என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நினைவு கூட்டரங்கம் திறப்பு
- ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நினைவு கூட்டரங்கம் திறக்கப்பட்டது
- ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்திறந்துவைத்தார்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கூட்டம் அரங்கமும் புணர மைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கூட்டம் அரங்கத்தையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ.க. சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம் ஆகியவற்றை, ஒன்றிய குழு தலைவர் கே.பி.என்.ரவிசங்கர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி), ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், ஜெயங்கொ ண்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் தன .சேகர், .மணிமாறன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






