search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navaratri Festival"

    • அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனை செய்தார்.
    • விழாவில் சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னை:

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில் மணி தலைமையில் நடைபெற்ற நவராத்திரி இசை விழாவை சீர்காழி டாக்டர். சிவசிதம்பரம் பாடி தொடங்கி வைத்தார்.

    அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனை செய்தார். குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் அன்னை பாலா ஆன்மீக குடும்பங்கள் "குடும்ப விருத்தி பூஜை" நடைபெற்றது. விழாவில் சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரி கொலு திறக்கப்பட்டது.

    சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயராஜ், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ரமணா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகள் "பால மோகி" சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா முடிவில் செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
    • இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.

    சென்னை:

    நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலுக்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கொலுக்களில் ஆடல், பாடல் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவும், இறை நம்பிக்கையுடன் நல்ல பண்புகள் வளரவும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
    • வெளிநாட்டு பிரஜைகளும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம்.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கவர்னர் மாளிகையில், 'நவராத்திரி கொலு-2023' அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. கவர்னர் ஆர்.என். ரவி சென்னை கவர்னர் மாளிகையில் வருகிற 15 -ந்தேதி நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கவர்னர் மாளிகையில் அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்படஅனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.

    நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல், விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.

    பார்வையாளர்கள், சென்னை கவர்னர் மாளிகையின் வாயில் எண். 2-ல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும்போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

    வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவில் அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மேல் சம்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×