search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OTT"

    • சந்தாவின் கீழ் இலவசமாகவே பயன்படுத்த முடியும்.
    • பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

    ஒ.டி.டி. சந்தாவுடன் கூடிய பிரீபெயிட் சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், சோனி லிவ் உடன் வி நிறுவனம் இணைந்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    வி நிறுவனம் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் பயனர்கள் சோனிலிவ் மொபைல் சந்தாவின் கீழ் இவற்றை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இதே சேவைகளை ஒரு வருடத்திற்கு பெற விரும்புவோர் ரூ. 599 மற்றும் பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அந்த வகையில் இந்த பலன்களுக்கு தனியே செலவழிக்க விரும்பாதவர்கள் வி நிறுவனத்தின் ரூ. 698 சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வி ரூ. 698 சலுகையில் 10 ஜி.பி. வரையிலான டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பயன்படுத்துவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் பிரீபெயிட் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான சோனிலிவ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் ஒ.டி.டி. சந்தா மட்டுமின்றி 28 நாட்களுக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகளை அதிக தரத்தில் கண்டுகளிக்க முடியும்.

    • அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
    • இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

     


    புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    • ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
    • வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.

    வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
    • மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.

    ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     


    இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் அன்லிமிடெட் காலிங், 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ தொடர்ச்சியாக வருடாந்திர ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து வருகிறது. இவற்றுடன் ஒ.டி.டி. சந்தாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் புதிய ரூ. 3,227 பிரீபெயிட் சலுகையில் அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் காலிங் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை மை ஜியோ செயலி அல்லது ஜியோ வலைதளத்தில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

     

    சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையின் முன்னணி இணைய சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. சந்தையில் ஜியோ நிறுவனம் மட்டும் 52 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    ஜியோ சேவையை 442 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களும், 9.4 மில்லியன் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    • ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.
    • ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை 1Gbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி வருகிறது. இணைய வேகம் மட்டுமின்றி ஜியோஃபைபர் பலன்களும் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜியோஃபைபர் ரூ. 1199 விலை கொண்ட சலுகையில் தற்போது ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    புதிய மாற்றத்தின் படி ஜியோஃபைபர் ரூ. 1199 சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ், ஜியோசினிமா பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் மற்றும் 14 இதர ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சந்தா வழங்கப்படவில்லை.

     

    ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் விலை ரூ. 1499, ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் முறையே 300Mbps, 500Mbps மற்றும் 1000Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஜியோ நிறுவனம் தனது ஏர்ஃபைபர் இணைய சேவைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 599 ஆகும்.

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
    • இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில், இனி பயனர்களின் கணக்கை அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் தங்கள் கணக்கை பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் புரொபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

    அதன் பின்னர் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பாஸ்வேர்டு பகிர முடியாத தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதமே கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான தங்கள் கருத்துக்களை நெட்பிளிக்ஸ் பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
    • ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

    பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.

     

    ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ரூ. 999 சலுகை பலன்கள்:

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.

    இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    • பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்து இருக்கும்.
    • முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அமேசான் பிரைம் லைட் சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. இது அமேசான் பிரைம் சேவையின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரைம் லைட் சந்தா ஒற்றை வருடாந்திர திட்டம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் 12 மாதங்களுக்கு ரூ. 999 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சலுகையில் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா விலை ஆண்டுக்கு ரூ. 1499 ஆகும். இதே சலுகை மாதம் ரூ. 299 விலையிலும், காலாண்டு சந்தா விலை ரூ. 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பலன்களை பொருத்தவரை அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன. பிரைம் லட்டா சந்தாவில் பயனர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி பெறும் வசதி பெற முடியும். வழக்கமான இலவச டெலிவரிக்கு எந்த விதமான குறஐந்தபட்ச தொகையும் இல்லை என அமேசான் உறுதியளித்துளளது.

    வழக்கமான பிரைம் சந்தாவின் கீழ் அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. பிரைம் சந்தா வைத்திருப்போரும், இதே பலன்களை பெற முடியும். எனினும், பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்திருக்கும். பயனர்கள் அதிகபட்சம் இரண்டு சாதனங்ககளில் HD தரத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.

