search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
    X

    கருத்தரங்கம் நடந்தபோது எடுத்தபடம்.


    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலர் ஜெயக்குமார், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாலையில் நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள் 43 மற்றும் 45 சார்பாக போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் கல்லூரி உள்ளரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் கலந்து கொண்டார். திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் சிறப்புரையாற்றினார். திருச்செந்தூர் துணை தாசில்தார் சங்கநாராயணன் கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அபுல்கலாம் ஆசாத் மற்றும் மருதையாபாண்டியன் செய்திருந்தனர்.


    Next Story
    ×