல்கலாம் ஆசாத் மற்றும் மருதையாபாண்டியன் செய்திருந்தனர்.
- தொண்டி அரசு ஆண்கள் பள்ளியில் போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடந்தது. இப்பள்ளியைச் சேர்ந்த 260 மாணவர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாககூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, பள்ளிப்பருவத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், முதல் தகவல் அறிக்கை உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்