    பிரைம் சந்தா வைத்திருப்போர் அிகபட்சம் 4K ஸ்டிரீமிங், அதிகபட்சம் ஆறு சாதனங்களில் ஒரே சமயம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விளம்பரங்களை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், எப்படி இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் சேவைகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படாது. இதில் அமேசான் பிரைம் மியூசிக் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, கேமிங் மற்றும் இலவச இ-புத்தகங்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

    • அமேசான் பிரைம் ஒடிடி சேவையின் புது சந்தா உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய அமேசான் பிரைம் லைட் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரைம் சந்தாவை ஓரளவு குறைந்த விலையிலேயே வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் சந்தாவில் ஸ்டிரீமிங் மட்டுமின்றி ஒரே நாளில் டெலிவரி மற்றும் இலவச அதே நாளில் டெலிவரி போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் பிரைம் லைட் பெயரில் மற்றொரு சந்தா முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டிற்கு ரூ. 999 எனும் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் சந்தா இதே விலையில் வழங்கப்பட்டு வந்தது. எனினும், விலை உயர்வு காரணமாக இது ரூ. 1,499 ஆக மாறி இருக்கிறது. தற்போது புது சந்தா முறை அதன் பீட்டா வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதில் இரண்டு நாட்களில் இலவச டெலிவரி மற்றும் ஒரே நாளில் டெலிவரி போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு நாட்களுக்குள் டெலிவரி வேண்டும் எனில், பயனர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த நேரிடும் என்றே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு இலவச டெலிவரி மட்டுமின்றி அமேசான் பிரைம் லைட் சந்தாவின் கீழ் பிரைம் வீடியோ தரவுகள் அனைத்தையும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

    எனினும், குறைந்த விலை கொண்ட சேவையில் பயனர்கள் தரவுகளை HD தரத்தில் மட்டுமே ஸ்டிரீம் செய்ய முடியும். இது தவிர ஸ்டிரீம்களின் இடையில் வரும் விளம்பரங்களையும் பார்க்க நேரிடும். அந்த வகையில் புது அமேசான் பிரைம் லைட் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா என எடுத்துக் கொள்ளலாம். அமேசான் பிரைம் லைட் சந்தா ஒரே சமயத்தில் இரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஒன்று நிச்சயம் மொபைல் போனாகவே இருக்க வேண்டும்.

    புதிய அமேசான் பிரைம் லைட் அறிமுகமானால், அமேசான் பிரைம் சந்தா முறையின் விலை ஆண்டிற்கு ரூ. 1499 என்றும், காலாண்டிற்கு ரூ. 459, மாதத்திற்கு ரூ. 179 மற்றும் அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டுக்கு ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    • நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஒடிடி தளமாக விளங்குகிறது.
    • கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. பாஸ்வேர்டு ஷேரிங் வியாபாரத்தை நிறுத்தும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதற்கு முடிவுகட்டும் இலக்கை நெட்ஃப்ளிக்ஸ் அடைய இருக்கிறது.

    அடுத்த ஆண்டு துவக்கம் முதலே நெட்ஃப்ளிக்ஸ் அதன் பயனர்கள் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க போவதில்லை. இது குறித்த தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்களது குடும்பத்தார் தவிர வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் வேற்று நபர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படாது. பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாக கண்டறிந்து வருகிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் சந்தா முறை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஸ்வேர்டு ஷேரிங் பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும், சந்தாதாரர்கள் குறைய துவங்கும் வரை இந்த பிரச்சினை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த ஆண்டு வருவாய் சரிய துவங்கியதில் இருந்து பாஸ்வேர்டு ஷேரிங்கிற்கு முடிவு கட்ட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரமாக செயல்பட துவங்கி இருக்கிறது.

    சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாஸ்வேர்டு ஷேரிங்கை நிறுத்தவும் நெட்ஃப்ளிக்ஸ் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் பகுதியாகவே நெட்ஃப்ளிக்ஸ்-இல் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மாதம் 6.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் நெட்ஃப்ளிக்ஸ் - மொபைல் ஒன்லி, பேசிக் பிலான், ஸ்டாண்டர்டு பிலான் மற்றும் பிரீமியம் பிலான் என நான்கு சந்தாக்களை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 149, ரூ. 199, ரூ. 499 மற்றும் ரூ. 649 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
    • இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

    இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.

    சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

    ×