என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » plastic recycling machine
நீங்கள் தேடியது "Plastic recycling machine"
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய மொத்தம் 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய மொத்தம் 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X