search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.24.58 lakhs for"

    • விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும்.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சா மிர்தம் உள்ளிட்ட பிரசா தங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் இருந்து கரும்பு சர்க்கரை எனப்படும் நாட்டு ச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்தில் பங்கே ற்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,392 மூட்டைகள் நாட்டுச்சர்க்க ரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடையி லான ஒரு மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையா க ரூ.2,720-க்கும், அதிகபட்ச மாக ரூ.2,750-க்கும் விற்ப னையானது. 2-ம் தரம் குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.2,600 -க்கும், அதிகபட்ச மாக ரூ.2,620-க்கு விற்பனை யானது.

    இந்த ஏலத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 620 கிலோ எடையிலான 927 நாட்டு ச்சர்க்கரை மூட்டைகள் விற்ப னையாகின.

    இதன் விற்பனை மதிப்பு ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780 ஆகும் என விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் தெரிவி த்துள்ளார்.

    ×