search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Ban"

    மதுக்கூர் பகுதியில் உள்ள கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வர்த்தக நிறுவனங்களில் இருந்து 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களிடம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    வணிக நிறுவனங்கள் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கண்டிப்பாக வழங்க கூடாது. விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது துணிப்பைகள் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
    புள்ளம்பாடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் அலுவலர்கள் களஆய்வு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடைகளில் விதி முறைகள் மீறிபயன் படுத்திய  5 கிலோபிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினார்கள்.மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.1300 அபராதம் விதித்தனர்.

    இந்த சோதனையில் இளநிலை அலுவலர் குமார், வரிதண்டலர்  பாஸ்கர் சுகாதார பரப்புரையாளர்கள், பணியாளர்கள்  ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் சோதனைக்கு சென்ற வீடு பூட்டப்பட்டிருந்ததால் நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டுக்கு மற்றொரு பூட்டு போட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகராட்சி கமி‌ஷனர் சுரேந்திரன் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் கன்னா, கார்த்திகேயன் ஆகியோர் குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 540 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினர்.மேலும் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் வீட்டுக்கு மற்றும் ஒரு பூட்டு நகராட்சியால் போடப்பட்டது அந்த இடத்தில் மீண்டும் ஆய்வு நடக்கும் என்று நகராட்சி கமி‌ஷனர் தெரிவித்தார்.
    தேர்தல் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்தியதால் சென்னையில் மீண்டும் பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்துள்ளது. #plasticban #electionofficer

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள், நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தியது.

    இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டமும் இயற்றப்பட்டது.

    சென்னையில் மட்டும் 35 ஆயிரம் கடைகளில் சோதனை நடத்தி 165 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசு சார்புடைய நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் அரசு தடை காரணமாக பிளாஸ்டிக் பைகளை பெரும்பாலும் தவிர்த்து விட்டன.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அதிகாரிகள் கவனம் திசை மாறியது. எல்லோரும் தேர்தல் பணிக்கு சென்றதால் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்காணிக்கவில்லை.

    இதையடுத்து மீண்டும் சர்வசதாரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழங்குகின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகளை மீண்டும் உற்பத்தி செய்யவும் தொடங்கி விட்டனர். இதனால் மீண்டும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிய தொடங்கி உள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வில்லை.

    அதே நேரம் பிளாஸ்டிக் சமூகத்துக்கு தீங்கு விளை விப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #plasticban #electionofficer

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. #PlasticBan
    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் கவர், கப்புகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதோடு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    இதையடுத்து சேலத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், கறிக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவற்றை தவிர்த்து வந்தனர். அதற்கு பதிலாக துணிப்பைகள் வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் சில கடைகளில் ரகசியமாக பிளாஸ்டிக் கவர்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபனுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் இந்த கவர்களை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு அவர்கள் ஆலமரத்துகாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்கினோம் என்று கூறினார்கள். உடனே நகர்நல அதிகாரி பார்த்திபன், சுகாதார அதிகாரி ரவிச்சந்திரன், ஆய்வாளர் ஆகியோர் வீரபாண்டி நகரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஆலமரத்து காட்டில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கட்டுக்காட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். 200 கிலோ மதிப்புள்ள இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். #PlasticBan
    நாகை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த நாகூரில், புதுமனைத்தெரு, பீரோடும் தெரு, தர்கா அலங்கார வாசல் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் சென்றது.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி உத்தரவின்படி மேற்குறிப்பிட்ட பகுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சுகாதார மற்ற சூழலில் உணவு பொருட்களை விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நோட்டீசுகள் வழங்கப்பட்டன. 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் மேற்படி சட்டத்திற்கு உட்பட்டு ஓட்டல் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #PlasticBan

    தூத்துக்குடி பகுதிகளில் சுகாதார அலுவலர் தலைமையில் நடந்த சோதனையில் 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #PlasticBan

