search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Murugan Temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    திண்டுக்கல்:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை (28-ந்தேதி) நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்படும். பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நாளை மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 29-ந்தேதி ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
    • 50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானைப்பாதை வழியாகவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டி, உபகரணங்கள், சாப்ட் எந்திரம் ஆகியவை கழற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்குழு ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதைதொடர்ந்து இன்றுமுதல் ரோப்கார் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை ரோப்கார் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் மீண்டும் இயக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதேபோல் மின்இழுவை 3-வது ரெயில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும்.
    • ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    நேற்று புரட்டாசி மாத கார்த்திகை என்பதால் மாலை சாயரட்சை பூஜைக்கு பின்பு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருகை தந்தனர். நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தும் வழிபாடு செய்தனர்.

    வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும். ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும். அதன்பின்பு பக்தர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு பின்பும் பக்தர்கள் அடிவாரத்தில் காத்திருந்தனர். அவர்கள் மலைக்கோவிலுக்கு வர முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் காவலர்களை தரக்குறைவாக பேசினர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. காவலர்கள் பக்தர் ஒருவரை அங்கிருந்து வெளியேற்றும்போது அவரது ஆடை கிழிந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி கோவிலுக்கு ராக்காலபூஜை நேரத்திற்கு பின்பு பக்தர்கள் உள்ளே வர முயற்சிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    நடைசாத்தப்படும் நேரம் என்பதை அடிவாரம் பகுதியிலேயே குறிப்பிட்டு அதன்பிறகு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம். பக்தர்கள், பாதுகாவலர்களிடையே இதுபோன்ற பிரச்சனை அடிக்கடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவில் அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மேல் சம்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • பழனி கோவிலுக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
    • சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தங்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். மேலும் அனுமதியின்றி கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இதனை தவிர்க்கும் வகையில் வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழனி கோவிலுக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும்.

    இதற்கு கட்டணமாக செல்போனுக்கு ரூ.5 வசூலிக்கப்படும். தரிசனம் முடிந்த பிறகு அதனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பழனி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் திடீரென முன்னறிவிப்பின்றி விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் செல்போனுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும்.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சா மிர்தம் உள்ளிட்ட பிரசா தங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் இருந்து கரும்பு சர்க்கரை எனப்படும் நாட்டு ச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்தில் பங்கே ற்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்க ரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடையி லான ஒரு மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையா க ரூ.2,720-க்கும், அதிகபட்ச மாக ரூ.2,750-க்கும் விற்ப னையானது. 2-ம் தரம் குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.2,600 -க்கும், அதிகபட்ச மாக ரூ.2,620-க்கு விற்பனை யானது.

    இந்த ஏலத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 620 கிலோ எடையிலான 927 நாட்டு ச்சர்க்கரை மூட்டைகள் விற்ப னையாகின.

    இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும் என விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் தெரிவி த்துள்ளார்.

    • வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. படிபாதையில் சூடம் ஏற்றி வழிபட கோவில் நிர்வாகம் சார்பில் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காரோடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • முருகனின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் ஆடிக்கிருத்திகை என அழைக்கப்படுகிறது. தட்சிணியான காலத்தில் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் கிளம்பி அதில் இருந்து ஆறுமுகம் தோன்றி அதனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாக ஐதீகம் உள்ளது.

    அந்த 6 கார்த்திகை பெண்கள் வானில் நிரந்தர நட்சத்திரமாக மாறினர். இதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. இந்த பண்டிகையை குறிக்கும் வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    முருகனின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், மலர் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகரிப்பின் காரணமாக சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு காத்திருந்தனர். மலைக்கோவில், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி பாலசுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள பாதாள செம்பு முருகன் கோவில், அபிராமிஅம்மன் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணியர் சன்னதி, ஆர்.வி.நகர் கந்தக்கோட்டம் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    • கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருகின்றனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அகரித்துள்ளது. இதனால் கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலை க்கோவிலுக்கு சென்றனர். மேலும் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர். பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த அம்மன் கலைக்குழு சார்பில் கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 100-க்கும் மேற்பட்டோர் முருகப்பெருமானின் புகழ் பாடல்களுக்கு மேள இசைக்கு ஏற்ப கும்மி, ஒயிலாட்டம் ஆடினர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் தங்களின் செல்போனில் புகைப்படமும் எடுத்தனர்.

    • இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
    • கோவிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது.

    இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நுழைவு விதி சட்டம், இந்து அல்லாத எந்த சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என சட்டத்தில் உள்ளது என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த சட்டம் சொல்வதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

    • பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
    • உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது.

    பழனி :

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். இதற்காக நிர்வாகம் சார்பில் கோவில் பகுதியில் பல உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் காணிக்கை பணி தொடங்கியது. இதில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது.

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 878 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 1025 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ (13573) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    • பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது.
    • கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போனை மலைக்கோவிலில் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடிவாரத்திலேயே செல்போன் வைப்பறை தொடங்கப்பட்டு அதில் பக்தர்கள் தங்கள் செல்போனை கொடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே இது செயல்பாட்டில் இருந்தது. அதன் பிறகு பக்தர்கள் வழக்கம் போல் செல்போனுடன் மலைக்கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

    கோவிலில் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகளையும் வீடியோவாக எடுத்து தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர்.

    அதனுடன் தங்கள் குடும்பத்தினரையும் இணைத்து வீடியோ வெளியாவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால் இங்குள்ள முருகனை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனால் கடவுள் வழிபாட்டில் அதன் புனிதத்தை உணராமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் இதனை பார்க்கும் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்வதை தடுக்க கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தபோதும் அதனை பலர் கடைபிடிப்பதில்லை. இனிமேலாவது கோவில் நிர்வாகம் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத், மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இச்சிலையை காண பல்லாயிரம் கி.மீ. நடை பயணமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கும்பாபிஷேகத்துக்கு முன்பு வரை பழனி மலைக்கோவில் பகுதியில் மூலவர் சிலையை படம் பிடித்தால் செல்போன்கள் பறிக்கப்படும் என பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அதை காண முடியவில்லை.

    மேலும் கால பூஜை வரும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஒரு சிலர் ஆர்வத்தால் மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இனிவரும் நாட்களில் இதுபோன்று மூலவர் படம் பிடித்தால் அவர்கள் செல்போன் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×