search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் பகுதியில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல்
    X

    ஜெயங்கொண்டம் பகுதியில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல்

    ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×