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாநகராட்சி கமி‌ஷனர் ஜெயசீலன் பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். கமி‌ஷனர் ஜெயசீலன் உத்தரவின்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் சுகாதார அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வடக்கு பகுதி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் தலைமையில் நடந்த சோதனையில் 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    தெற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ பிளாஸ்டிக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் தலைமையில் நடந்த சோதனையில் 140 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் மாநகர கிழக்கு பகுதி சுகாதார அலுவலர் ராஜசேகர் தலைமையில் பூபாலராயர்புரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 115 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மாநகர சுகாதார அலுவலர்களின் அதிரடி சோதனையால் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

    மாநகர தெற்கு பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர் இதற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாநகர நான்கு மண்டலங்களிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. #PlasticBan

    தமிழக அரசுடன் கைகோத்து சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. #Suriya #TNGovernment
    தமிழக அரசுடன் கைகோத்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா.

    ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது.



    இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அக்குறும்படம் அமைந்துள்ளது. 'மாறலாம், மாற்றலாம்' என்ற பெயரில் 2டி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை ஹரிஷ் இயக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    சென்னை சென்ட்ரல், திருச்சி உள்ளிட்ட 36 முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

    சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ரெயில் பயணிகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் அவற்றிற்கு பதிலாக மாற்று பொருட்களுளை உபயோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ‘ஐ.எஸ்.ஏ. 14001’ தர சான்றிதழ் பெறுவதற்காக 36 ரெயில் நிலையங்களில் 5 சதவீத நிலையங்களை கண்டறிந்து தூய்மைப் பணி, குடிநீர் வசதி, மின்சார சிக்கன நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க சுகாகாரத்துறை மூலம் கண்காணிக்கப்படுவார்கள். ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராவை பயன்படுத்தி கண் காணித்து இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக் கப்படுகிறது.

    முதலில் 36 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகை யில் இத் திட்டம் நிறை வேற்றப்படுகிறது. ரெயில் நிலையங்களில் திடக்கழிவு பொருட்களையும் பிளாஸ் டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து ஐ.எஸ்.ஒ. 14001 தர சான்றிதழை பெறுவதே ரெயில்வே துறையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல் படுத்த நோடல் ஆபீசர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ரெயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பிளாட்பாரங்கள், உடனுக்குடன் சுத்தம் செய் யப்பட வேண்டும், உறை கழிவுகள், திண்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக் கும் தடை விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரெயில் நிலையங்கள் தூய்மையாகிவிடும் என்ப தோடு மட்டுமின்றி சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும் என்பது உறுதி.

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய மொத்தம் 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
    ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. #Plasticban
    சென்னை:

    தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மறுசுழற்சி மற்றும் மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களும் வீட்டில் இருந்தே பைகளை கொண்டு செல்கிறார்கள். என்றாலும் ஒரு சில இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

    பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து 1 மாதம் கடந்த நிலையில் தற்போது மாநகராட்சி கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி ரூ.100 முதல் ரூ.3 லட்சம் வரையில் 4 விதமான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் முதல் தடவை பிடிபட்டால் ரூ.1 லட்சமும், 2-வது தடவை பிடிபட்டால் ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். 4-வது தடவையாக தொடர்ந்து உத்தரவை மீறினால் தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.

    டீலர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு முதல் தடவை ரூ.25,000, 2-வது தடவை ரூ.50,000, 3-வது தடவை ரூ.1 லட்சம் என அபராதம் விதிக்கப்படும். 4-வது தடவையாக மீறினால் வியாபார நிறுவனத்தை மூடுதல் அல்லது வாகன பறிமுதல் செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மால்களுக்கு முதல் தடவை ரூ.10 ஆயிரம், 2-வது தடவை ரூ.15 ஆயிரம், 3-வது தடவை ரூ.25 ஆயிரம் எனவும், நடுத்தரம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முதல் தடவை ரூ.1,000, 2-வது தடவை ரூ.2 ஆயிரம், 3-வது தடவை ரூ.5 ஆயிரம் எனவும் தொடர்ந்து மீறினால் நிறுவனத்தை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறிய கடைகளுக்கு முறையே ரூ.100, ரூ.200, ரூ.300 என அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Plasticban
     
    ×