search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening"

    • அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு
    • அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு வேளாண் ஆய்வகத்தினை திறந்து வைத்து பேசினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு வேளாண் ஆய்வகத்தினை திறந்து வைத்து பேசினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கு.தமிழரசு, வேளாண் பொறியியல் துறைத் தலைவர் ம.அப்பூதி அடிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை கிளை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில்

    அரியலூர்

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுரேஸ் கிருஷ்டோபர், உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ரமேஷ், டாக்டர் ஜெயந்தி, கால்நடை உதவி மருத்துவர் ராஜ்குமார், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி மகேந்திரன், துணை தலைவர் ராஜகுமாரி கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நினைவு கூட்டரங்கம் திறக்கப்பட்டது
    • ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்திறந்துவைத்தார்

    ஜெயங்கொண்டம் 

    ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கூட்டம் அரங்கமும் புணர மைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கூட்டம் அரங்கத்தையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ.க. சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.

    ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம் ஆகியவற்றை, ஒன்றிய குழு தலைவர் கே.பி.என்.ரவிசங்கர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி), ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், ஜெயங்கொ ண்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் தன .சேகர், .மணிமாறன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    • சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.
    • மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், ரூ. 23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பக வல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

    • அறந்தாங்கி விக்னேஷ்புரம் அரசு தொழிநுட்ப கல்லூரியில் ரூ.12 லட்சம் செலவில் ஸ்மாட் கிளாஸ் திறக்கப்பட்டது
    • முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டது

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மின்னணுவியல், தொடர்பியல், அமைப்பியல், மெக்கானிக்கல், கம்யூட்டர் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகள் உள்ளன. இந்நிலையில் கல்லூரியில் 1997-2020 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் சார்பில் கல்லூரியில் வகுப்பறைகளை திறன்மிகு வகுப்பறைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஒரு வகுப்பறைக்கு குளிரூட்டி, ஆர்ஒ வாட்டர், இன்வெர்டர் என சுமார் ரூ.3 லட்சம் வீதம் 4 வகுப்பறைகளுக்கு ரூ.12 லட்சம் நிதி திரட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் குமார், தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோர் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதே போன்று மற்ற வகுப்பறைகளும் ஸமார்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.முன்னதாக முன்னாள் மாணவ மாணவியர்கள் தங்களது கல்லூரி காலஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

    • தொழில் அதிபா் பால்வண்ணன் திறந்துவைத்தாா்
    • நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    கூடலூா் பழைய நீதிமன்ற சாலையில் நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்க அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தொழில் அதிபா் பால்வண்ணன் திறந்துவைத்தாா். நிா்வாகி பாக்கியநாதன் குத்துவிளக்கேற்றி அரங்கை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவா் மணிவண்ணன் தலைமை தாங்கினார். புளியம்பாறை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், மணிவாசகம், சக்திவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

    துணைத் தலைவா் ஆனந்தராஜ், சட்ட ஆலோசகா் கிருஷ்ணகுமாா், ராயல் மருத்துவமனை தலைவா் விவேக், நிா்வாக இயக்குநா் பிரகாஷ், ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். துணைச் செயலாளா் கலைச்செல்வன் வரவேற்றாா். இணைச் செயலாளா் கணேசன் நன்றி கூறினாா்.

    • உசிலம்பட்டி அருகே வழிகாட்டி பலகை திறப்பு விழா நடந்தது.
    • பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க விழாவினை முன்னிட்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பள்ளி வழிகாட்டு பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவி சித்ரா துணைத் தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் செல்லம், கட்சி நிர்வாகிகள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அழகுமாரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை குருநாதன் செய்திருந்தார்.

    • மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை தகர்க்கும் பயிற்சி களம் பெரம்பலூரில் தொடங்கப்பட்டது
    • பயிற்சி களத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை (அப்ஸ்டகல்ஸ்) தகர்க்கும் பயிற்சி களம்  தொடங்கப்பட்டது. இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்து, பயிற்சியாளர்களுக்கான பயிற்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் வருகிற வடகிழக்கு பருவமழைைய முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ள சிறப்பு தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஊர்திகளை ஆய்வு செய்தார். தீயணைப்பு வீரர்களின் பிரமீடுகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிறந்த பயிற்சியாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    மேலும் அதிகாரி ஆபாஷ்குமார், நிருபர்களிடம் கூறுகையில், இந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான பயிற்சி களத்தை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வரும் நிதி ஆண்டில் தீயணைப்பு துறைக்கு அதிக நீதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் அதிகளவு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கான வாகனங்கள் வாங்கப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், புதிய தீயணைப்பு வீரர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர்கள் கோமதி, வீரபாகு மற்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள், அனைத்து நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
    • துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.23 தாகூர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் ஓய்வு அறை, வார்டு எண்.24 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் வீதி, ராஜாஜி நடுநிலைப் பள்ளியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இவற்றை வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மண்டலம் 2 வார்டு எண்.27 செல்லூர் அகிம்சாபுரம் சிவகாமி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம், வார்டு எண்.35 அண்ணாநகர் நியூ எல்.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர்சி வசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கந்தர்வகோட்டை பேருந்து நிலைய தரைதளம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது
    • சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தின் தரைத்தளம் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் காட்சி அளித்தது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பயணிகளுக்கும் பேருந்து ஓட்டுநர்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து ரூ.35 லட்சம் செலவில் பேருந்து நிலையத்தின் தரைத்தளம் சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பேருந்துகள் இயங்குவதற்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர்,துணைத் தலைவர் செந்தாமரை குமார்,திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், அரசு ஒப்பந்தக்கார ராஜ்குமார்,மதிமுக ஒன்றிய செயலாளர் வைர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புது வேட்டக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கர் விழாவில் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார்

    குன்னம்

    குன்னம் வட்டம் புது வேட்டக்குடி கிராமத்தில் புதிய நியாய விலை கடையை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

    புது வேட்டக்குடி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதிய நியாய விலை கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்திருந்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில்

    முழு நேர புதிய நியாய விலைக் கடையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்

    நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் லலிதா கூட்டுறவு சார்பதிவாளர் விஸ்வநாதன் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா செல்வகுமார் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகம் நாளை திறக்கப்படுகிறது.
    • சமுத்திரம், தாமரை செல்வி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை கீழ சித்திரை வீதியில் ஸ்ரீமீனாட்சி சுந்த–ரேஸ்வரர் ஜெய்சாய் புதிய சைவ உணவகம் பிரமாண் டமாக அமைக்கப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா நாளை (11-ந்தேதி, வெள் ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகி–றது.

    இதனை மதுரை ராஜஸ் தான் மெட்டல்ஸ் அதிபர் அரவிந்த் குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். உயர்தர சைவ உணவமாக உருவெடுக்கும் இந்த புதிய ஓட்டலில் டீ, காபி, ஸ்நாக்ஸ் வகைகளும் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தரமான மற்றும் சுகாதார முறையில் சுவைக்கு புதிய அத்தியாயம் வகுக்கும் வகையில் உணவு–களை தயாரித்து வழங்க ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகத் தினர் தயாராகி வருகி–றார்கள்.

    திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சமுத்திரம், தாமரை செல்வி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    ×