search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rope car"

    • தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது.
    • பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    அவர்கள் எளிதில் மலைக்கு சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    மேலும் ரோப்கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர். காந்தி தலைமையிலான நன்கொடையாளர்கள் மூலம் ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

    இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமைவிடத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவில் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

    லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    சென்னையிலிருந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 105 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணம் வந்தால் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மரை எளிதில் தரிசனம் செய்யலாம்.

    இதனால் அதிகமான பக்தர்கள் சென்னையில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 273 அடி உயரமுள்ள மலைக்கோவிலுக்கு செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன.
    • ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    திருச்சி:

    தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டமான திருச்சி பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. பல நூற்றாண்டுகளை கடந்து பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுகிறார்கள். இந்த பாறைக்கு மலைக்கோட்டை என்ற பெயரும் உண்டு.

    மேலும் மலைக்கு செல்லும்போது தாயுமானவர் சன்னதியை கடந்துதான் பிள்ளையார் சன்னதிக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 400-க்கும் மேற்பட்ட படிகளை ஏறிச்செல்ல வேண்டும். மேலும் மிகவும் பழமையான கோவில் என்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    273 அடி உயரமுள்ள மலைக்கோவிலுக்கு செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப்படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்கு மிகவும் சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். இதனால் நடக்க முடியாதவர்கள் படிக்கட்டில் ஏற முடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச்சென்று விடுகின்றனர். 

    இதனால் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ரூ.10 லட்சத்தை இந்த திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை.

    பிறகு வந்த ஆட்சியாளர்கள், ரோப் காருக்கு பதிலாக இழுவை ரெயில் அமைக்கலாம் என்று யோசித்தனர். ஆகையால் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் தேர்தல் நேரத்தில் மலைக்கோட்டைக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க.வினர் மீண்டும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

    தற்போது ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மலைக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவினர் ஆய்வு செய்து, திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்க போதுமான இடமில்லாததால், சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. அதற்கு மாற்றாக, லிப்ட் அமைக்கலாமா? என்பது குறித்து மாற்றுத்திட்டத்தை பரிசீலித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார். இதனால் 46 ஆண்டுகால திருச்சி மக்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ? என்று தவித்து வந்தனர்.

    இந்தநிலையில் நாடு முழுவதும் மலைப்பிரதேசங்கள், மலைக்கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு, ரோப் கார் வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் 22 இடங்களில், 'ரோப் கார்' வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

    குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோப்கார் வசதி செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கி உள்ளது. சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் 2 மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீட்டு தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன், உலகத்தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், விரைவில் திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ரோப் கார் திட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலும் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    • ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
    • 50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானைப்பாதை வழியாகவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டி, உபகரணங்கள், சாப்ட் எந்திரம் ஆகியவை கழற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்குழு ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதைதொடர்ந்து இன்றுமுதல் ரோப்கார் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை ரோப்கார் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் மீண்டும் இயக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதேபோல் மின்இழுவை 3-வது ரெயில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
    • வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    கோவை:

    கோவை கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    அவர் கோவிலுக்கு மலைஏறி சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

    மேலும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பக்தர்கள் வசதிக்காகவும், முதியோர்கள் மற்றும் உடல் உபாதை உள்ள பக்தர்களின் வசதிக்காகவும் ரோப்கார் மற்றும் தானியங்கி லிப்ட் அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டோம். 560 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுக்கான அறிக்கைகள் வந்த பின்னர் ரோப்கார் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.

    இதேபோன்று திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கும் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர உள்ளோம்.

    கரூர் அய்யர்மலை, சோழிங்கநல்லூர் கோவில்களில் ரோப் கார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    கோவை மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் மலைக்கோவில்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.5135 கோடி மதிப்பிலான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கு இறைபற்று ள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது.

    விலங்குகள் அதிகம் நடமாடும் கோவில் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காடுகளில் இருந்து வெளியே வராதபடி முள்வேலிகள் அமைக்க ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் பேரூரில் நடந்த நொய்யல் திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் தண்டுமாரியம்மன், லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • செப்டம்பர் மாதம் தொடங்க நடவடிக்கை
    • ரூ.50 கட்ட ணமாக வசூலிக்கப்படும்

    சோளிங்கர்,:

    சோளிங்கர் மலை மீது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

    இது ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கிய ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது.

    இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம்,பெங்களூர், மைசூர்,சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர்.

    சராசரியாக வார இறுதி நாட்களில் 3000 பக்தர்கள் வருகின்றனர்.

    குறிப்பாக கார்த்திகை தீப பூஜை காலங்களில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    மலையின் அடித்தளத்தில் இருந்து கோவிலுக்கு சென்றடைய 1,306 படிக்கட்டுகள் ஏறி சென்றடைய வேண்டும்.

