search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oviya"

    ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
    விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:

    திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?

    ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.

    காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?

    ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிர‌ஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.

    ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.



    காடன் எந்த மாதிரியான படம்?

    பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.

    ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?

    அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில வி‌ஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.

    ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?

    ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வரு‌ஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஓவியா, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. #Oviya #OviyaArmy
    களவாணி மூலம் அறிமுகமான ஓவியா தொடர்ந்து கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் புகழின் உச்சத்துக்கே போனார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் எந்த படமும் ரிலீசாகவில்லை.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஓவியா நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரெஜினா கதாநாயகி என்றாலும் கதையை நகர்த்தும் ஒரு கவுரவ வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். ஓவியாவுக்கு விஷ்ணு விஷாலுடன் ஒரு பாடலும் இருக்கிறது. ஓவியா அடுத்து தனது நண்பரான ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.



    ஓவியாவின் ரசிகர்களோ ஓவியா இதுபோல கவுரவ வேடங்களாகவே நடிக்காமல் கதாநாயகியாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே ஓவியா கதாநாயகியாக நடிக்கும் 90 எம்.எல். படத்துக்காக சிம்பு இசையமைக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
    ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தை கோடை மாதத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Kanchana3
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியான படம் `முனி'. அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் காட்சி படுத்தாமல் இருக்கிறார்கள்.



    கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் என்பதால், ஏப்ரல் மாதம் 18ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
    பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #Arav #Oviya
    பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது சர்ச்சையானது. 

    இதுபற்றி கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன். 

    ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர். 



    ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
    பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, தற்போது ஆண்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். #Oviya #BiggBoss
     நடிகை ஓவியா சினிமாவில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

    தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. 

    அதைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீசாக உள்ளது. அவ்வப்போது டுவிட்டரில் பல வி‌ஷயங்களைப் பகிரும் ஓவியா, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.

    பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.

    அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.



    நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்” என்பதை பகிர்ந்துள்ளார்.
    களவாணி படத்தில் அறிமுகமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். #Oviya
    ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.

    சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார். அப்போது பேசிய ஓவியா, “தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் இலக்கண பிழை இருக்கிறது.

    நான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.



    வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே” என்றார்.
    ஆரவ் நடிகை ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வரும் போட்டோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Arav #Oviya
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே, தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. அத்துடன் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சில தகவல்கள் பரவியது. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த புகைப்படம் குறித்து ஆரவ்விடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,



    `சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் பழையது என்றும், நண்பர்களுடன் இணைந்து விடுமுறைக்காக பாங்காக் சென்ற போது எடுக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை' இவ்வாறு ஆரவ் தெரிவித்தார்.

    ஆரவ் தற்போது சிலம்பாட்டம் பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். களவாணி 2 படத்தை முடித்த ஓவியா 90 எம்.எல். படத்தில் நடித்து வருகிறார். #Arav #Oviya

    ஆரவ் நடிகை ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வரும் போட்டோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Aarav #Oviya
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும் இணையதளத்தை கலக்குகின்றன. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.



    இதையடுத்து அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர். “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று அன்புடன் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Oviya #Arav
    ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.

    இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.

    அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.



    இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

    இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.
    ‘களவாணி 2’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக விமலும் ஓவியாவும் பழமையான வீட்டை சுற்றி சுற்றி வருகிறார்கள். #Vimal #Oviya #Kalavani2
    விமல் - ஓவியா கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘களவாணி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

    சமீபத்தில் இந்த ஜோடி நடித்த 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். 



    ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா, களவாணி 2 படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். #Oviya
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை தேடி வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது மூன்று படங்கள் தான். களவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3. இவற்றில் 90 எம்.எல். என்பது ஓவியா கதை நாயகியாக நடிக்கும் படம். இந்த படம் முடிந்துவிட்டது.

    காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் படம். இந்த படத்துக்கு ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அடுத்து ஓவியா மிகவும் எதிர்பார்க்கும் படம் களவாணி -2. சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற களவாணி படத்தின் தொடர்ச்சி இது. 



    இந்த படத்தில் ஓவியாவுக்கு கனமான வேடம். இதற்காக நேற்று முதல் தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார் ஓவியா. முந்தைய களவாணி எடுத்த இடங்களில் தான் படப்பிடிப்பு என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஓவியாவை தேடிவந்து பார்த்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஓவியாவும் நெகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசுகிறார்.
    ×