search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ordered"

    11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மொழிப்பாடங்களுக்கு இனி 2 தனித்தனி தேர்வுகள் நடத்தப்படாது என்றும் ஒரே தேர்வாக நடத்தப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #TamilNaduGovt
    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு மாநில கல்வி முறை மேம்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

    அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம், 2-ம் இடம் போன்ற பாகுபாடுகள் இருக்க கூடாது உத்தரவிட்டார். மேலும், மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் நடத்தப்படும் 2 தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணியைத் தொடங்கியது. மாணவர்களின் சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.



    அதன்படி இன்று இதுதொடபான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மொழிப்பாடங்களில் ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும், இந்த தேர்வு முறை இந்த கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்காக மட்டும் 4 தேர்வுகள் (தமிழ்-2, ஆங்கிலம்-2) எழுதி வந்த நிலையில், இனி 2 தேர்வுகள் மட்டுமே எழுதவேண்டும்.

    அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே சமயம் மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் இலக்கணம் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். #TamilNaduGovt
    கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kaala #Kumarasami
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. நடிகை ஜெயமாலா உள்பட 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

    ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் இன்று (அதாவது நேற்று) இரவோ அல்லது இன்று(வியாழக்கிழமை) காலையிலோ ஒதுக்கப்படும். அதன் பிறகு புதிய மந்திரிகள் தங்களின் பணிகளை தொடங்குவார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #Kaala #Kumarasami 
    புத்தகத்தில் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு உளவுத்துறை முன்னாள் தலைவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற ராணுவம் தடை விதித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் உளவுத் துறையான ‘ஐ.எஸ்.ஐ’ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினெட் ஜெனரல் ஆசாத் துரானி. இவர் 1990 முதல் 1992-ம் ஆண்டுவரை இப்பதவி வகித்தார்

    கடந்த வாரம் ‘தி ஸ்பை கிரானிகல்ஸ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசாத் துரானி இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வின் முன்னாள் தலைவருடன் இணைந்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் இணை ஆசிரியராக இருக்கிறார். அப்புத்தகத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் ஏற்படும் பிரச்சினைகளில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் மறைந்து இருந்த இடம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியும். பின்னர் அவர்கள் அமெரிக்காவிடம் அவரை ஒப்படைத்தனர் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இது சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், உளவுத் துறையின் கண்ணியத்தை பாழபடுத்துவதாகவும் ராணுவ தலைமையகத்தில் இருந்து துரானிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரது நடத்தை விதிமுறையில் இருந்து தவறியதாக குற்றம் சாட்டி அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்துள்ளது. #tamilnews

    ×