    இந்தக் கோவில் ஒழுங்கற்ற பாறைகளை கொண்ட மலை மீது அமைந்துள்ளதால் பக்தர்கள் நடந்து செல்வ தற்கு சிரமப்படுகின்றனர்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், சிறுவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது கடினமாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் பல ஆண்டுகளாக ரோப் கார் சேவை அமைக்க வேண்டும் என் இந்து சமய அறநிலைத்துறையிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்த சேவை குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்கூறியதாவது:

    ரோப் கார் சேவை அமைக்க 2010 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான பணிகள் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தற்போது ரோப் கார் வசதி 750 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    மலையின் அடித்தள உயரத்திலிருந்து கோவிலுக்கு சென்றடைய 430 மீ தூரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த சேவை 8 ரோப்-கார்கள் கொண்டதாக இருக்கும். 4 ரோப்-கார்கள் மேலே செல்வதற்கும் 4 ரோப் கார்கள் கீழே வருவதற்குமாக அமைக்கப்படுகிறது.

    மேலும் 250 வாட் மின் திறனுடன் இயக்கப்படுகின்ற இந்த சேவையில் அவசரகால வசதிகளும் உள்ளன.

    மொத்தம் 8 இருக்கைகளைக் கொண்டு இந்த ரோப்-கார் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.50 கட்ட ணமாக வசூலிக்கப்படும். மேலும் இந்த ரோப்-கார் வசதி வரும் செப்டம்பரில் நடைமுறைக்கு என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.

    பழனி:

    பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
    • நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பகவான்பூரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் 55 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்கிறார்.

    வாரணாசியில் இன்று மத்திய சுகாதாரதுறை சார்பில் உலக காசா நோய் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    அப்போது காசா நோயை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருது வழங்குகிறார். தேசிய காசா நோய் ஒழிப்பு நடவடிக்கை குறித்தும், இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதில் 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் வாரணாசியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாரணாசி காண்ட் நிலையத்தில் இருந்து கோடோவ்லியா வரையிலான 3.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் காரில் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம்.

    இதற்காக வாரணாசி கோடோவ்லியா இடையே 5 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ரூ.645 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதுதவிர கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிகாரா ஸ்டேடியத்தில் 2-வது மற்றும் 3-வது ஸ்டேடியம் கட்டுமான பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பகவான்பூரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் 55 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமர்மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    வாரணாசியில் ரூ.1780 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி அங்குள்ள சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

    • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார்.
    • மின்சாரம் தடைபட்டதால் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார்.

    அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

    இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • சீன எல்லை அருகே உள்ள அந்த கிராமத்துக்கு பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கோடை காலத்தில் மட்டுமே இந்த தலங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். குளிர்காலத்தில் இந்த ஆலயங்கள் மூடப்பட்டே இருக்கும்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு தரிசனத்துக்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார்.

    டேராடூன் விமான நிலையத்தில் அவரை உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங், முதல்-மந்திரி புஸ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    காலை 8.30 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் கேதார்நாத் ஆலயத்துக்கு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேதார்நாத் சிவாலயம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    அங்கு அவர் சிறப்பு பூஜைகள் செய்தார். கேதார்நாத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்ததாக கூறப்படும் இடத்திலும் அவர் வழிபாடுகள் செய்தார். சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானமும் செய்தார்.

    இதையடுத்து கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே 7.9 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் ரோப்கார் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கேதார்நாத்தில் சுமார் 3 மணி நேரம் அவர் இருந்தார். அதன் பிறகு அவர் பத்ரிநாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு நடைபெறும் ஆலயத் திருப்பணிகள் பற்றி ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையில் அமைந்துள்ள மனா கிராமத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மனா கிராமத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச உள்ளார். சீன எல்லை அருகே உள்ள அந்த கிராமத்துக்கு பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் சபரிமலைக்கு ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ரோப் கார் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ரோப் கார் அமைக்கப்பட்டால் கோவிலுக்கு தேவையான பொருட்கள் ரோப்கார் மூலம் வேகமாக கோவிலுக்கு கொண்டு சென்று விடலாம் எனவும் கூறப்பட்டது.

    இதையடுத்து பம்பை-சன்னிதானம் இடையே ரோப் கார் அமைக்க ஏதுவான பாதை ஆய்வு செய்யப்பட்டது.

    ரோப் கார் செல்லும் பாதை கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலயம் பகுதி வழியாக அமைக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கான ஆய்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

    கேரள வனத்துறை அனுமதி வழங்கி விட்ட நிலையில் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகள் இதுவரை ரோப் கார் அமைப்பதற்கான அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே ரோப் கார் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய கொல்கத்தா குழுவினர் கடந்த 11-ந்தேதி கேரளா வந்தனர்.

    சில நாட்கள் தங்கியிருந்த அவர்கள் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கொல்கத்தா திரும்பினர்.

    சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக 14-ந்தேதி மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் விசே‌ஷ பூஜைகள் நடந்தன. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டமும் அலைமோதியது.

    கோவிலுக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்று தகவல் வெளியானதால் மலை பாதையில் இந்து அமைப்பினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அடைக்கப்படுகிறது. இன்று சகஸ்கரகலசாபிஷேகம், அத்தாள பூஜை நடக்கிறது.

    நாளை இரவு 10.30 மணிக்கு ஐயப்பனுக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.


    ×