என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "user"
- நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
- இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில், இனி பயனர்களின் கணக்கை அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் தங்கள் கணக்கை பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் புரொபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
அதன் பின்னர் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பாஸ்வேர்டு பகிர முடியாத தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதமே கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான தங்கள் கருத்துக்களை நெட்பிளிக்ஸ் பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- இலங்கை தமிழர் வீடுகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தித்தரும் 1990-ம் ஆண்டு அவசரத்தேவைகளை கருத்தில் கொண்டு தலா 100 சதுரஅடி பரப்பளவில 240 வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 183 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேர் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் முகாம் வாழ் தமிழர்களின் அடிப்படை மேம்பாட்டிற்காக குடும்பத்தலைவருக்கு ரூ.1,500-ம், 18 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு ரூ.1,000மும் மற்றும் குடிமைப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
முகாம் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது பொது சுகாதார வளாகம், தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பழைய வீடுகள் பயன்படுத்த ஏதுவாக இல்லாத வீடுகள் கண்டறியப்பட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணி துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான தனி வட்டாட்சியர்உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சனிதேவி, சங்கரபரமேஸ்வரி, உதவிப்பொறியாளர்கள் தமிழரசி, தேவிசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
