search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிகாட்டி பலகை"

    • உசிலம்பட்டி அருகே வழிகாட்டி பலகை திறப்பு விழா நடந்தது.
    • பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க விழாவினை முன்னிட்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பள்ளி வழிகாட்டு பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவி சித்ரா துணைத் தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் செல்லம், கட்சி நிர்வாகிகள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அழகுமாரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை குருநாதன் செய்திருந்தார்.

    • ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்த வேண்டும்.
    • ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஆன்மிக புனித தலமாகவும் திகழ்கி–றது. மேலும் ஏர்வாடி, உத்தர–கோசமங்கை, திருப்புல்லாணி, தேவி பட்டினம் உள் ளிட்ட தலங்களுக்கு அனைத்து மாநிலத்தவர்கள் அதிக–ளவில் வந்து செல்கின் றனர். இவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஊர்களின் பெயர், கி.மீ. கொண்ட வழிகாட்டி பெயர் பலகை–கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சிக்னல் போஸ்ட்டில் வைக்கப்பட் டுள்ளது. இப்படி வைத் துள்ள பெயர் பலகையை முறையாக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்ப–தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் பல இடங்களில் ரோட்டின் நடுவே சேதம–டைந்து தொங்குகின்றன. அதிக காற்று வீசும் போது அறுந்து வாகன ஓட்டிகளின் தலையில் விழும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம்-மதுரை ரோடு இ.சி.ஆர்., சுற்றுச்சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை அறுந்து தொங்கு–வதால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கின்றனர்.

    எனவே தேசிய நெடுஞ் சாலை துறையினர் உடன–டியாக ஆபத்தான பெயர் பலகையை அகற்றி முறை–யாக பாராமரிக்க பொது–மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×